Thursday, 13 November 2014

அதிகம் பகிருங்கள் நிச்சயம் பயன்படும்......!!
பாஸ்வேர்ட் (password) கேட்ட சிறுமி..(SHARE MORE PLEASE)
கடத்தலில் தப்பிய சாதுர்யம்...,பெற்றோர்களே உடனே அமல்படுத்துங்கள்.....!
பெங்களூரில் 'little flower' என்கிற பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியிடம் முன்பின் தெரியாத ஒரு நபர், உன்னை அழைத்துவரசொல்லி உன்னுடைய அம்மா என்னை அனுப்பிவைத்துள்ளார். வா போகலாம் என்று சொல்லி இருக்கிறார்.
உடனே அந்த சிறுமி , "password" சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள். (அதாவது முன் பின் தெரியாத யாராவது உன்னை அழைத்தால் இந்த password கேட்டு தெரிந்துகொண்டு செல் என்று முன்னரே அவளுடைய தாயும் , இந்த சிறுமியும் ஒரு password பகிர்ந்துகொண்டுள்ளார்கள்)..!!
சிறுமி password கேட்கவும் அந்த கடத்தல் ஆசாமி எஸ்கேப் ஆகிவிட்டான். அருமையான யோசனை அல்லவா இது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த முறையை உடனே அமல்படுத்துங்கள் பெற்றோர்களே....!
-------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்

Monday, 10 November 2014

கேள்வி: திருமணத்திற்கு முன் பாலுறவு பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்: 
திருமணத்திற்கு முன் பாலுறவுகொள்ளுதலைக் குறிக்கிற எந்த ஒரு எபிரேய அல்லது கிரேக்கச் சொல்லோ இல்லை. விபச்சாரத்தையும் வேசித்தனத்தையும் வேதாகமம் கண்டிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் திருமணத்திற்கு முன்பு பாலுறவுகொள்ளுதல் வேசித்தனம் என்று எண்ணப்பட்டுமா? 1 கொரிந்தியர் 7:2இன் படி “ஆம்” என்பதுதான் தெளிவான பதிலாக வெளிவருகிறது: “ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.” வேசித்தனத்தை “குணமாக்கும் மருந்தாக” திருமணத்தைப் பற்றி பவுல் குறிப்பிடுகிறார். ஒன்று கொரிந்தியர் 7:2 இங்கு குறிப்பாக வலியுறுத்துவது என்னவென்றால், பலருக்கு இச்சையடக்கம் இல்லாததால் திருமணத்திற்கு வெளியே வேசித்தன பாலுறவு கொள்கிறார்கள் என்பதால் மக்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இதனால் தங்கள் வேட்கைகளை நன்முறை வழிகளிலேயே தீர்த்துக் கொள்ள முடியும்.

திருமணத்திற்கு முன் பாலுறவை வேசித்தனம் என்ற வரையறைக்குள் 1 கொரிந்தியர் 7:2 திட்டவட்டமாகக் கொண்டுவந்து விடுவதனால் வேசித்தனத்தைப் பாவம் என்று கண்டிக்கிற வேத வசனங்கள் அனைத்துமே திருமணத்திற்கு முன் பாலுறவையும் பாவம் என்றே கண்டிக்கின்றன. திருமணத்திற்கு முன் பாலுறவை பாவம் என்று அறிவிக்கிற அநேக வேதவசனங்கள் உண்டு (அப்போஸ்தலர் 15:20; 1 கொரிந்தியர் 5:1; 6:13,18; 10:8; 2 கொரிந்தியர் 12:21; கலாத்தியர் 5:19; எபேசியர் 5:3; கொலோசேயர் 3:5; 1 தெசலோனேக்கியர் 4:3; யூதா 7). திருமணத்திற்கு முன் பாலுறவை விட்டு முற்றிலும் விலகியிருக்க வேண்டும் என்பதையே வேதாகமம் அறிவுறுத்துகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான பாலுறவு மட்டுமே கர்த்தர் அனுமதிக்கும் பாலுறவு முறையாகும் (எபிரேயர் 13:4).

பாலுறவை பற்றி நாம் சிந்திக்கும்போது பலவேளைகளில் அது அளிக்கும் பொழுதுபோக்குச் சிற்றின்பம் பண்பில்தான் கவனம் செலுத்துகிறோமே அன்றி குழந்தை பெறும் அதன் மற்றொரு பண்பை நாம் கண்டுகொள்வதே கிடையாது. திருமணத்திற்குள் நடக்கும் பாலுறவு இன்பமானது, மேலும் கர்த்தர் அதை அப்படித்தான் வடிவமைத்தார். திருமண உறவுக்குள் ஆண்களும் பெண்களும் பாலுறவு நடவடிக்கையில் ஈடுபடுவதும் இன்பம் அனுபவிப்பதுமே கர்த்தர் விரும்புவது. சாலோமோனின் உன்னதப்பாட்டு மற்றும் வேறு பல வேதாகமப் பகுதிகள் (நீதிமொழிகள் 5:19 போன்றவை) பாலுறவு இன்பத்தைப் பற்றித் தெளிவாக விவரிக்கின்றன. ஆனாலும், பாலுறவில் கர்த்தருடைய நோக்கத்தில் குழந்தை பெறுவதும் அடங்கும் என்பதை தம்பதியினர் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, திருமணத்திற்கு முன் இருவர் பாலுறவில் ஈடுபடுவது இரு மடங்குத் தவறு – அவர்களுக்கென்று வைக்கப்படாத இன்பத்தை அவர்கள் அனுபவிப்பது, மேலும் ஒரு குழந்தைக்கு கர்த்தர் விரும்புகிற குடும்பச் சூழலைக் கொடுக்காமல் அதற்கு வெளியே அவர்களை உருவாக்க முயற்சிப்பது.

