Wednesday, 16 July 2014

10 பெரிய சவால்கள்
புதிய பரிதி

அடுத்த பத்தாண்டுகளில் உலகம் சந்திக்கவிருக்கும் சவால்கள் என்று உலகப் பொருளாதார மன்றம் சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவைப் பாதிக்கக் கூடிய சவால்கள் எவை?

டுத்த பத்தாண்டுகளில் உலகம் சந்திக்கவிருக்கும் சவால்கள் என்று உலகப் பொருளாதார மன்றம் (world economic forum) சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. சவால்கள் என்கிற பதம் கொஞ்சம் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. சவால்கள் என்றால் அதைச் சந்தித்து முறியடிக்க முடியும் என்று அர்த்தம். ஆனால் வருத்தத்துக்கு உரிய விஷயம் நாம் சந்திக்கத் தயாராகவே இல்லை என்பதே.

அறுபது பக்க அறிக்கையில் முக்கிய பத்து  சவால்கள் என்ன என்று வேர்ல்டு எகனாமிக் ஃபாரமே வரிசைப்படுத்தி இன்னொரு துணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவற்றில் பல இந்தியாவையும் பாதிக்கும் தன்மை கொண்டவை.  அவை என்ன?

1. அனைத்து நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி
அடுத்த பத்து ஆண்டுகளில் உலகம் முழுக்க பெரிய பொருளாதார வீழ்ச்சி இருக்கும் என்கிறது அறிக்கை. இன்றைய நிலையில் இந்தியா உட்பட எல்லா வளரும் நாடுகளின் பொருளாதாரமும் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தைச் சார்ந்தே இயங்குகின்றன. 1990-களுக்குப் பிறகு நமது பொருளாதாரம் வளர்ந்த நாடுகளாகிய அமெரிக்கா, ரஷ்யாவைச் சார்ந்து இருக்க நேரிட்டது.

அது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அதிகமாக அமெரிக்கா நோக்கி  சாய்ந்தது. 2008-இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இந்தியாவைப் பாதிக்கவில்லை என்று அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி கொடுத்தாலும் விலைவாசி திடீரென ஏறியது. அப்போது வேலை இழந்த ஐ.டி. மற்றும் பி.பி.ஓ. தொழிலாளர்கள் பலருக்கு இன்றும் வேலை கிடைக்கவில்லை .

புதிய அரசும் வெளிநாட்டு மூலதனத்தை இந்தியாவிற்குள் கொண்டுவருவதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்தலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறது. இந்த வெளிநாட்டு முதலீடுகள் உள்நாட்டு தொழிலதிபர்களை கண்டிப்பாகப் பாதிக்கும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் இந்த முதலீடுகள் நிலையாக இங்கேயே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் இந்தியா அந்த கம்பெனிகளிடம் இருந்து பெறவில்லை.

வேறு ஓர் இடத்தில் அதிக லாபம் கிடைக்கும் பட்சத்தில் இந்த முதலீடுகள் அங்கே செல்லலாம். அப்போது இந்த முதலீடுகளை பெருமளவு நம்பியிருக்கும் இந்தியப் பொருளாதாரம் சரியும். அமெரிக்காவில் மழை பெய்தால் இந்தியாவில் ஜலதோஷம் பிடிக்கும் நிலையை மாற்றி உள்நாட்டு உற்பத்திகளைப் பெருக்கினால் மட்டுமே பொருளாதார வீழ்ச்சியைத் தவிர்க்க முடியும்.

2. வேலையின்மை அதிகரிக்கும்
வேலை என்பது என்ன? சமூகம் மேம்பட அல்லது தொடர்ந்து இயங்க, தனிமனிதன் தனது சேவையை அளித்து  தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுதல் என்பதுதான் வேலை (employment). அதன்படி மக்கள் தொகை அதிகமாக அதிகமாக அந்த மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவையும் அதிகமாக வேண்டும்.

அதாவது வேலையும் அதிகமாக வேண்டும். ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்த அளவுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை.  2012 -ஆம் ஆண்டு 8.5 சதவிகிதமாக இருந்த வேலையற்றோர் எண்ணிக்கை 2013-ஆம் ஆண்டு 8.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.  இதில் தினக்கூலிகள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேலையற்றவர்களுக்கு நிகராக தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கையும் அடுத்த பத்தாண்டுகளில் அதிகரிக்கும் என்கிறது அறிக்கை.

நாட்டின் /சமூகத்தின் தேவைகளை அறிந்து அதற்கேற்ற படிப்புகளில் சேராதது இதன் முக்கியக் காரணி ஆகிறது. உதாரணத்திற்கு இந்தியா ஒரு வருடத்திற்கு உலகத்திற்குத் தேவையான மொத்த என்ஜினீயர்களையும்  உற்பத்தி செய்கிறது என்கிறது நாஸ்காம் நிறுவனம். படித்து முடித்து வெளிவரும் என்ஜினீயர்களில் வெறும் இருபது சதவிகிதம் பேர் மட்டுமே வேலைக்குத் தகுதியானவர்கள் என்றும் மொத்தம் நாற்பது சதவிகிதத்தினர் மட்டுமே பொறியியல் துறையில் வேலைக்குச் சேர்கிறார்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. மீதி அறுபது சதவிகிதத்தினர் வேறு வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் சாதாரண டிகிரி படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

3. நீர்ச் சிக்கல்கள்
மூன்றாவது உலகப் போர் ஒன்று நடக்குமானால் அது தண்ணீருக்குத்தான் என்பது திண்ணம். வளர்ந்த நாடுகள் நீரின் அவசியத்தை உணர்ந்து செயல்பட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகின்றன. நம்மில் மறை நீர் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரியவாய்ப்பில்லை. ஜான் ஆண்டனி ஆலன் என்கிற இங்கிலாந்துக்காரர்தான் மறை நீர் பற்றி விளக்குகிறார்.

ஒரு மெட்ரிக் டன் கோதுமையை விளைவிக்க 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால் ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்தால் 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீர் மிச்சம். ஆனால் அந்த நீர் நமக்குத் தெரிவதில்லை. மறைந்திருக்கிறது. ஆகவே அது மறை நீர்.

வெளிநாட்டு கம்பெனிகள்  காரை இந்தியாவில் உற்பத்தி செய்து அதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது இதனால்தான் ( 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கு நான்கு லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை). இதே போல் அதிக நீர் தேவைப்படும்  தோல் பொருட்கள், துணிகள், சாயங்கள் போன்றவற்றை இந்தியா போன்ற நாடுகளில் சுமத்துகின்றன வளர்ந்த நாடுகள்.

நாமும் வெளிநாட்டு மூலதனம், அந்நியச் செலாவணி என்றெல்லாம் சொல்லி நமது நீர்வளத்தை நமக்குத் தெரியாமலேயே இழந்து வருகிறோம். அதிக மறை நீர் தேவைப்படும் பொருட்களின் உற்பத்தியைப் படிப்படியாகக் குறைத்தால் மட்டுமே நமது நீர்வளத்தைக் காப்பாற்ற முடியும்.

இது தவிர்த்து, தற்போது பெருநகரங்களின் பெரும்பாலான வீடுகள் கேன் வாட்டர்களுக்கு மாறிவிட்டன. அது அனைத்தும் தனியாருடையது. சமீபத்தில் கேன் வாட்டர் முதலாளிகள் அறிவித்த ஸ்டிரைக்கால் முப்பது ரூபாய் கேன் நூறு ரூபாய் வரை சென்றது. தனியார்களுக்கு  தாரைவார்க்கப்படும் நீர்வளம் பின்னாளில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.       

4. தனிமனித வருமான வித்தியாசங்கள்
‘சிவாஜி’ படத்தில் ரஜினி சொல்லும் ‘பணக்காரன் இன்னும் பணக்காரனாயிட்டே இருக்கான். ஏழை இன்னும் ஏழையாகிட்டே இருக்கான்’ என்பதைத்தான் அறிக்கையும் சொல்கிறது. உலகம் முழுக்க இது நடந்து கொண்டிருந்தாலும் இந்தியாவில் வேகமாக நடந்து வருவதாக  சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பன்னிரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது.

இதைக்கொண்டு இந்தியாவின் மொத்த வறுமையை இருமுறை ஒழிக்க முடியும் என்கிறது. தற்போது இந்திய அரசாங்கம் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பெயரை வாங்க முயற்சி செய்து வருகிறது. கறுப்புப் பணம் இருக்கும்  வங்கிகளில் சுவிஸ் நாலாவது இடத்தில் இருப்பதையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுவிஸ் வங்கியில் இருந்து அதிகளவு பணம் முதலிடத்தில் உள்ள ஐரோப்பிய சென்ட்ரல் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளதையும் கவனிக்கவேண்டும்.

எதுவுமே செய்யாததற்கு சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணங்களை வெளிக்கொண்டு வருவது நல்ல விஷயம் என்றாலும் அதுவே மொத்த கறுப்புப் பணம் என்று நினைக்கக்கூடாது. உலகில் உள்ள அனைத்து வங்கிகளிலும் அதிகளவு பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை வாங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. பருவநிலை மாற்றங்கள்
முன்பெல்லாம் ஆடியில் காத்தடிக்கும். ஐப்பசியில் மழையடிக்கும். இப்போது அந்த வரைமுறைகளை எல்லாம் இயற்கை கடந்துவிட்டது. அக்னி
நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் வெளுத்துகிறது. காரணம் அனைவருக்கும் தெரிந்தது, குறைந்து வரும் மரங்களும் அதிகரித்து வரும் வாகனங்களும்தான். ஆனால்  தொடர்ந்து பல சாக்குகளைச் சொல்லி மரங்களை வெட்டிக் கொண்டும் வாகனங்களைப் பெருக்கிக்கொண்டும் இருக்கிறோம்.

பெருநகரங்களில் மரங்களைவிட வாகனங்கள் அதிகமாகிவிட்டன. அப்படியே மரம் நட்டாலும் அது மண்ணுக்கும் அந்தச் சூழலுக்கும் ஏற்றதா என்று தெரியாமல் நட்டுக் கொண்டிருக்கிறோம். அவை பெரும்பாலும் முறையான பராமரிப்பு இன்றி செத்துவிடுகின்றன. இந்தச் சிக்கலை அரசும் மக்களும் இணைந்து தீர்க்கவேண்டும்.