நடைமுறைக்கு ஏற்றது என்பதை மட்டும் வைத்து நல்லது கெட்டது என்பதைத் தீர்மானிக்காமல், திருமணத்திற்கு முன் பாலுறவு என்பதைப் பற்றி வேதாகமத்தின் அறிவுரையைப் பின்பற்றினாலே பால்வினை நோய்கள் வெகுவாகக் குறைந்துவிடும்; கருக்கலைப்புகள் குறையும்; திருமணமாகமல் தாயாகிவிடுவது மற்றும் விருப்பமில்லாமல் கர்ப்பமுறுவது ஆகியவை எண்ணிக்கையில் வெகுக் குறைவாக இறங்கிவிடும்; மேலும் தங்கள் வாழ்க்கையில் பெற்றோரின்றி வளரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறையும். திருமணத்திற்கு முன் பாலுறவைப் பொருத்தவரை விலகியிருத்தலே கர்த்தருடைய ஒரே கொள்கை. விலகியிருத்தல் உயிர்களைக் காக்கும், குழந்தைகளைப் பாதுகாக்கும், பாலியல்சார் உறவுகளுக்கு தகுந்த மதிப்பை அளிக்கும், மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தருக்கு மகிமை சேர்க்கும்.

காயீனின் மனைவி யார்? காயீனின் மனைவி அவனது சகோதரியா?




கேள்வி: காயீனின் மனைவி யார்? காயீனின் மனைவி அவனது சகோதரியா?

பதில்: 
காயீனின் மனைவி யாரென்பதை வேதாகமம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவனது சகோதரியோ, மருமகளோ அல்லது பேத்தியோ போன்றவர்தாம் காயீனின் மனைவியாக இருந்திருக்க முடியும் என்ற ஒரே பதில்தான் இங்கு சாத்தியம். காயின் ஆபேலைக் கொலை செய்தபோது (ஆதியாகமம் 4:8) அவனது வயது என்ன என்பதையும் வேதாகமம் நமக்குச் சொல்லவில்லை. இருவரும் விவசாயிகள் என்பதனால் இருவரும் வயது வந்தவர்கள் எனலாம். சொந்தக் குடும்பமும் இருந்திருக்கலாம். ஆபேல் கொலை செய்யப்பட்டபோது, காயீனையும் அபேலையும் தவிர ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வேறு குழந்தைகளும் இருந்தார்கள் என்பது தெளிவு. நிச்சயமாகவே பின்பு இன்னும் பல குழந்தைகளைப் பெற்றார்கள் (ஆதியாகமம் 5:4). ஆபேலைக் கொலை செய்தபின் காயீன் தன் உயிருக்குப் பயந்திருந்தான் (ஆதியாகமம் 4:14) என்னும் உண்மை அப்பொழுதே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மேலும் பல குழந்தைகள் இருந்திருப்பார்கள், சொல்லப்போனால் பேரக்குழந்தைகளும் இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. காயீனின் மனைவி (ஆதியாகமம் 4:17) ஆதாம் ஏவாளுடைய மகளோ அல்லது பேத்தியோதான்.