6. இயற்கைச் சீற்றங்கள்
இயற்கைச் சீற்றங்கள் என்பது நூறாண்டுக்கு ஒரு முறை மட்டுமே பெருமளவில் நடக்கும். ஆனால் தற்போது அடிக்கடி நிகழ்கிறது. உத்தரகாண்ட்டில் நடந்த பெருவெள்ளத்திற்குப் பிறகு கடந்த வாரம்  அசாமில் ஒரு பெரிய வெள்ளம் வந்திருக்கிறது. உண்மையான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் அது இயற்கையின் சீற்றமல்ல. இயல்புக்கு மாறாய் இருந்த இயற்கை மீண்டும் தன்னுடைய இயல்புக்குத் திரும்பி இருக்கிறது என்று தெரியும்.

மேற்சொன்ன இரண்டு  பாதிக்கப்பட்ட பகுதிகளும் ஆறுகளின் பாதைகளாக இருந்திருக்கின்றன. அதன் பாதையை மனிதன் ஆக்கிரமித்துக் கொண்டால் எவ்வளவு நாள் பொறுக்கும். தற்போது சென்னையில் பல ஏரிகள் குடியிருப்புப் பகுதிகளாக இருக்கின்றன.  

சிறுமழை பெய்தால் கூட நாம் நீச்சலடிக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்க அதுவே காரணம். அது தண்ணீரின் இடம்.  அங்கே போய் நாம் குடிபுகுந்துகொண்டு தண்ணீர் வீட்டுக்குள் வந்துவிட்டது என்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். தண்ணீர் வேண்டும் என்று டீப் போர் போடுகிறோம். பாசில் வாட்டர் (டைனோசர் காலத்தில் அதோடு மண்ணுக்குள் போன நீர்) வரை உறிஞ்சிக்கொள்கிறோம்.

பல ஆண்டுகாலமாக இறுகி இருக்கும் பாறைகளை உசுப்பிவிட்டு நில நடுக்கம் வருகிறது என்று கூச்சல் இடுகிறோம். இயற்கையோடு இயைந்து போகாதவை எல்லாம் இல்லாமல் போகும் என்பதை மனதில் கொண்டு செயல்படவேண்டிய நேரம் இது.  

7. உலகளவில் அரசுகளின் தோல்வி
அரசு என்பது மக்களின் முதலாளி அல்ல, மக்களின் சேவகன். மக்கள் தங்களது தேவைகளைப் பெற்று நலமுடன் வாழ வழி செய்யும் அமைப்பு. ஆனால் பெரும்பான்மை அரசு மக்களை அப்படிக் கருதுவதில்லை. அப்படிக் கருதினாலும் அவர்களால் மக்களுக்கு நன்மை செய்ய முடியவில்லை. அதற்கு பொருளாதாரக் காரணிகள், அரசுக் காரணிகள், கலாச்சாரக் காரணிகள், அண்டைநாடுகளின் உறவு என்று பல காரணிகள் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட சிலரின் லாபத்திற்காக உழைக்கும் கருவியாக அரசு மாறிப் போகின்றன. ஏட்டளவில் இருக்கும் மக்களுக்காக, மக்களே, மக்களால் என்கிற தத்துவம் நடைமுறைப்படுத்தப்படும்போது இந்தத் தோல்வி தூக்கி எறியப்படும்.

8. உணவுச் சிக்கல்கள்
இந்தியா ஒரு விவசாய நாடு. பல விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருக்கிறது. அதே சமயம் இந்தியாவில் இரவு  உணவு இல்லாமல் படுக்கைக்குச் செல்வோரின் எண்ணிக்கை முப்பது சதவிகிதம் என்பது எவ்வளவு துயரத்திற்குரியது. உணவு கிடைக்காமல் இருப்பது கொடுமை என்றால் கிடைத்த உணவு நச்சுத்தன்மையுடன் இருக்கிறது.

பசுமைப் புரட்சிக்காக பல செயற்கை உரங்களை இந்தியா கைக்கொண்டது. அமோக விளைச்சலுக்குப் பிறகு பெரிய பஞ்சம் வந்து சேர்ந்தது என்பது வரலாறு. அன்று கைக்கொண்ட ரசாயன உரங்களை இன்றும் பயன்படுத்தி வருகிறோம். பல நாடுகளில் ஆபத்தானவை என்று கருதப்பட்ட உரங்கள் இங்கே சாதாரணமாகக் கிடைக்கின்றன. அதிகளவு பூச்சிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் இந்தியப் பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்திருக்கிறது.

அதைத்தான் நாம் நமது குழந்தைகளுக்கு சத்து என்று சொல்லி சாப்பிடக் கொடுக்கிறோம். பெரிய இயற்கைப் பாரம்பரியம் உள்ள இந்தியா தனது மண்ணின் விவசாயத்திற்குத் திரும்புவதே இதற்குத் தீர்வு.

9. வங்கி முதலிய பொருளாதார நிறுவனங்களின் வீழ்ச்சிகள்
அமெரிக்காவின் பெரிய பெரிய வங்கிகள் 2008 வீழ்ச்சியின்போது  திவாலாகின. அந்த நிலை இந்தியாவிற்கு வருவதற்கு வெகு தூரம் இல்லை. நம் நாட்டில் கிட்டதட்ட அனைத்து வங்கிகளும் கடன் தருவதற்கும் கிரெடிட் கார்டு தருவதற்கும் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றன.

நமக்குத் தேவை இல்லை என்றால் கூட அலைபேசியில் அழைத்து கடன் வாங்கச் சொல்லிக் கெஞ்சுகின்றன. ஒரு  வங்கி, கடன் தருவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றால் அது நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். லாபத்தில் இயங்கும் வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்காது. நல்ல தரமான காய்கறிகளை உடைய ஒரு வியாபாரி குறைந்த விலைக்குத் தரமாட்டார் என்கிற அளவில் இதைப் புரிந்துகொள்ளலாம்.

இது தவிர்த்து இந்திய அரசு வங்கிகளில் மொத்தம் மூன்று லட்சம் கோடி வாராக்கடனாக இருக்கிறது. இதில் ஐம்பது சதவிகிதத்திற்குமேல் பெரிய நிறுவனங்கள் (கிங்ஃபிசர் நிறுவனம் மட்டுமே சுமார் 2,500 கோடி) வாங்கிய கடன்கள். சாமானியர்களின் கல்விக் கடன்களையும் வீட்டுக் கடன்களையும் மட்டுமே நெருக்கும் அரசு இந்தப் பெரிய நிறுவனங்களை நெருக்குவதில்லை. இந்த வாராக்கடன்களை முறைப்படுத்தினாலே இந்திய வங்கிகள் இருபது ஆண்டுக்கு ஸ்திரமாக நிற்கும்.

10. அரசியல் மற்றும் சமூக நிலையாமை
உலகம் அனைத்தும் ஒரே குடையின்கீழ் வந்து கொண்டிருக்கும் காலம் இது. அனைத்து அறிவும் மக்கள் முன் திறந்து கிடக்கின்றன. அதன் விளைவாக மக்கள் தாங்கள் எந்த விஷயங்களில் எல்லாம் பின்தங்கியுள்ளோம் என்று எளிதாகத் தெரிந்துகொள்கிறார்கள். இது மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே உள்ள நம்பிக்கைகளைக் குறைக்கிறது. இதுவரை அவர்கள் பின்பற்றிவந்த அனைத்தின் மீதும் கேள்வி எழுப்புகிறார்கள்.

இது உச்சத்தை அடையும்போது உள்நாட்டுப் போர்,  கலவரங்கள் எல்லாம் உருவாகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை பெரிய உள்நாட்டு யுத்தம் என்று எதுவும் நடந்ததில்லை. பலவகையாய் பிரிந்திருக்கும் இந்தியா அமைதியாக இருப்பதில் பல நாடுகளுக்கு ஆச்சரியம் இருக்கிறது. இந்தியா தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களையும், மொழிகளையும், இனங்களையும், மதங்களையும் சமமாக நடத்தவேண்டும்.

இந்தித் திணிப்பைக் கைவிடவேண்டும், கிழக்கு மாநிலங்களுக்கு அதிக கவனம் செலுத்தவேண்டும். எல்லோரும் இந்தியர்கள் என்பதை மனதார உணரவேண்டும்.
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
இந்த பாடல் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இப்பாடல் ஒரு இரத்தசாட்சி தன் மரண தருவாயில் இயற்றிய பாடல் ஆகும். எத்தகைய பாடுகளும் கிறிஸ்துவின் அன்பை விட்டு தன்னை பிரிக்க முடியாது என்ற தைரியத்துடன் விசுவாசத்துக்காக வாழ்ந்து மரித்த ஒருவரின் கதை இது.
சுமார் 150 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து ஜெர்மனி போன்ற தேசங்களிலிருந்து இந்தியாவிற்கு நற்செய்திப் பணிக்காக பலர் வந்தனர். அவர்களில் வெல்ஷ் தேச மிஷனெரி ஒருவர் வடகிழக்கு இந்தியாவில் ஒரு கிராமத்தில் இரு பிள்ளைகளடங்கிய ஒரு சிறிய குடும்பத்தை ஆண்டவருகாக ஆதாயப்படுத்தினார். கிறிஸ்தவராக மாறிய அந்த மனிதனின் விசுவாசம் அந்த கிராமத்திலுள்ள மற்றவர்களையுயும் அசைத்தது. இதனால் கோபமடைந்த அந்த கிராமத்தலைவர் எந்த கிராமத்திலுள்ளவர்கள் எல்லாரையும், அந்தக் கிறிஸ்தக் குடும்பத்தையும் கூட்டி " நீங்கள் எல்லாருக்கும் முன்பாக உங்கள் விசுவாசத்தை விட்டு விலகுங்கள்- இல்லையெனில் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் " என் எச்சரித்தான். அச்சமயத்தில் பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு அந்த மனிதன் ஒரு பாடலை பாடினார்,
இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன் * I have decided to follow Jesus
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் * No trning back No turuning back
இதனால் கடுங்கோபமுற்ற அந்தக் கிராமத்தலைவன் அந்தக் கிறிஸ்தவனின் இரு பையன்களையும் கொல்லுமாறு தன் வில்வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அந்த இரு சிறுவர்களும் வில் அம்பினால் குத்தப்பட்டு கீழே விழுந்து கிடக்கையில்,அந்த கிராமத்தலைவன் அக்கிறிஸ்தவனை நோக்கி,"இப்போதாவது நீ உன் விசுவாசத்தை விட்டு விட மாட்டாயா? பார் உன் இரு பையன்களும் நீ இழந்து விட்டாய். நீ உன் விசுவாசத்தை விட்டு விலகா விட்டால் நீ உன் மனைவியையும் இழந்து விடுவாய்" என கர்ஜித்தான்.அப்போது அந்த மனிதன்,
யாரில்லயெனினும் பின் தொடர்வேனே * Though no one joins me still i will follow
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் * No turning back No turning back என்று பாடினார்.
கடுங்கோபமுற்ற கிராமத்தலைவன் அவனுடைய மனைவியையும் கொல்ல உத்தரவிட்டான். ஒரு சில நிமிடங்களில் அவனுடைய மனைவியும் தன் இரு பிள்ளைகளைச் சாவில் சந்தித்தாள். கடைசியாக அந்த கிராமத்தலைவன், " நீ உயிர் பிழைப்பதற்கு ஒரு கடைசி தருணம் தருகிறேன், இப்போது இந்த உலகத்தில் உனக்கென்று யாருமே இல்லை. என்ன சொல்கிறாய்?" என்று வினவினான். அந்த கிறிஸ்தவ மனிதன் காலத்தால் அழியாத கடைசி கவியைப் பாடினான்:
"சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே * The Cross before me The World behind me
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் * No turning back No turning back
இந்த மனிதனுடைய மரணத்தோடு கிறிஸ்தவம், நம் கிராமத்தில் ஒழிந்து விடும் என்று அக்கிராமத்திலுள்ள எல்லாரும் நினைத்தனர். ஆனால் அந்த மனிதனின் மரணம் ஒரு துவக்கமே. பரிசுத்த ஆவியானவர் அங்குள்ளவர்களின் மனதில் கிரியை செய்தார். இந்த மனிதன்,அவனுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் 2000 வருடங்களுக்கு முன் வேறொரு தேசத்தில் வாழ்ந்து மரித்த ஒரு மனிதனுக்காக ஏன் மரிக்கவேண்டும்?" என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்ட அந்தக் கிராமத்தலைவன், " அந்தக் குடும்பத்தினரிடம் ஏதோ ஒரு இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத சக்தி இருந்திருக்க வேண்டும். நானும் அந்த அற்புதத்தை பெற விரும்புகிறேன்" என்று தன் மனதில் நினைத்தான்.
உடனடியாக தன் விசுவாசத்தை அறிக்கையிட்ட அந்த கிராமத்தலைவன், " நானும் கிறிஸ்துவைச் சேர்ந்தவன் தான்" என்று கூறினான். தங்கள் தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட அந்த கிராமத்தவர்கள் அனைவரும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்.
இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன் (மூன்று முறை) பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் யாரில்லயெனினும் பின் தொடர்வேனே (மூன்று முறை) பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே (மூன்று முறை) பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக!
Courtesy: விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
www.vvministry.com

MONDAY, JULY 07, 2014

ராஜாவின் வேலையைத் துரிதமாய் செய்யவேண்டும்

மத்தேயு 2:13 ல் வரும் காட்சி: தேவதூதன் தூங்கும் யோசேப்பிடம்கனவில் வந்து குழந்தை இயேசுவுடன்மனைவி மரியாளையும்கூட்டிகொண்டு துரிதமாய் எகிப்துக்கு பயணிக்கும்படிச் சொல்கிறான்.



தாவீது அகிமெலக்கைப் பார்த்து "ராஜாவின் வேலையை துரிதமாய் செய்யவேண்டும். இங்கு ஏதாவது ஈட்டியாவதுபட்டயமாவது இருக்கிறதாஎனக்கு அவசரமாக தேவைப்படுகிறது"என்றான். (1சாமு 21:8).


இங்கு தாவீதுஅகிமெலேக் என்ற ஆசாரியனிடம்  ஒரு அப்பட்டமான பொய்  சொல்லுகிறான்.   ஆபத்திற்கு பொய் தப்பில்லை என்று உலகமக்கள் கூறினாலும் பொய் என்பது பொய்தான். அது உண்மையாக மாறமுடியாது. இருப்பினும் சில சமயங்களில் இப்படிப்பட்ட பொய்களில்கூட சில நடைமுறை சத்தியங்கள் அடங்கியிருக்கிறது என்ற உண்மைதான் நமது மனித வாழ்க்கையில் புரியாத புதிராக இருக்கிறது. இந்த இடத்தில் தாவீது யாருமே இல்லாத ஒரு அனாதையாக காட்சியளிக்கிறார்இந்த உலகத்தில் நட்பிற்கு ஒரு இலக்கணமாக விளங்கிய தாவீது - யோனத்தான் நட்பும்கூட இங்கு உதவ முடியவில்லை. தாவீதும்,யோனத்தானும் கடைசியாக சந்தித்தபின்பு அந்த நண்பர்கள் பிரிவதை வேதம் இப்படி விளக்குகிறது. "இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துஆசை தீர அழுதுவிட்டு -யோனத்தான் தன் அப்பாவின் அரண்மனைக்குப்போனான். தாவீது எழுந்துபோனான்". (20:41-43).

தாவீது எழுந்து எங்கே போனான்கால்போன போக்கிலே போயிருப்பான். எதிர்காலத்தில் அரசனாகப் போகிறவன் இன்று அனாதையாக இருக்கிறான்.ஆண்டவரின் அணுகுமுறைகள் - தனது பிள்ளைகளை பயிற்சிக்கும்முறை     சிலசமயம் கொடுமையாக - கடுமையாக - Cruel ஆக இருக்கிறது.  கனவில் நடப்பதுபோல கால்போன திசையில் நடந்துபோகையில் - அகிமெலேக் என்ற ஆசாரியர் தாவீதின் நினைவிற்கு வந்தார். தேசத்தின் ஹீரோவாக இருந்த தாவீதை இப்பொழுது தேசதுரோகி என்ற பட்டத்தை சவுல் ராஜா அவனுக்கு சூட்டிவிட்டார். இந்த சூழ்நிலையில் ராஜாவுக்கு எதிரியானவனை நாட்டின் எந்த மூலைக்கு போனாலும் யாரும் தாவீதை தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு ரகசியம். இப்படிப்பட்ட ஒருஇக்கட்டான சூழ்நிலையில்தான் அகிமெலேக் என்ற ஆசாரியனிடத்தில்போய் தஞ்சம்புகுந்து - பல நாட்களாக சாப்பிடாமல் இருந்த அவன் சாப்பிட ஏதாவது இருக்கிறதாஎன்று அவன் கேட்க - உண்மையிலேயே அந்த ஆசாரியனிடத்தில் சாப்பாடு இல்லை. பலிபீடத்தில் படைக்கப்பட்டதில் மிச்சமிருந்தது  ஆசாரியர்கள்மட்டும் சாப்பிடும் அப்பம் ஆகும். அதை மற்றவர்கள் சாப்பிடக்கூடாது. அதாவது இன்றைய பாஷையில் இராபோஜனத்திற்கு பலிபீடத்தில் - வைக்கப்பட்டிருக்கும் அப்பம் மாத்திரமே இருக்கிறது. அதை தாவீது சாப்பிட்டு தனது பசியை ஆற்றிக்கொண்டான். இப்படிப்பட்ட சூழலில் தாவீது கீழே தரப்பட்டுள்ள வார்த்தைகளை சொல்கிறான்.

"ராஜாவின் வேலையை துரிதமாக செய்யவேண்டும்".

இந்த வார்த்தைகளைத்தான் நாம் இப்பொழுது சிந்திக்கப்போகிறோம். ராஜாவாகிய ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிற பணியை சீக்கிரமாக நாம் செய்துமுடிக்கவேண்டும்.