ஆதாமும் ஏவாளும் மட்டுமே முதலாவது படைக்கப்பட்ட மனிதர்கள் என்பதால் அவர்களது குழந்தைகளுக்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. மக்கள்தொகை அதிகமாகி குடும்பத்திற்குள்ளேயே திருமண உறவு ஏற்படுத்திக்கொள்வது தேவையில்லை (லேவியராகமம் 18:6-18) என்ற காலம் வரும்வரை குடும்பத்திற்குள்ளேயே எற்படும் திருமண உறவை கர்த்தர் தடுக்கவில்லை. மிகவும் நெருங்கிய, முறையில்லாத உறவினர்களிடையில் நிகழும் சேர்க்கை இக்காலத்தில் அதிகமாக மரபியல் சீர்கேடுகளில் முடிகிறது எதனாலெனில், ஒரே மரபியற்குழுவைச் சேர்ந்த இரண்டுபேர் (எ.கா. ஒரு சகோதரனும் சகோதரியும்) சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, கோளாறான குணங்கள் ஆற்றலடையும் ஆபத்தான நிலை உருவாகிறது. வேறு வேறு குடும்பங்களைச் சேர்ந்தஅவர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்போது பெற்றோர்கள் இருவரும் ஒரே கோளாறு பண்புகளைக் கொண்டிருக்கும் நிலைமை மிகக்குறைவு. மனிதகுல மரபியல் குறியீடு “மாசுபடுதல்” அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆண்டுகள் நூற்றாண்டுகளாக மரபணு குறைவுகள் தலைமுறை தலைமுறைகளாக பல மடங்குகளாக உயர்ந்து, பூதாகரமாக மாறிவிட்டது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எந்த மரபணுக்குறைவும் இருக்கவில்லை. அதனால் அவர்களும், அவர்களது சந்ததியில் அடுத்து வந்த சில தலைமுறைகளும் நமக்கு இன்று இருப்பதைவிட நல்ல ஆரோக்கியமான உடல்நிலை இருந்தது. ஆதாம் ஏவாளின் குழந்தைகளுக்கு எந்த மரபணுக் குறையும் இருக்கவில்லை. அதன் பலனாக குடும்பத்திற்குள்ளே நெருங்கிய உறவினர்களுக்கிடையே திருமணம் செய்துகொள்வது பாதுகாப்பானதாக இருந்தது.

டினோசர்களைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது? வேதாகமத்தில் டினோசர்கள் உள்ளனவா?



கேள்வி: டினோசர்களைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது? வேதாகமத்தில் டினோசர்கள் உள்ளனவா?

பதில்: 
பூமியின் வயது என்ன, ஆதியாகமத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதெப்படி, நம்மைச் சுற்றியுள்ள இயற்கை தரும் ஆதாரங்களை எப்படிப் புரிந்துகொள்வது போன்றவற்றைப் பற்றி கிறிஸ்தவ சமுதாயத்தில் நடக்கும் பெரும் விவாதங்களில் டினோசர்கள் வேதாகமத்தில் உள்ளனவா என்கிற தலைப்பும் ஒன்று. பூமி மிகவும் பழமையானது என்கிற கருத்தை உடையவர்களுக்கு வேதாகமத்தில் டினோசர்களைப் பற்றி கூறப்படவில்லை என்பதை ஒத்துக்கொள்வதில் அதிக ஆட்சேபணை இல்லை, ஏனென்றால், அவர்களின் நிலைப்பாட்டின்படி முதலாவது மனிதன் இந்த பூமியில் நடப்பதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே டினோசர்கள் அழிந்துவிட்டன. வேதாகமத்தை எழுதினவர்கள் உயிருள்ள டினோசர்களைப் பார்த்திருக்கவே மாட்டார்கள்.

பூமியின் வயதைக் குறைவாக மதிப்பிடுபவர்கள், வேதாகமம் ’டினோசர்’ என்ற சொல்லை நேரடியாகக் பயன்படுத்தவில்லை என்றாலும் வேதாகமத்தில் டினோசர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது என்னும் கருத்தை ஒத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். வேதாகமம், இதற்கு பதிலாக ’தன்னியின்’ என்ற எபிரேயச் சொல்லை பயன்படுத்துகிறது. இது ஆங்கில வேதாகமங்களில் வெவ்வேறு விதங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “கடல் அரக்கன்” என்று சிலவேளைகளிலும், “சர்ப்பம்” என்று சிலவேளைகளிலும் கொடுக்கப் பட்டுள்ளது. ’தன்னியின்” என்பது ஒரு இராட்சத ஊரும் பிராணி என்பதுபோல் தெரிகிறது. இந்தப் பிராணிகள் பழைய ஏற்பாட்டில் சொமார் 30 முறை குறிப்பிடப்பட்டுள்ளன. அவை நிலத்திலும் நீரிலும் காணப்பட்டன.

இந்த இராட்சத ஊரும் பிராணிகள் மட்டுமல்லாமல், வேதாகமம் குறிப்பிடும் வேறுசில பிராணிகளின் விவரணை எப்படி இருக்கிறதென்றால், இவற்றை எழுதியவர்கள் டினோசர்களைக் குறிப்பிட்டிருக்கலாம் என சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பெகெமோத் கர்த்தருடைய சிருஷ்டிப்புகள் அனைத்தைக் காட்டிலும் பெரியதாக கருதப்படுகிறது, இதன் வால் கேதாரு மரங்களுக்கு ஒப்பாகக் கூறப்பட்டுள்ளது (யோபு 40:15). சில ஆய்வாளர்கள் பெகெமோத்தை யானையாகவோ, நீர் யானையாகவோ இருக்கக்கூடும் என்கின்றனர். ஆனால் மற்றவர்கள், யானைக்கும் நீர்யானைக்கும் வால் சிறியது, அதைக் கேதாரு மரத்துடன் ஒப்பிட முடியாது என்கின்றனர். ஆனால் டினோசர்களோவென்றால் அவை ப்ராகியோசௌரஸ் மற்றும் டிப்லோடோகஸ் போல கேதாரு மரங்களுடன் ஒப்பிடக்கூடிய மிகப் பெரிய வால்களைக் கொண்டிருந்தன.