மனித வாழ்க்கையில் செய்யவேண்டிய காரியங்களை - செய்து முடிப்பது ஓர் அரிய செயல். ஆனால் அந்த காரியத்தை செய்யவேண்டிய காலகட்டத்திற்குள் செய்து முடிப்பது அதைக்காட்டிலும் அரிய பெரிய செயலாகும். காலதாமதமாகஒரு காரியத்தை ஏனோதானோ என்று செய்து கடைசி நேரத்தில் காலம் கடந்துசெய்து முடிப்பதில் பிரயோசனமில்லை. Delayed Justice is Injustice. காலதாமதமாக கொடுக்கப்படும் நீதி - அநீதி என்ற வாசகம் - நீதித்துறைக்கு மாத்திரமல்லநமது மனித வாழ்க்கைக்கும் அது சாலப்பொருந்தும். 15 ஆண்டுகள் வழக்கு விசாரிக்கப்பட்டு, 15 ஆண்டுகள் விசாரணை என்ற பெயரில் சிறை வாழ்க்கை சிறைவாசம் அனுபவித்த ஒரு மனிதனுக்கு நீதிமன்றம் காலம்கடந்து இவர் குற்றம் செய்யவில்லை என்று ஒருதீர்ப்பு வழங்குவதில் என்ன பிரயோஜனம்ஆம்! அநீதி பாவத்தைக்காட்டிலும் பாவமானசெயல் என்பதை நாம் மறக்கக்கூடாது. இப்படி குற்றம் செய்யாத லட்சக்கணக்கான நிரபராதிகள் தீர்ப்பு வழங்கப்படாமல் விசாரணை கைதிகளாக சிறையில் தண்டனை அனுபவிப்பது என்ன கொடுமை. வாழவேண்டிய நாட்களை குற்றம் செய்யாமல் சிறையில் கழிப்பது எத்தனை கொடுமை. இந்தியாவில் இந்த கொடுமைகள் மிக அதிகம். அரசாங்கம் இதற்கு சீக்கிரம் பரிகாரம் தேடவேண்டும் இது மிக அவசியம். நமது வாழ்க்கையில் நாம் செய்யவேண்டிய வேலையை ஏற்ற சமயத்தில் செய்து முடிப்பதுதான் திறமைஅது பாராட்டப்பட வேண்டியதாகும். எனது சொந்த அனுபவத்தில் நான் கண்ட ஒரு நடைமுறை உண்மையை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளவிரும்புகிறேன்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஒரு வேலையை சூட்டோடு சூடாக நீங்கள் செய்துமுடிக்க தவறும்போது - அதாவது காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளதவறினால் - அந்த வேலையை கொஞ்சம் ஆறப்போட்டால்,அந்த வேலை அப்படியே கிடப்பில் முடங்கி கிடந்துவிடும். சீக்கிரத்தில் அந்த வேலையை முற்றிலுமாக நாம் மறந்துபோய்   விடுவோம். ஒரு முக்கியமான கடிதத்திற்கு பதில் அப்புறம் எழுதிக்கொள்ளலாம் என்று 2, 3 தடவை அதை தள்ளிப்போட்டால்சில நாட்கள் கழித்து அந்த கடிதம் காணாமலேயேபோய்விடும்;. இந்த உண்மையைத் தான் இயேசு நமக்கு இப்படியாக சொல்லுகிறார். "அந்தந்த நாளுக்கு அதன் அதன் பாடுபோதும்" (மத் 6:34). ஒவ்வொருநாளும் நாம் செய்யவேண்டிய பணிகளைநாளைக்கு நாளைக்கு என்று சொல்லி வேலையைத்தள்ளிப்போட்டு வேலையை பளுவாக்கி சில நாட்களின் செய்யவேண்டிய வேலைகளை ஒட்டுமொத்தமாக வைத்து ஒரே நாளில் செய்ய முற்பட்டு Breakdownஆகிவிடாதீர்கள். அந்தந்த நாளிலேயே உங்களது வேலையை அவ்வப்பொழுதே செய்து முடித்துவிட பழகுங்கள்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftவேதபுத்தகத்தில் சில முக்கியமான வேலைகளை உடனேகாலதாமதம் இல்லாமல்,துரிதமாக செய்துமுடிக்கும்படியாக ஆண்டவர் நமக்கு கட்டளையிடுவதை நாம் வாசிக்கலாம். அந்த பணிகள் அனைத்தும் உடனடியாக செய்யப்படவேண்டும். காலதாமதம் உயிருக்கு ஆபத்து. அப்படி துரிதமாக செய்யப்படவேண்டிய பணிகள் என்னென்னஎவைஎவை - என்பதை கீழே கொடுக்கப்பட்ட வேத வசனங்கள் மூலமாக நாம் சிந்திக்கப்போகிறோம்.

1.https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஉன் உயிர் தப்ப வேகமாக ஓடிப்போ (ஆதி 19:22) நமது ஆன்மீக ரட்சிப்பு.
2.https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftகுழந்தையின் உயிரைக் காப்பாற்ற விரைந்து செல். (2 ராஜ 4:24).
3.https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஇயேசுவின் நற்செய்தியை வீதிகளுக்கும்சந்துகளுக்கும் விரைந்து சென்று சொல்லுங்கள் (லூக் 14:21).
4.https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftகர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணவும் அவரைத் தேடவும் விரைந்து செல்வோம் வாருங்கள்(சகா 8:21).
5.https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftகடவுளின் ஆலயத்தை பழுதுபார்க்க பணம் சேகரிக்க விரைந்து செல்லுங்கள். (2 நாளா24:5). மேலே கொடுக்கப்பட்ட குறிப்புகளையும் ஒவ்வொன்றாக சிந்திக்கப்போகிறோம்.

1. உன் உயிர் தப்ப வேகமாக ஓடிப்போ:


அந்த இரண்டு தூதர்களும் லோத்தை நோக்கி, "இந்த பட்டணத்திற்கு வரப்போகும் அழிவிலிருந்து தப்பித்துக்கொள்ளஎழுந்து உன் மனைவிபிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வேகமாக ஒடி தப்பித்துக்கொள்" என்று கூறி அவனை துரிதப்படுத்தினார்கள். (ஆதி 19:14-22).
( இவ்விடம் விட்டு உடனே புறப்படு ....)


1(a).https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftநமது ஆன்மீக இரட்சிப்பு: ராஜாவின் வேலையை நாம் துரிதமாக செய்வதற்கு முன்பு - முதலாவது நாம் துரிதமாக வேகமாக செய்யவேண்டியகாரியம் - நமது ஆன்மீக இரட்சிப்பு. இது இல்லாமல் ராஜாவின் வேலையை செய்யமுடியாது. "என் ஆத்துமா இரட்சிக்கபடாமலேயேநான் ஆண்டவருடைய பணியை நான் செய்துவந்தேன் என்று கூறுவது பெரிய தவறு" என்று எழுதுகிறார் - ஜான் வெஸ்லி. ஆம்! முதலாவது நமது ஆத்துமா இரட்சிக்கப்படவேண்டும். அதற்கு ஆண்டவர் கொடுக்கும் ஆலோசனை - "உன் ஜீவன் தப்ப விரைவாக ஒடுசோதோம் பட்டணத்தின் அழிவிலிருந்து தப்ப வேகமாக ஓடு" இங்கே லோத்து அந்தப் பட்டணத்தைவிட்டு வெளியேற சண்டித்தனம் பண்ணுகிறார். ஏதாவது காரணம் சொல்லிஊரைவிட்டு கிளம்ப காலதாமதம் செய்கிறார். இது ஆபத்தானது.

1. கைக்கடிகாரம் கிடைத்தது - வாழ்க்கை தொலைந்துவிட்டது.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ft25, 30 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மலையில் குன்னூர் பகுதிகளில் வெள்ளமும்,மண்சரிவும் ஏற்பட்டுவிட்டது. எனக்குத்தெரிந்த ஒரு குடும்பத்தின் சோககதையை என்னால் மறக்கமுடியாது. வீட்டிற்குள் தண்ணீர் வந்தபோது அப்படியே வெளியே ஓடியிருந்தால்அந்த மருத்துவக் கல்லூரி மாணவி உயிர் தப்பியிருப்பாள். ஆனால் வீட்டிற்குள் இருந்த தனது கைக்கடிகாரத்தை எடுக்கப்போனவள்அப்படியே சகதியில் சிக்கி மீளமுடியாமல் மாண்டுபோனாள் என்ன பரிதாபம்!. ஒரு சின்ன சபலம் - அந்த கைக்கடிகாரத்தை மீட்கப்போனவள் தன் முழு வாழ்க்கையையும் தொலைத்துவிட்டாள். அதேபோலத்தான்ஆற்றில் மிதந்த பலாபழத்தை எடுக்க - தனது கைக்குழந்தையை ஆற்றங்கரையில் போட்டுவிட்டுபோன ஒரு பெண் - பலாபழத்தை எடுத்துக்கொண்டு கரைக்கு வந்தபோது - கைக்குழந்தை ஆற்றோடு தண்ணீரில் போய்விட்டது. என்ன முட்டாள்தனம். நம் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை அறியவேண்டும்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftலோத்தின் குடும்பத்திற்கும் இதே கதிதான். லோத்தையும் அவனது குடும்பத்தையும் காப்பாற்றும் நோக்கத்திற்காக அந்த இரண்டு தூதர்களும் சோதோம் கொமாரா பட்டணத்திற்கு வந்திருந்தார்கள். அந்த தேவதூதர்கள் இவர்கள்மேல் இரக்கம் பாராட்டி அந்த பட்டணத்திற்கு வந்துக்கொண்டிருந்த அழிவைக் கரைபோட்டுத் தடுத்துக்கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்கள் லோத்தை அழிவிலிருந்து தப்பி ஓடும்படியாக அவசரப்படுத்தினார்கள்.

இதை வாசிக்கிற நாம் ஒவ்வொருவரும் ராஜாவின் வேலையை நாம் துரிதமாக செய்யவேண்டுமானால்முதலாவது நாம் இரட்சிக்கப்படவேண்டும். இந்த உலகிற்கு வரப்போகும் நியாயத்தீர்ப்பிலிருந்தும்அழிவிலிருந்தும் நாம் தப்பி ஓடவேண்டும். இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து அக்கரையில்லாமல் இருந்தீர்களானால்வரவிருக்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கும்தண்டனைக்கும் எப்படி தப்புவீர்கள்என்று எபிரேயு நிருபத்தின் ஆக்கியோன் கேட்கிறார்.
எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவேண்டும் என்றும் சத்தியத்தை அறிகிற அறிவையும் அடைய வேண்டும் என்றும் தேவன் சித்தமுள்ளவராகயிருக்கிறார் - என்று வேத வசனம் போதிக்கிறது.

1(b).https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஉங்கள் இரட்சிப்பை தள்ளிப்போடாதீர்கள் - சாத்தான் மகாநாடு:

 அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதைப்பற்றி விவாதிக்க சாத்தான் மகாநாடு ஒன்று நடந்ததாம். அந்த மகாநாட்டில் மக்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்வதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்ற தலைப்பில் காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருந்ததாம். அங்கே வந்திருந்த ஒவ்வொரு குட்டி பிசாசும் தங்களுக்கு தெரிந்த யோசனைகளை கொடுத்தார்கள். ஒரு பிசாசு, "சாத்தான் ஐயாகப்பலில் பிரயாணம் செய்கிற மிஷனரிகள் - விமானத்தில் பறக்கும் மிஷனரிகள். இவர்கள் அனைவரும் கடலில் புயலை அனுப்பி கப்பலை கவிழ்ப்பேன் - ஆகாயத்தில் விமான விபத்து நடக்கவைப்பேன். மலைவாழ் ஜாதிமக்களும்மிஷனரிகள் இல்லாமல்பிரசங்கிப்பார் இல்லாமல் அழிந்து நரகத்திற்குபோகவேண்டும். என்னுடைய திட்டம் இதுதான் எப்படி?" என்று கேட்டது. அதற்கு சாத்தான்இது நல்லதொரு திட்டமல்லகப்பல் கவிழந்தாலும்விமானம் விழுந்து நொறுங்கினாலும்மற்ற மிஷனரிகள் மலைவாழ் மக்களிடம் தொடர்ந்து செல்வார்கள். இன்னொரு குட்டி பிசாசு, "ஐயாதேவனுக்கு விரோதமாக கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று போதிக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்டால்,கடவுள்மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சின்னாபின்னமாகிவிடும்." கூட்டம் நடக்காதபடிக்கு கலவரத்தை உண்டுபண்ணிவிடுவது - பிரசங்கியார் பிரசங்கம் பண்ணும்போது,அவரது தொண்டையை பிடித்துவிடுவது - இப்படி பல ஆலோசனைகளை பல குட்டிப் பிசாசுகள் கொடுத்தன. ஆனால் சாத்தான் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். கடைசியாக ஒரு குட்டி பிசாசு, "ஐயாஎனக்கு ஒரு சின்ன யோசனை. அநேகர் கூட்டத்திற்கு வரட்டும்,தேவனுடைய செய்தியை கேட்கட்டும். ஆனால் மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள முன்வரும்போதுநான் அவர்களது செவிகளில் நீ இரட்சிக்கப்படவேண்டும்கட்டாயம் இரட்சிக்கப்படவேண்டும். ஆனால் இன்றைக்கு வேண்டாம், இன்னொரு நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் - என்று ஆலோசனை கூறுவேன்" என்றான்உடனே சாத்தான் "சபாஷ். பலே! இதுதான் மிகச்சிறந்த யோசனை. உடனே சென்று இதைசெயல்படுத்துங்கள்" என்று சாத்தான் எல்லா பிசாசுகளுக்கும் கட்டளையிட்டானாம். ஆகவே அருமையான வாசகரே,இரட்சிப்பை தள்ளிப்போடாதே! தாமதப்படுத்தாதே! உடனே மனம்திரும்பு.

பேலிக்ஸ் - அக்ரிப்பா ராஜா:

இதைத்தான் பேலிக்ஸ் ஆளுநர் செய்தார். பவுல் நீதியைக்குறித்தும்நியாயத் தீர்ப்பை குறித்தும்பிரசங்கித்த போதுபயமடைந்து "இப்பொழுது நீ போகலாம்எனக்கு நேரம் கிடைக்கும்போது இன்னொரு நாளைக்கு பார்க்கலாம்" என்று சொல்லி அனுப்பிவிடுகிறான். (அப் 24:25). அதேபோல அகிரிப்பா ராஜாவிடம் பவுல் தனது சாட்சியை சொன்னபோது "நீ என்னை கிறிஸ்துவனாக மாற்றப் பார்க்கிறாயாஎன்னை ஏறக்குறைய பாதிக்கிறிஸ்துவனாக மாற்றிவிட்டாய்?" என்று பதில் கூறுகிறார் (அப் 26:28). அதற்கு பவுல் - "நீர் மாத்திரமல்லஇங்கே இருக்கிற எல்லோரும்பாதிக்கிறிஸ்துவர்களாக அல்லமுழு கிறிஸ்தவர்களாக மாறவேண்டும் - என்பதுதான் என் விருப்பம். எனது வேண்டுகோள்" என்று தைரியமாக பவுல் சொல்கிறான். இந்த வார்த்தைகள் இதை வாசிக்கிற உங்களுக்கும் பொருந்தும். நீங்களும் பாதிக்கிறிஸ்துவர்களாக மட்டுமல்லமுழுக்கிறிஸ்துவர்களாக மாறவேண்டும் என்று பவுல் விரும்புகிறார். இதை எழுதுகிற நானும் விரும்புகிறேன். ஆண்டவரும் அதைத்தான் விரும்புகிறார்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஅந்த தேவதூதர்கள் இன்னும் சில நிமிடங்களில் அக்கினியால் அழியப்போகிற சோதோம் கொமாரா - பட்டணத்தின் வாசல்களில் நின்றுக்கொண்டுலோத்துவைப் பார்த்து ஜீவன் தப்பஇங்கிருந்து ஓடிப்போய்விடு,காலதாமதம் செய்யாதே, உடனே புறப்படு என்று கூறுகிறார்கள்.

ஆம்நாம் வசிக்கும் இந்த பூமியும் ஒரு நாளைக்கு ஆண்டவரது நியாயத் தீர்ப்புக்கு இரையாகப் போகிறது. நாம் வாழ்ந்துகொண்டிருப்பது கடைசி நாள் மாத்திரமல்லகடைசி நாளின் கடைசி மணி நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றே இரட்சண்ய நாள், இப்பொழுதே அனுக்கிரக காலம் என்று வேதம் மனம்திரும்ப நம்மை அறைகூவி அழைக்கிறது. அதை நாம் உதாசீனம் செய்யக் கூடாது. நமது ஆன்மீக இரட்சிப்பு மிகவும் விலைறேப்பெற்றது. அதன் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் பற்றி வேதம் இப்படியாக விளக்குகிறது. "ஒரு மனிதன் உலகம் முழுவதையும் (மகா அலெக்ஸாண்டரைப் போல்) வெற்றிகொண்டு சம்பாதித்தாலும்அவனது மரணத்திற்கு பின்புஅவனது ஆத்துமா பரலோகத்திற்கு போவதற்கு பதிலாக நரகத்திற்கு போகுமானால்அதனால் என்ன பயன்ஒரு பயனும் இல்லை".

வாரமோ, 3மணி நேரமோ தேவையில்லைஇரட்சிக்கப்பட நிமிடம்தான் தேவை.
https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftமரணப்படுக்கையில் - இன்னும் சில மணிநேரத்தில் மரிக்கப்போகும் ஒரு மனிதனிடத்தில்Dr.J.J.கார்டன் என்ற ஊழியர் சென்றாராம். மரணத்தின் விளிம்பில் நிற்கிற மனிதனிடத்தில் அப்படிப்பட்ட நிலையில் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று சற்று தடுமாறினார். இருப்பினும் "ஐயாநீங்க என்ன நிலைமையில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமாஅதை சந்திப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறீர்களா" என்று கேட்டார். அவரது முகத்தில் ஒரு பெரிய விரக்தியும்ஏமாற்றமும் காணப்பட்டது. அதற்கு அவர், "எனக்கு தெரியும் ஐயா! அதுதான் என்னுடைய கவலையும்கூடநான் இன்னும் அல்லது வாரம் உயிரோடு இருந்தால்,என் மரணத்தை சந்திப்பதற்கு என்னை ஆயத்தம் பண்ணுவது எளிதாக இருக்கும். ஆனால் இன்னும் சில மணிநேரத்தில் அதை எப்படி சந்திப்பது என்பதுதான் என் குழப்பம்" என்றான். உடனே அந்த ஊழியர் மரணத்தின் விளிம்பில் நின்றுக்கொண்டிருந்த அவரைப் பார்த்து"ஐயா,உங்கள் ஆண்டவரை சந்திப்பதற்குஉங்கள் ஆத்துமா இரட்சிக்கப்படுவதற்கு - வாரம் தேவையில்லை, 3 மணி நேரமும் தேவையில்லை. உங்களுக்கு தேவை மூன்றே நிமிடங்கள்தான்" - என்று சொல்லிவிட்டு -பைபிளை திறந்து யோவான்1:12, "விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ,அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்". இயேசுவை உங்கள் உள்ளத்தில் விசுவாசித்து ஏற்றுக் கொள்ளுங்கள்,அவ்வளவுதான் இப்போது தேவை. உடனே அந்த நிமிடமே அவரது முகத்தில் ஒரு தெய்வீக அமைதி நிலவியது. அந்த ஆன்மீக அமைதியுடன் சில நிமிடங்களில் அவர் கண்ணை மூடி இந்த உலகத்தைவிட்டு நிம்மதியாக கடந்து சென்று நித்திய ராஜ்ஜியத்திற்குள் நுழைந்தார்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftகோடைகாலம் முடிந்துவிட்டதுஅறுவடை காலமும் கடந்துபோயிற்றுநாமோ இன்னும் இரட்சிக்கப்படவில்லை. (எரே 8:20).

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftகர்த்தரைக்  கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாக இருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். (ஏசா 55:6).

2. குழந்தையின் உயிரைக் காப்பாற்ற காலதாமதம் செய்யாதே:


"கழுதையை வேகமாக ஓட்டிச்செல்யார் சொன்னாலும் நிறுத்தாதேவேகத்தை குறைக்காதே".

"நீ இடுப்பை வரிந்துகட்டிக்கொண்டு போவழியில் யாருக்கும் வணக்கம் செய்யாதே, யாராவது வணக்கம் போட்டாலும்பதில் வணக்கம் போடாதேவிரைந்து போ". (2இராஜ 4:24,29).



https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஇது எலிசாவின் காலத்தில் நடந்த ஒரு சம்பவம். எலிசா தங்குவதற்கு சகல வசதிகளையும் அந்தசூனேமியாள் செய்துகொடுத்தாள். அதற்கு நன்றி செலுத்தும் வகையில் எலிசா ஜெபம் பண்ணிகுழந்தையில்லாமல் இருந்த அந்த பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்தது. அதே குழந்தைத்தான் இப்பொழுது மரித்துவிட்டது, தன் குழந்தை இறந்துவிட்டதே என்று சொல்லிஅழுதுபுலம்பிஊரைக்கூட்டிஆர்ப்பாட்டம் செய்யாமல்இப்பெண்ரொம்பCoolஆகரொம்ப ரொம்ப சாதாரணமாக - இறந்துப்போன அக்குழந்தையை எலிசாவின் படுக்கையில் கிடத்திவிட்டுஅறையைப் பூட்டிவிட்டு - தன் கணவனிடத்தில்கூட குழந்தை இறந்த செய்தியை சொல்லாமல்தன் வேலைக்காரனை அழைத்துக்கொண்டுதன் வாகனத்தில் ஏறிக்கொண்டு - எலிசாவை பார்க்க வந்துகொண்டிருக்கிறாள். என்ன துணிச்சல்! என்ன விசுவாசம்,என்னதொரு ஆணித்தரமானஅசையாத நம்பிக்கை. இறந்துப்போன குழந்தையை எலிசாவின் அறையில் பூட்டிவிட்டுஎலிசாவை நேரில்போய் பார்ப்பதற்கு வந்துகொண்டிருக்கிறாள். வரும் வழியில் தனது உள்உணர்வுகளையும் அந்த அறையிலேயே போட்டு பூட்டிவிட்டதுபோல - போய் கொண்டிருக்கிறாள்.