எல்லா பழமையான நாகரிகங்களிலுமே இராட்சத ஊரும் பிராணிகளை குறிக்கும் சில கலை பொருட்கள் இருந்திருக்கின்றன. வட அமெரிக்காவில் கிடைத்துள்ள சில கற்பாறைச் சிற்பங்களும், கைவினைப் பொருட்களும், மட்பாண்டப் பொருட்களும் கூட நவீன காலத்தில் சித்தரிக்கப்படும் டினோசர்கள் போல காணப்படுகின்றன. தென் அமெரிக்காவில் உள்ள குகைச் சித்திரங்களில் கூட டிப்லோடோகஸ் போன்ற பிராணிகளை மனிதர்கள் ஓட்டிக்கொண்டு செல்வதுபோல் காணப்படுகின்றன. மேலும்,டிரைசெராடாப்ஸ் போன்ற, டெரோடாக்டைல் போன்ற, டைரனோசௌரஸ் போன்ற பிராணிகளின் உருவங்களும் காணப்படுகின்றன. ரோம மொஸைக்கள், மாயன் களிமண் பாண்டங்கள், பாபிலோனிய நகர் சுவர்கள் அனைத்துமே இந்த பிராணிகளைப் பற்றிய மனிதர்களுடைய நிலவரம்புகள் அற்ற, பல்கலாச்சார மோகத்தையே காண்பிக்கிறது. மார்கோ போலோவின் இல் மிலியொன் போன்றவற்றில் கொடுக்கப்பட்டுள்ள தெளிவான விவரணைகள் கூட புதையல்களைச் சேர்த்து வைக்கும் பிராணிகளின் அருமையான கற்பனைக் கதைகளைக் கொண்டிருக்கின்றன. மனிதனும் டினோசரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியாக பல தெளிவான மானுடவியல்சார் மற்றும் வரலாறுசார் ஆதாரங்கள் இருப்பது மட்டுமல்லாமல், வட அமெரிக்காவிலும், மேற்கு-மத்திய ஆசியாவிலும் கண்டுபிடிக்கப் பட்ட டினோசர்கள் மற்றும் மனிதனின் உறைந்துபோன காலடித்தடங்கள் இயற்கையிலிருந்தும் கிடைத்துள்ளது.

அப்படியென்றால், வேதாகமத்தில் டினோசர்கள் இருக்கின்றனவா? இதற்கு முடிவு சொல்வதென்பது இன்னமும் முடியாது. இது நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள இந்த உலகத்தையும், கிடைத்துள்ள ஆதாரங்களுக்கு எப்படி பொருள் காண்கிறீர்கள் என்பதையும் பொருத்ததுச், வேதாகமத்தை அப்படியே புரிந்துகொள்ள முயற்சித்தால், பூமியின் வயது குறைவு என்ற விளக்கம் கிடைக்கும், மேலும் மனிதனும் டினோசரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற கருத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். மனிதர்களும் டினோசர்களும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் டினோசர்கள் என்ன ஆனது? இந்த விஷயத்தைப் பற்றி வேதாகமம் விவரிக்க வில்லையென்றாலும், பெரும் வெள்ளத்திற்குப் பின் எதோ ஒரு காலத்தில் சுற்றுப் புறச்சூழலில் நடந்த பயங்கரமான மாற்றங்களினாலும், மனிதன் விடாமல் அவற்றை வேட்டையாடினதாலும் அவை அழிந்துவிட்டன.
கேள்வி: வேதம் உண்மையில் தேவனுடைய வார்த்தையா?

பதில்: 
இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதின் மூலம் வேதத்தை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். வேதம் நம் வாழ்விற்கு எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால், வேதம் அடிப்படையிலே நிலையான அழுத்தத்தை நமக்கு கொடுக்கிறது. வேதம் தேவனுடைய வார்த்தை என்றால், நாம் அதிலே பலனடைந்து அதை படித்து அதற்கு கீழ்படிந்து முழவதுமாய் அதை நம்ப வேண்டும். தேவன் நமக்கு வேதத்தை கொடுத்ததின் நோக்கம். அவர் நம்மில் வைத்த அன்பின் உதாரணம், ஆதாரமும் ஆகும்.

"வெளிப்படுத்தல்" என்ற வார்த்தையின் அர்த்தம் தேவன் மனுமக்களோடு சரியான உறவை வைத்துக்கொள்ளுதல் மற்றும் மனுமக்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளுதல் ஆகும். தேவன் இவைகளை வேதத்தில் வெளிப்படுத்தாதிருந்தால் நாம் அறிந்திருக்க முடியாது. 1500ஆண்டுகளுக்கு மேலாக தேவன் தன்னை வெளிப்படுத்தினதை வேதத்தின் மூலம் காணலாம். மனிதன் தேவனோடு எப்படி சரியான உறவை வைத்துக்கொள்வது என நமக்கு வெளிப்படுத்துகிறது. நம்முடைய தனிப்பட்ட காரியங்களுக்கும், விசுவாச சம்மந்தபட்ட காரியங்களுக்கும் வேதமே முழு அதிகாரம் நிறைந்ததாய் இருக்க வேண்டும்.

வேதம் தேவனுடைய வார்த்தையா? அல்லது ஒரு நல்ல புத்தகமா? என்று எப்படி அறிவது? இதுவரை எந்த மத புஸ்தகத்திலும் எழுதப்படாத ஒற்றுமை வேதத்தில் உண்டு அது என்ன? வேதம் உண்மையில் தேவனுடைய வார்த்தைதானா? ஆதாரம் உண்டா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு வேதத்தை நாம் சரியாக ஆராய்வோம் என்றால், தேவனுடைய வார்த்தைகளாக அருளப்பட்ட வேதவசனங்களில் போதுமான பதில் கிடைக்கும்.

வேதம் தேவனுடைய வார்ததை என்பது சந்தேகமே இல்லை. (2 தீமோ.3:15-17) வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் உபதேசத்திற்கும். கடிந்து கொள்ளுதலுக்கும். சீர்திருத்தலுக்கும், நீதியைபடிப்பித்தலுக்கும் பிரயோஜன முள்ளவைகளாய் இருக்கிறது என்று சொல்லுகிறது.

வேத வசனங்கள் தேவனால் அருளப்பட்டபைகள்தானா? அவைகள் உண்மைதானா என்பதை அறிய இன்று வேதத்தின் உள்ளடங்கிய ஆதாரங்கள் அவசியம். வேதத்தின் உள்ளடங்கிய ஆதாரங்கள் முதல் ஆதாரம் அவைகள் 66 புஸ்தகங்களாயிருந்தாலும் அவைகள் எல்லாம் ஒரே குறிக்கோள் உடையதாயிருக்கிறது. மூன்று கண்டத்தில் மூன்று வித்தியாச மொழிகளை கொண்டு, வித்தியாசமான வாழ்கை, நடத்தை கொண்ட 40க்கும் அதிகமான மக்களால் எழுதப்பட்டாலும், துவக்க முதல் முடிவு மட்டும் எந்த முரண்பாடும் இல்லாமல் ஒன்றுபட்ட ஒரே புஸ்தகம். வேறே எந்த ஒரு புஸ்தகத்திலும் இல்லாத ஒற்றுமை வேதத்தில் இருப்பதினால் இது தேவ ஆவியானவரால், தேவ பிள்ளைகளைக் கொண்டு எழுதப்பட்டது என்பது நிரூபனமானகிறது.

வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை அதின் தீர்க்கதரிசன வசனங்கள் நிரூபிக்கிறது. வேதத்தில் அதிகமான தீர்க்கத்தரிசனங்கள் அடங்கியிருக்கிறது ஒரு தேசத்தை குறித்ததான எதிர்காலம் , ஒரு மனிதனை குறித்ததான எதிர்காலம். யார் மேசியாவாக வரப்போவது? இரட்சகர் யார்? என்று இயேசு கிறிஸ்துவை குறித்து மாத்திரம் முன்னூறுக்கும் அதிகமான தீர்க்கதரிசன வசனங்கள் பழைய ஏற்பாட்டில் அடங்கியுள்ளது இயேசு கிறிஸ்து யாருடைய குடும்பத்தில் பிறப்பார்? எப்படி, எங்கே பிறப்பார்? எப்படி மரிப்பார், மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார். வேதத்தின் தீர்க்கதரிசனங்கள் ஒன்றும் தவறிபோனதில்லை வேறு எந்த மத புத்தகமும் வேதத்தை போன்று பின் நடக்க போகின்றவைகளை முன்பாகஅறிவித்ததில்லை.

மூன்றாவது வேதத்தின் ஒற்றுமையும், வல்லமையும் தேவவசனம் தான் என்று நிரூபிக்கிறது. பாவிகள் மனந்திரும்புகிறார்கள், ஓரினச் சேர்கையில் கட்டுண்டவர்கள் விடுதலையாகிறார்கள், கடினமுள்ள குற்றவாளிகள் மனம் திரும்புகிறார்கள். போதைக்கு அடிமையானவர்கள் சுகம் அடைகிறார்கள், அன்பு கூறாதவர்கள் அன்பு கூறுகிறார்கள். வேதம் இப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டு வரக்கூடிய வல்லமையுடையது ஏனென்றால் வேதம் உண்மையிலே தேவனுடைய வார்த்தை. வேதத்தின் வெளிப்புற ஆதாரங்களும், வேதம் உண்மையிலே தேவ வசனம் என்று நிரூபிக்கிறது.

தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த சான்று மற்றும் அனேக சரித்திர சான்றுகளும் உண்டு. உண்மைகள் நிறைந்த. சரியான காலங்கள் கொண்ட சரித்திர ஆதாரங்கள் உண்டு. வேதத்தில் உள்ள காலங்கள் நேரங்கள் எல்லாம் உண்மை என்றும்இ எந்த ஒரு புஸ்தகத்திற்கும் இல்லாத உண்மையான சரித்திர ஆதாரங்கள் வேதத்திற்கு உண்டு என்று சரித்திர ஆசிரியரும், தொல்பொருள் ஆராய்சியாளர்களும் வேதம் உண்மை என்றும் வேதவசனம் தேவனுடைய வார்த்தை என்றும் நிரூபிக்கின்றனர்.
கேள்வி: கடவுள் உயிர் வாழ்கிறாரா? கடவுள் உயிர் ழ்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?

பதில்: 
கடவுள் உயிர் வாழ்கிறாரா? இதை நான் மிகவும் விருப்பத்துடன் கண்டுபிடிப்பதற்கு, விவாதிப்பதற்கு மிகவும் கவனம் எடுத்துக் கொள்கிறேன். இப்பொழுதுள்ள கணக்கெடுப்பின்படி 90 சதவிகித ஜனங்கள் கடவுள் உயிரோடிருக்கிறாரென்றும், மேலான ஒரு சக்தி இருக்கிறது என்றும் நம்புகின்றனர். இருந்தாலும் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் மேல் அவர் உயிரோடிருக்கிறார் என்பதை வெளிப்படுத்த பொறுப்புகள் உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் வேறு சில காரணங்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.

எப்படியிருந்தாலும் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதோ நிரூபியாமல் இருப்பதோ கூடாத காரியம் நாம் கடவைள விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாதகாரியம். (எபி.11:16) கடவுள் விரும்பினால் அவர் இருக்கிறார் என்பதை நிரூபிக்க முடியும் அவர் அப்படிச் செய்தால் அவரை விசுவாசிப்பதற்கு ஏதுமில்லாமல் போய்விடும். (யோ. 20:29)

விசுவாசத்தினால் கடவுளை நம்பவேண்டும் என்று சொல்வதனால், அவர் இருக்கிறார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லையென்று சொல்லிவிட முடியாது. (சங். 19:1-4) நாம் நட்சத்திரங்களைக் காண்பதிலும், அகில உலகத்தையம் காண்பதிலும், இயற்கையின் அதிசயங்களைப் கவனிப்பதிலும், சூரியன் மறைவதின் அழகை ரசிப்பதிலும் இவைகளை படைத்த ஒருவர் இருக்கிறார் என்பதைப் புரியச்செய்கிறது. இவைகள் எல்லாம் போதுமானதாக இல்லாவிட்டால், நம்முடைய இருதயங்களிலே, அவர் வாழ்கிறார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. (பிர.3:11) நம்முடைய வாழ்கைக்குப் பின், இதைவிட மேலான ஒரு வாழ்வு இருக்கிறது என்பது தெரிகிறது. அறிவுப்பூர்வமாக ஒருவேளை இதை நாம் மறுக்கலாம். தேவபிரசன்னம் நம்மில் இருந்துகொண்டிருக்கிறது. சிலர் கடவுள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கிறார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. (சங்.14:1).

வரலாற்றில் முழுவதுமாக பார்க்கும்பொழுது எல்லாக் கலாச்சாரத்திலும், மனித மேம்பாட்டிலும், எல்லாக் கண்டங்களிலும் தேவன் இருக்கிறார் என்பதை 98 சதவிகித ஜனங்கள் நம்புகிறார்கள். இவர்கள் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புவதற்கு ஏதாவது ஒரு தூண்டுதல் இருக்கலாம்.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு பரிசுத்த வேத விவாதத்தை தவிர வேறு விவாதங்களும் உள்ளன.

1. ஆன்டோலாஜிக்கல் (Ontological) விவாதத்தின் கருத்துக்களின் அடிப்படையில் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்கப்படுகின்றன. “கடவுளைத்தவிர வேறொரு பெரியகாரியம் இருக்க முடியாது. இருப்பது இல்லாமல் இருப்பதைக் காட்டிலும் பெரியது. ஆகையால் அந்த பெரியகாரியம் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். கடவுள் இல்லாவிட்டால் அந்த பெரியகாரியம் இருந்திருக்க முடியாது. ஆனால் இது முரன்பாடான கடவுளைக்குறித்த விளக்கம்.

2. டெலிலாஜிக்கல் (Teleological) விவாதம்: உலகம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருப்பதனால், இதனை உருவாக்கிய ஒருவர் இருக்கவேண்டும். உதாரணமாக பூமி சூரியனுக்கு 100 மைல் தூரமாயிருந்தாலும் அருகாமையில் இருந்தாலும். பூமியில் வசிக்கிற மக்கள் உயிர்வாழ முடியாது. நம்முடைய தட்ப வெட்ப நிலையில் சில சதவிகிதம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் பூமியிலிருக்கிற எல்லா உயிரினங்களும் மரித்துப்போய்விடும். நம் உடம்பிலுள்ள ஒரு அணு உருவாகுவதற்கு அனேக புரத அணுக்கள் தேவை. அதாவது ஒரு அணு உருவாக குறைந்தபட்சம் 10243 புரத மூலக்கூறுகள் தேவை. அதாவது பத்;தோடு(10) 243 பூஜ்ஜியங்களைச் சேர்க்க வேண்டும்.