எலிசாவைப் பார்த்து அவரிடம் விண்ணப்பம் பண்ணினால்நிச்சயமாக அவர் மூலம் இறந்துப்போன தன் மகனை திரும்ப உயிரோடு பெறலாம் என்ற இரு இமயத்தைப்போல உயர்ந்த ஒரு விசுவாசம். இதை எழுதும்போதுஇதே சூழ்நிலையில் இருந்த இன்னொரு தாயின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் என் நினைவிற்கு வருகிறது.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஒரு தாய் தன்மகனுக்காக ஜெபித்துவந்தார்கள். அவன் ஒரு வாலிபனாக வளர்ந்து Armyல் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தான். என்றைக்காவது ஒரு நாள் அவளது மகன் நிச்சயமாக இரட்சிக்கப்பட்டு,நல்ல கிறஸ்துவனாக மாறுவான் என்று ஆண்டவர் அவளுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் திடீரென அவளது தலையில் இடிவிழுந்தாற்போல் - "உன் மகன் இறந்து விட்டான் என்று Army Head Quartersயிடமிருந்து ஒரு தந்தி வந்தது. அந்த தாய்க்கு உலகமே சுக்குநூறாக உடைந்தது. வேகமாக ஓடிதன் ஜெப அறைக்குள் முழங்காற்படியிட்டு அழுதாள். ஆண்டவரிடம் விசாரித்தாள். உம்முடைய வாக்கு பொய்யானதாஉண்மையானதா?பலமணி நேரம் போராடி ஜெபித்தபின்பு ஆண்டவர் தெள்ளத்தெளிவாக அவளோடு பேசினாராம்,என்ன பேசினார்உன் மகன் சாகவில்லை, உயிரோடு இருக்கிறான் என்று உடனே இப்பொழுது என்ன செய்தாள் தெரியுமாஅந்த ராணுவ தலைமையத்திற்கு "என் மகன் சாகவில்லைஅங்கு ஏதோ தவறு நடந்திருக்கிறது" - என்று பதில் கொடுத்தாளாம். என்ன தைரியம்! என்ன விசுவாசம்!.

அடுத்தநாள் அங்கிருந்து ஒரு பதில் வந்ததாம். "இறந்துப்போனது உங்கள் மகன் இல்லை,அதே பெயருடைய இன்னொருவன் இறந்துவிட்டான் - தவறுக்கு மன்னிக்கவும்" என்று பதில் வந்ததாம். ஆம்! இப்படிப்பட்ட விசுவாசம் நமக்கு தேவை. விசுவாசத்தினால் ராஜ்யங்களை வென்றார்கள். நீதியை நடப்பித்தார்கள். கடவுளின் வாக்குத்தத்தங்களை பெற்றார்கள். சிலர் சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள். இறந்துப்போன தமது பிள்ளைகளை சிலர் திரும்ப பெற்றார்கள். (எபி 11:33).

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftசூனேமியாளின் கதைக்கு திரும்புவோம். சூனேமியாள் அவசரமாகபதட்டத்துடன் தன்னை நோக்கி வருவதைக்கண்ட எலிசா - இவளது மகனுக்கு ஆபத்து என்று புரிந்துக்கொண்டார். உடனே தான் போவதற்கு பதிலாக - இந்த இடத்தில் எலிசா தீர்மானம் எடுப்பதில் சற்று தடுமாறி - தனது வேலைக்காரனையும், தனதுகோலையும் அனுப்புகிறான். அதில் எந்த பயனும் இல்லை - என்பதை சூனேமியாள் புரிந்துக்கொண்டு எலிசாவின் காலைப் பிடித்துக்கொண்டு - "நீர்தான் வரவேண்டும், நீர் வராவிட்டால் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்" என்று உடும்புப்பிடியாக பிடிக்கிறாள்.

உடனே எலிசா தன்னிடம் காணப்பட்ட சோம்பலை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு - வேகமாகபுறப்படுகிறார். தன் அறைக்கு வந்தபோது - குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதை காண்கிறார். தாயையும்தன் வேலைக்காரனையும் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு - டாக்டரைப்போல் ஒரு மினி ஆப்ரேஷன் செய்வதுபோல் - மற்றும் முதலுதவி கொடுப்பதுபோல் - பிள்ளையின் உடம்பில் சூடு உண்டாக இவர் பலமுறை பிள்ளையின் மேல்படுத்து வாயில் ஊதி சிகிச்சை செய்கிறார்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஇயேசு எச்சிலை உமிழ்ந்து - தரையில் துப்பி - அதை எடுத்து குருடன் கண்ணில் பூசுவதுபோல் எலிசாவும் செய்வதை நாம் காணமுடிகிறது. பல அற்புதங்களை கண்மூடி திறப்பதற்குள் செய்துமுடித்தஎலிசா இந்த விஷயத்தில்மட்டும் பல கடினமான செயல்களை செய்வதை நாம் கண்கூடாக காணமுடிகிறது. ஆம்! ஆண்டவருடைய அற்புதம் நமது வாழ்க்கையில் நடைபெறும்போது அவை அனைத்தும் ஒரே மாதிரி இராது - ஒவ்வொன்றும் வித்தியாசமான முறையில் இருக்கும். ஒரே மாதிரி நடைபெறவேண்டும் என்று நாம் எதிர்ப்பார்ப்பது நமது தவறு. 

சில அற்புதம் கண்மூடி திறப்பதற்குள் நடந்துவிடும். சில அற்புதம் நடக்க நாம் போராடி ஜெபிக்கவேண்டும்.

எப்படியோ பலமணி நேரம் போராடி ஆண்டவரிடத்தில் விண்ணப்பம் பண்ணி - அந்த குழந்தையை எலிசா உயிரோடு எழுப்பிவிட்டார். தாயை அறைக்குள் அழைத்து உன் மகனை தூக்கிக்கொள் என்று சொன்னபோது அந்த தாயின் முகத்தில் நிலவிய சந்தோஷத்தை யாராலும் விவரிக்க முடியாது. அவ்வளவு மகிழ்ச்சி அந்த தாயின் முகத்தில் பெருக்கெடுத்து ஓடியது. ஓடிப்போய் குழந்தையை தூக்குவதற்கு முன்பு எலிசாவின் காலில் விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினாள்.

இப்படிப்பட்ட அற்புதம் நமது வாழ்க்கையில் நடக்கவேண்டுமானால்நாம் செய்யவேண்டிய சில காரியங்களை காலதாமதம் இல்லாமல் செய்யவேண்டும். துரிதமாய் செயல்பட்ட  காரணத்தினால்தான் அந்த சூனேமியாள் எலிசாவைக்கண்டு அவரிடம் தனது தேவையை சொல்லி நீர் வராமல் இந்த இடத்தை விட்டுபோகமாட்டேன் என்று அடம்பிடித்ததின் நிமித்தம் எலிசா உடனே புறப்பட்டு வந்து அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிந்தது. காலதாமதம் உயிருக்கு ஆபத்து.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ft1984ம் ஆண்டு நமது பாரதப் பிரதமர் இந்திரா காந்தி துப்பாக்கியால் சுடப்பட்டபோது அவர்களை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்ப்பதில் 2, 3 மணி நேரம் காலதாமதமானது. இந்த காலதாமத்தை ஒரு பத்திரிக்கை Lethal Lethargy என்று எழுதினார். அதற்கு மரணத்தை வரவழைத்த காலவிரயம் என்று அர்த்தம் ஆகும்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ft2008ல் நவம்பரில் 26ம் தேதி பம்பாயில் நடந்த தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலை சந்திக்கவந்த NSG என்ற அதிரடிபடை டெல்லியிலிருந்து பம்பாயிக்கு ஏறக்குறைய12 மணி நேரம் காலதாமதமாக வந்து சேர்ந்தது. அந்த தாமதமான இடைவெளியில் பல உயிர்கள் பறிப்போனது.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ft1இராஜ 7ம் அதிகாரத்தில் நான்கு தொழுநோயாளிகளும்அவர்களுக்குள் இவ்வாறு பேசிக்கொண்டார்கள். இன்று நமது நாட்டிற்கு நல்லசெய்தி கிடைத்துள்ளது. நாளைக் காலைக்குள்இச்செய்தியை சொல்லாமல் இருப்போமானால் நம்மேல் குற்றம் சுமத்தப்படும். வாருங்கள் (இன்றேஇப்பொழுதே) நாம் போய் இந்த நல்லசெய்தியை அறிவிப்போம் என்றார்கள். (2இராஜா 7:9) என்ன அற்புதமான அர்ப்பணம்! பொறுப்புணர்வு!!. இதை வாசிக்கிற நீங்களும்நானும்மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால்அதை மனதில் நினைத்துக்கொண்டுகனவு கண்டுகொண்டு உட்காராதீர்கள். உடனே உதவிசெய்ய புறப்பட்டு செல்லுங்கள். காலதாமதமாக செயல்படுவது நல்லதல்ல
.
https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தை வெள்ளித்தகட்டில் வைக்கப்பட்ட பொன் பழத்திற்கு சமானம். அதுபோலவேநாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் உதவியும்கூடஏற்ற சமயத்தில் செய்யப்படவேண்டும். காலதாமதமாக செய்யப்படும் உதவி தேவையற்றதாக போய்விடும் என்பதை மறக்கவேண்டாம். காலதாமதம் செய்வதுபல சமயங்களில் உயிர்சேதத்தில் முடியும். செய்யவேண்டியதை நாம் சீக்கிரமாக செய்ய கற்றுக்கொள்ளவேண்டும். எல்லா காரியங்களையும் ஒரே நேரத்தில் நம்மால் செய்யமுடியாது. ஆனால் எதையாவது ஒன்றை உடனே செய்யுங்கள். சும்மா நேரத்தை வீண்விரையம் செய்யாதீர்கள்.