3. காஸ்மோலாஜிக்கல்(Cosmological) விவாதம் : தேவன் இருக்கிறார் என்பதற்கு ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொருகாரணம் இருக்கிறதென்று விவாதிப்பவர்கள். உலகமும் அதில் உள்ளயெல்லாம் ஒரு செயல். இவைகளெல்லாம் உருவாகுவதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். காரணமாவதற்கு இறுதியாக எல்லாவற்றையும், எல்லா செயல்களுக்கும் காரணமாயிருக்கிற ஒருவர் இருக்கவேண்டும். அவருக்கு மேலே அவரை உருவாக்குவதற்கு காரணமாக யாருமில்லை. தன்னை உருவாக்க ஒருவருமில்லாமல் இருக்கிறவர் தான் கடவுள்.

4. ஒழுக்கநெறி (Moral) விவாதம் : இது நல்நடத்தையைப் பற்றியது. வரலாற்றில், எல்லாக் கலாச்சார மக்களுக்கும் ஒரு நியதி அல்லது ஒழுங்குமுறைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் தவறு அல்லது சரி என்று உணர்கிற உணர்வு உண்டு. கொலை, பொய், திருட்டு, தவறான நடத்தை இவைகளெல்லாம் எல்லா நாடுகளைச் சார்ந்தவர்களும் இது தவறு, இது சரி என்று மறுப்பு தெரிவிக்கிறார்கள். நன்மை எது, தீமை எது என்ற உணர்வு எல்லா மனிதருக்கும் இருக்கிறது. இந்த உணர்வு கடவுளிடத்திலிருந்துதான் வருகிறது. இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும் மக்கள் தேவனைக் குறித்த அறிவைமறுத்து பொய்யை நம்புவார்கள் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு தெளிவாக சொல்கிறது. (ரோ. 1:25) மக்கள் கடவுளை நம்பாமல் இருப்பதற்கு, எந்த ஒரு கராணத்தையம் கூற முடியாது. (ரோ.1:20) அறிவியல் பூர்வமாக கடவுளை நிரூபிக்க முடியாது என்று அவரை நம்பாமல் இருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்று மக்கள் ஏற்றுக்கொண்டால் அவர்கள் தங்களைக் குறித்து அவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதையும், பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணரவேண்டும். (ரோ.3:23,6:23) கடவுள் இல்லையென்றால் நாம் நம் விருப்பப்படி நம் மனம்போல வாழலாம். பரிணாமக் கொள்கையைப் பிடித்துக்கொண்டு கடவுளை உதாசினப்படுத்தி வாழ்கிற ஒரு கூட்டம் உண்டு.

கடவுள் உயிரோடிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கும் கடுமையான முயற்சியே, கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு நான் கொடுக்கும் இறுதியான விவாதம். கடவுள் இருக்கிறார் என்பது எனக்கு எப்படித்தெரியம்? நான் கடவுளுடன் தினமும் பேசுவதால், அவர் இருக்கிறார் என்பதை அறிகிறேன். அவர் பேசுவதை நான் சத்தமாகக் கேட்பதில்லை ஆனால் அவர் பிரசங்கத்தை, வழிநடத்துதலை, அன்பை, கிருபையை உணர்கிறேன். என் வாழ்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கொடுக்கிற பொழுது கடவுள் இருக்கிறார் என்பதைத்தவிர, வேறு விளக்கம் கொடுக்க முடியவில்லை. கடவுள் என்மை ஆச்சரியமான விதமாக இரட்சித்து என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார். ஆகவே அவரைத்துதித்து அன்பு செலுத்துவதைத்தவிர நான் ஒன்றும் இல்லை என்று உணர்கிறேன்.

இறுதியாக கடவுள் இருக்கிறார் என்பதை விசுவாசத்தின் மூலமாக அறிந்துகொள்கிறோம். (எபி.11:6). தேவன்பேரில் வைக்கும் விசுவாசம் என்பது குருட்டுத்தனமானதல்ல. விசுவாசம் என்பது ஒரு பாதுகாப்பான, வெளிச்சமான அறையில் அடி எடுத்து வைப்பதாகும். இதில் ஏற்கெனவே 90 சதவிகித மக்கள் இருக்கிறார்கள்.
Question: "Is the Bible truly God's Word?"

Answer:
Our answer to this question will not only determine how we view the Bible and its importance to our lives, but also it will ultimately have an eternal impact on us. If the Bible is truly God’s Word, then we should cherish it, study it, obey it, and fully trust it. If the Bible is the Word of God, then to dismiss it is to dismiss God Himself.