அடுத்துநாம் என்ன செய்யவேண்டும் என்று அறிந்துகொள்வதுதான் ஞானம். அறிந்துக் கொண்டதைஎவ்வாறு செய்வது என்பது திறமை. ஆனால் அறிந்துக்கொண்டதையும்எப்படி செய்யவேண்டும் என்பதையும் உடனே செய்வதுதான் சமயோசிதம். உருளும் கல்லில்தூசியோ,மண்ணோ எதுவுமே ஒட்டாது. அதுபோலவே துணிந்து செயல்படுபவனும் எதற்கும் அஞ்ச அவசியமில்லைதுணிந்தவனுக்கு துக்கமில்லை. சரியான ஒன்றை செய்வதற்கு தவறான நேரம் எதுவுமே கிடையாது.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஉலகத்தை வென்ற மகா அலெக்ஸாண்டரிடம் உங்களது வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது நான் "எதையுமே தள்ளிப்போடமாட்டேன். உடனே செய்வதுதான் எனது வெற்றியின் இரகசியம்" என்று பதில் கொடுத்தாராம்.

3. இயேசுவின் நற்செய்தியை வீதிகளிலும்சந்து பொந்துகளிலும் விரைந்து சென்று அறிவியுங்கள்:


வீட்டு எஜமான் தனது வேலையாட்களைப் பார்த்து "நீங்கள் நகரின் வீதிகளுக்கும்,சந்துகளுக்கும் விரைந்துசென்று ஏழைஎளியார்கால் ஊனமுற்றோர்பார்வையற்றோர் - எல்லோரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்" (லூக் 14:21) என்றார்.

ராஜாவின் வேலையை நாம் துரிதமாக செய்யவேண்டும் என்ற வார்த்தைக்கு ஆவிக்குரிய அர்த்தமாக நாம் அடுத்து சிந்திக்கப்போவது சுவிசேஷம் என்னும் நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எல்லா நாட்டினருக்கும் அறிவிக்கும் பணி ஆகும். இதை நாம் தீவிரப்படுத்தவேண்டும்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftநாம் வாழும் இந்த உலகத்தில் தற்சமயம் ஏறக்குறைய 700 கோடி மக்கள் 225தேசங்களில்வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதில் 300 கோடி மக்கள் கிறிஸ்துவர்கள் -அதுவும் பெயர் கிறிஸ்துவர்கள். மீதமுள்ள 400 கோடி மக்களுக்கு ஏதாவது ஒருவழியில் நற்செய்தியை மக்கள் ஏற்றுக்கொள்ளவைப்பதும் நமது பொறுப்பல்ல. 
அது ஆண்டவரது செயல்ஆனால் அவர்களுக்கு சுவிசேஷம்அறிவிப்பது நமது தலையாய கடமையாகும். அது ஆண்டவர் நம்மிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பாகும். ரேடியோ மூலம்,டெலிவிஷன் மூலம்பத்திரிக்கைதுண்டுப்பிரதிகள் வாயிலாக எப்படியாவது நற்செய்தியை அவர்களுக்கு அறிவிக்கவேண்டும். மலைகளில் நடந்து செல்லும் நற்செய்தியாளரின் பாதங்கள் எவ்வளவு அழகாய் இருக்கிறது - என்று சுவிசேஷத்தை அறிவிக்கும் மிஷனரிகளின் பாதங்களைப்பற்றி வேதம் அழகாய் விவரிக்கிறது. இந்த உலகத்தில் ஒரு வினாடிக்கு பேர்கள் மரித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த பேர்களும் கிறிஸ்துவற்ற கல்லறைக்குள் போய்கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தியை நீங்கள் வாசிக்க தொடங்கிய நேரம்முதல் இந்த விநாடிவரை சுமார் 15 நிமிடங்கள் கடந்துவிட்டன. இந்த 15 நிமிடங்களில் ஏறக்குறைய நிமிடத்திற்கு 180 பேர்கள் வீதத்தில் 180x15=2700 பேர்கள் மரித்துவிட்டார்கள். இதை வாசிக்கிற நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftசுவிசேஷத்தை நான் மற்றவர்களுக்கு பிரசங்கிக்கவிட்டால் எனக்கு ஐயோ! என்று பவுல் அலறுகிறார். யான் பெற்ற இன்பம் இவ்வையகம் முழுவதும் பரவட்டும் என்று நாம் பாடவேண்டும். சுவிசேஷம் நமது இந்தியாவிற்கு முதல் நூற்றாண்டிலேயே - தோமா மூலமாக வந்துவிட்டது.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஇயேசு உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்கு முதலில் காட்சியளித்தபோது தோமா அங்கு இல்லை. "நான் அவரைப் பார்த்து அவரது விலாவில் என் கையைப்போட்டுஅவரது கால்,கையில் உள்ள காயங்களை தொட்டுப்பார்த்து அவைகளை Verify பண்ணியபிறகுதான் நான் நம்புவேன்" என்று தோமா கூறினார்.

அவரது சந்தேகத்தை தீர்க்கவேண்டித்தான் இரண்டாவது முறையாக உயிர்த்தெழுந்த இயேசு காட்சியளித்தார். அந்த சமயத்தில் தோமாவை அழைத்துஎன் விலாவில் உன் கையைப்போடு என்று சொல்லியபோதுதோமாவின் உள்ளம் சுக்கு நூறாக உடைந்தது. சந்தேகத்தின் உருவகமாக மாறிய தோமாதனது தவறை உணர்ந்துஇதை சரிக்கட்ட (Compansate-பண்ண) ஆண்டவரே நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டிருப்பார். இதை எதிர்ப்பார்த்திருந்த "ஆண்டவர் தோமாவைப்பார்த்து நீ இந்தியாவிற்கு மிஷனரியாகப்போ" என்று கட்டளையிட்டார். அதன் விளைவாகத்தான் தோமா இந்தியாவிற்கு மிஷனரியாக வந்தார். தோமாவுக்குள் ஏற்பட்ட சந்தேக குணம் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்துவிட்டது.

இரண்டாவது முறையாக உயிர்த்தெழுந்த இயேசு தோமாவிற்கு காட்சியளித்தது இந்தியாவிற்காகமட்டுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இயேசு இந்தியாவை நேசிக்கிறார்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஇந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு மிஷனரி என்று உணரவேண்டும். எத்தனையோ வாலிபர்கள் தங்களது வாழ்க்கையை தங்களது வாலிபப் பிராயத்தை மிஷனரி பணிக்காக ஆண்டவரது பணிக்காகவும் அர்ப்பணித்திருக்கிறார்கள்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஇங்கிலாந்து தேசத்தை சேர்ந்த C.T.ஸ்டட் என்ற வாலிபன் நல்ல ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரர். இவர் D.L.மூடியின் பிரசங்கத்தைக் கேட்டு மிஷனரிப் பணிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்தார். தனது அப்பா சொத்தில் கிடைத்த கோடி ரூபாயையும் மிஷனரிப் பணிக்காக கொடுத்தார்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftவில்லியம் கேரி 1791ம் ஆண்டு கல்கத்தாவிற்கு மிஷனரியாக வந்து 32 மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்க்க மூலக்காரணமாக இருந்தார். அது போல ராய்மென்ட் லூல் என்ற மிஷனரி இஸ்லாமிய மக்கள் மத்தியில் பல ஆண்டுகள் மிஷனரியாக பணியாற்றி ஆப்பிரிக்காவில் உள்ள பயூகியா என்ற இடத்தில் 1814ம் ஆண்டு கல்லெறிந்து கொல்லப்பட்டு இரத்தசாட்சியாக மரித்தார்.

மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்திருக்க நம்மை நெருங்கி நிற்கிற பாரத்தையும்பாவத்தையும் தள்ளிவிட்டுமனஉறுதியோடு நமக்கென்று ஆண்டவர் குறித்துள்ள ஓட்டத்தில் ஓடக்கடவோம். (எபி 12:1). "யாரை நான் அனுப்புவேன்நமது பணிக்காக யார் போவார்என்று கேட்கும் ஆண்டவரின் சத்தத்தைக்கேட்டேன். அப்பொழுது ஆண்டவரேஇதோநான் இருக்கிறேன் என்னை அனுப்பும் என்றேன்" (ஏசா 6:8).

4. ஜெபம் பண்ண விரைந்து செல்லுங்கள்:


ஒரு பட்டணத்தின் குடிமக்கள் அருகிலுள்ள மற்றொரு பட்டணத்தின் குடிமக்களை நோக்கி,நாம் கர்த்தருடைய சமூகத்தில் விண்ணப்பம் பண்ணவும்கர்த்தரைத் தேடவும், விரைந்துப்போவோம் வாருங்கள் என்று சொன்னார்கள். சகரி 8:21.

ராஜாவின் வேலையில் நாம் துரிதமாக செய்யவேண்டிய மிகமிக முக்கியமான அவசரமான வேலைகர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணுவதும்அவரைத் தேடுவதும்தான் என்பதை குறிப்பிட்டு சகரியாஎன்ற தீர்க்கதரிசி நாம் ஜெபம் பண்ணவேண்டும் என்ற ஒரு முக்கியமான செய்தியை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஇயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த 33½ ஆண்டுகளில்அவர் பல அற்புதங்களை செய்தார். பலருக்கு சுகம் கொடுத்தார்பிசாசுகளை விரட்டினார். பல பிரசங்கங்களையும் போதனைகளையும் பிரசங்கித்தார். சாப்பிடுவதற்குக்கூட நேரமில்லாமல் ஓடி ஓடி உழைத்தார். ஆனால் இப்படிப்பட்ட Busy Shedule மத்தியிலும் அவர் ஜெபிக்க மாத்திரம் தவறியது கிடையாது. அவர் தேவகுமாரன். அவர் தேவன்இருப்பினும் அவருக்கு அவர் மனுஷனாக பிறந்து வாழ்ந்ததால் ஜெபம் தேவைப்பட்டதுஅந்த ஜெபத்தை அவர் மறக்கவே இல்லை. அதனால்தான் இயேசுவின் சீஷர்கள் அவரிடத்தில் எங்களுக்கு பிரசங்கம் பண்ண கற்றுத்தாரும். அற்புதம் செய்யபிசாசை விரட்டசுகம் கொடுக்ககற்றுத்தாரும் என்று கேட்காமல் ஜெபிக்க கற்றுத்தாரும் என்று கேட்டார்கள். ஊழியத்தின் வெற்றியின் ரகசியம் இயேசுவின் ஜெப வாழ்க்கைதான் என்பதை சீஷர்கள் நன்கு புரிந்துகொண்டார்கள்.

தென் கொரியாவின் எழுப்புதலுக்கு காரணம் - ஜெபம். 

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftநாம் ஜெபிப்பதற்கு விரைந்து செல்லவேண்டும். ஜெபக்கூட்டத்திற்கு மக்கள் விரைந்து கூட்டம் கூட்டமாக செல்வதை தென் கொரியா தேசத்தில் நான் பார்த்திருக்கிறேன். அங்கு காலை மணியிலிருந்து மணிவரை 5000 பேர்கள் கூடிவந்து ஆலயத்தில் ஜெபிப்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். சிறுவர்சிறுமியர்ஆண்கள்பெண்கள்பெரியோர் எல்லோரும் கூடிவந்து ஆலயத்தில் - காலை முதல் மணிவரை அவர்கள் கூடிஜெபிப்பது ஒரு கண்கொள்ளா காட்சியாக ஒரு விசேஷித்த அனுபவமாக எனக்கு இருந்தது. உங்கள் போதகர்களுக்காக ஜெபியுஙகள். உங்கள் குடும்பத்தாருக்காக ஜெபியுங்கள். சபையாருக்காக உங்கள்ஊராருக்காக,நாட்டிற்காக ஜெபியுங்கள். உங்கள் நண்பர்களுக்காக ஜெபியுங்கள். ஜெபகுறிப்புகளை எழுதிவைத்து தொடர்ந்து ஜெபியுங்கள்.

ஒரு வீடு ஆசீர்வதிக்கப்படவேண்டுமானால் அந்த வீட்டில் ஜெபம் ஏறெடுக்கப்படவேண்டும். அந்த ஜெபம் அந்த வீட்டையும் அதில் வாழும் - மக்களையும் பாதுகாக்கும் பாதுகாப்பு கவசமாக மாறும். ஜெபம் இல்லாத வீடு - கூரையில்லாத வீடு என்ற உண்மையினை மறக்கவேண்டாம்.

இரவு 2மணிக்கு எழுந்து கணவருக்காக ஜெபித்த மனைவி:

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ft1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் - ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவுநேரம் ஒரு வயதான அம்மா களைத்துப்போயிந்தார்கள். ஆயினும் திடீரென அந்த அம்மாவின் உள்ளத்தில் ஜெபிக்கவேண்டும் என்றதொரு உள்ளூர பாரம் ஏற்பட்டது. அவரது கணவருக்காக ஜெபிக்கும்படியாக ஒரு இருதய பாரம் அந்த அம்மாவிற்கு உண்டானது. பல மணிநேரம் பாரத்தோடு ஜெபித்தார்கள். காலை மணி வரை ஜெபித்துவிட்டு தூங்கிவிட்டார்கள்.

இந்த சமயத்தில் அவரது கணவன் டைட்டானிக் கப்பலில் பிரயாணம் செய்த அவர் - அந்த கப்பல் உடைந்து அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் மூழ்கிக்கொண்டிருந்தது. அந்த கப்பல் கடலில் மூழ்கியபோது அவர் ஒரு சுழலில் மாட்டிக்கொண்டார். அதே சுழல் மீண்டும் சுழன்று அவரை தண்ணீரின் மேல்மட்டத்திற்கு கொண்டுவந்தபோது மிதந்துக்கொண்டிருந்த ஒரு படகை அவர் பிடித்துக்கொண்டார். அந்த படகில் ஏறி உயிர்தப்பினார். அப்பொழுது நேரம் அதிகாலை 5மணி. அதே நேரத்தில்தான் அவரது மனைவியும் வீட்டில் தன் ஜெபத்தை முடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftநீங்களும் ஜெபியுங்கள்இடைவிடாமல் ஜெபியுங்கள். பிரசங்கம் செய்து அழிந்து போனவர்கள்அநேகர் உண்டு. ஆனால் ஜெபித்து அழிந்துப் போனவர்கள் யாருமே கிடையாது.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஇந்த உலகின் முன்னோடி விஞ்ஞானியான சர் ஐசக் நியூட்டன் அவர்கள் ஒரு ஜெபிக்கும் கிறிஸ்தவர். "என்னுடைய ஆராய்ச்சி கூடத்தில் டெலஸ்கோப் மூலமாக இந்த அண்ட சராசரம் முழுவதையும் பல நாட்கள் நான் அலசி ஆராய்ந்து பார்த்தாலும் ஆண்டவரை காணமுடியாது. ஆனால் நான் அரை மணிநேரம் முழங்காலில் நின்று நான் ஜெபிக்கும்போது எனது டெலஸ்கோப்பில் பார்க்க முடியாத என் ஆண்டவரை என் ஜெபத்தில் அருகில் இருப்பதை நான் பார்க்க முடிகிறது" என்று கூறுகிறார்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஎனக்கு எவ்வளவு பளுவான வேலைகள் இருப்பினும்ஒவ்வொரு நாளும் 2, 3மணிநேரம் ஜெபிக்கவிட்டால் எனக்கு எந்த வேலையும் ஓடாது என்கிறார் மார்ட்டின் லூத்தர்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஇந்த உலகத்தில் நடக்கும் எந்த ஊழியத்தையும்எந்த இயக்கத்தையும் நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் அந்த ஊழியத்தின் வெற்றிக்குப் பின்னால் யாராவது ஒருவர் முழங்கால் படியிட்டு ஜெபிப்பதை நீங்கள் பார்க்காமல் இருக்கமுடியாது என்று கூறுகிறார் டி.எல்.மூடி அவர்கள்.

இயேசு அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டுவனாந்திரமான ஒரு இடத்திற்கு போய் அங்கே ஜெபம் பண்ணினார் (மாற் 1:35).

நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளை கேட்கிறீர்களாஅவைகளை பெற்றுக் கொள்வோம்என்று நம்புங்கள். அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் (மாற் 11:24) ஜெபத்தின் ரகசியம் - ரகசியமாக ஜெபிப்பதில் இருக்கிறது.

5. ஆண்டவரது பணிக்காக பணம் சேகரிக்க விரைந்து செல்லுங்கள்:

பின்னர் ஆண்டவரது ஆலயத்தை புதுப்பிக்க யோவாஸ் ராஜா விரும்பினார். எனவே அவர் ஆசாரியர்களையும்லேவியர்களையும் ஒன்றுகூட்டி அவர்களிடம் நீங்கள் தேசத்திலுள்ள எல்லா நகரங்களுக்கும் சென்று ஆண்டவரது ஆலயத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க பணம் சேகரியுங்கள். இதனை விரைவாக செய்யுங்கள் என்றார் (நாளா 24:5).

ஆண்டவராகிய நமது ராஜாவின் வேலையை நாம் துரிதமாக செய்துமுடிக்க வேண்டுமானால் அதற்கு பணம் ரொம்ப அவசியம் என்பதை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம். எந்த ஒரு திட்டமும் சரிவர நிறைவேற்றப்படவேண்டுமானால் நிதி தேவைப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்ட சம்பவத்தில் யோவாஸ் என்ற வயது சிறுவன் யூதாவின் ராஜாவாக பதவியேற்றார்.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjEXHL5-jrMza3TycvDENcRxife2a7JIJV3N5vXB1iJFC1Q8Xfr7JZpK2dr67rmOdBKod-2ITufkb9mZi6B6qQxSqga5tnroTsJxfJBSm-jDEEpHluCPNTCy-ONVvGgquvPqmHcrG-st4qO0JOmNbDqXPdcms6tQPKZeawM=s0-d-e1-fthttps://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEh8Q9ntyX-rG5eJHFuIyeXDfETTFTwJr2kUBbSgMCTNnfbyzFz_HcUtdnFMgglGUINu5zjp7MpD6z0wTGPqaPxnTHPcWtRKyFT8RS0O9oLGeZeV-cpqlgJp0nPWmgyOdJtn6t0DYFg_dULislJzGJonL_Lk5ZRLeJ5otrUA=s0-d-e1-ftஇங்கிலாந்து தேசத்திலும் இதே போன்ற சம்பவம் நடந்தது. விக்டோரியா 11 வயது குழந்தையாக இருந்தபோது அவளது அப்பாவும் அன்றைய அரசனுமாக இருந்த ராஜா திடீரென இறந்துவிட்டார். அவர் இறந்தவுடன் தூங்கிக்கொண்டிருந்த 11 வயது விக்டோரியாவை எழுப்பி - நீதான் இங்கிலாந்து நாட்டின் ராணி என்று சொன்னபோது அந்த 11 வயது குழந்தை செய்த முதல்காரியம் - சட்டென முழங்கால் படியிட்டு ஜெபித்தாராம். இவ்வளவு பெரிய தேசத்தை ஆட்சி செய்யக்கூடிய ஞானத்தை எனக்குத்தாரும் என்று சாலமோன் ராஜா கேட்டமாதிரி - கேட்டு ஜெபித்தது - உலக சரித்திரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

நான் அன்புடன் நேசித்தமறைந்த தேவ ஊழியர் Prof.பன்னீர் செல்வம் எழுதிய கட்டுரை. (நன்றி.வார்த்தை-  டாக்டர்.புஷ்பராஜ்)