The fact that God gave us the Bible is an evidence and illustration of His love for us. The term “revelation” simply means that God communicated to mankind what He is like and how we can have a right relationship with Him. These are things that we could not have known had God not divinely revealed them to us in the Bible. Although God’s revelation of Himself in the Bible was given progressively over approximately 1500 years, it has always contained everything man needs to know about God in order to have a right relationship with Him. If the Bible is truly the Word of God, then it is the final authority for all matters of faith, religious practice, and morals.

The question we must ask ourselves is how can we know that the Bible is the Word of God and not just a good book? What is unique about the Bible that sets it apart from all other religious books ever written? Is there any evidence that the Bible is truly God’s Word? These types of questions must be seriously examined if we are to determine the validity of the Bible’s claim to be the very Word of God, divinely inspired, and totally sufficient for all matters of faith and practice. There can be no doubt that the Bible does claim to be the very Word of God. This is clearly seen in Paul’s commendation to Timothy: “… from infancy you have known the holy Scriptures, which are able to make you wise for salvation through faith in Christ Jesus. All Scripture is God-breathed and is useful for teaching, rebuking, correcting and training in righteousness, so that the man of God may be thoroughly equipped for every good work” (2 Timothy 3:15-17).

There are both internal and external evidences that the Bible is truly God’s Word. The internal evidences are those things within the Bible that testify of its divine origin. One of the first internal evidences that the Bible is truly God’s Word is seen in its unity. Even though it is really sixty-six individual books, written on three continents, in three different languages, over a period of approximately 1500 years, by more than 40 authors who came from many walks of life, the Bible remains one unified book from beginning to end without contradiction. This unity is unique from all other books and is evidence of the divine origin of the words which God moved men to record.

Another of the internal evidences that indicates the Bible is truly God’s Word is the prophecies contained within its pages. The Bible contains hundreds of detailed prophecies relating to the future of individual nations including Israel, certain cities, and mankind. Other prophecies concern the coming of One who would be the Messiah, the Savior of all who would believe in Him. Unlike the prophecies found in other religious books or those by men such as Nostradamus, biblical prophecies are extremely detailed. There are over three hundred prophecies concerning Jesus Christ in the Old Testament. Not only was it foretold where He would be born and His lineage, but also how He would die and that He would rise again. There simply is no logical way to explain the fulfilled prophecies in the Bible other than by divine origin. There is no other religious book with the extent or type of predictive prophecy that the Bible contains.

A third internal evidence of the divine origin of the Bible is its unique authority and power. While this evidence is more subjective than the first two, it is no less a powerful testimony of the divine origin of the Bible. The Bible’s authority is unlike any other book ever written. This authority and power are best seen in the way countless lives have been transformed by the supernatural power of God’s Word. Drug addicts have been cured by it, homosexuals set free by it, derelicts and deadbeats transformed by it, hardened criminals reformed by it, sinners rebuked by it, and hate turned to love by it. The Bible does possess a dynamic and transforming power that is only possible because it is truly God’s Word.

There are also external evidences that indicate the Bible is truly the Word of God. One is the historicity of the Bible. Because the Bible details historical events, its truthfulness and accuracy are subject to verification like any other historical document. Through both archaeological evidences and other writings, the historical accounts of the Bible have been proven time and time again to be accurate and true. In fact, all the archaeological and manuscript evidence supporting the Bible makes it the best-documented book from the ancient world. The fact that the Bible accurately and truthfully records historically verifiable events is a great indication of its truthfulness when dealing with religious subjects and doctrines and helps substantiate its claim to be the very Word of God.

Another external evidence that the Bible is truly God’s Word is the integrity of its human authors. As mentioned earlier, God used men from many walks of life to record His words. In studying the lives of these men, we find them to be honest and sincere. The fact that they were willing to die often excruciating deaths for what they believed testifies that these ordinary yet honest men truly believed God had spoken to them. The men who wrote the New Testament and many hundreds of other believers (1 Corinthians 15:6) knew the truth of their message because they had seen and spent time with Jesus Christ after He had risen from the dead. Seeing the risen Christ had a tremendous impact on them. They went from hiding in fear to being willing to die for the message God had revealed to them. Their lives and deaths testify to the fact that the Bible truly is God’s Word.

A final external evidence that the Bible is truly God’s Word is the indestructibility of the Bible. Because of its importance and its claim to be the very Word of God, the Bible has suffered more vicious attacks and attempts to destroy it than any other book in history. From early Roman Emperors like Diocletian, through communist dictators and on to modern-day atheists and agnostics, the Bible has withstood and outlasted all of its attackers and is still today the most widely published book in the world.

Throughout time, skeptics have regarded the Bible as mythological, but archeology has confirmed it as historical. Opponents have attacked its teaching as primitive and outdated, but its moral and legal concepts and teachings have had a positive influence on societies and cultures throughout the world. It continues to be attacked by pseudo-science, psychology, and political movements, yet it remains just as true and relevant today as it was when it was first written. It is a book that has transformed countless lives and cultures throughout the last 2000 years. No matter how its opponents try to attack, destroy, or discredit it, the Bible remains; its veracity and impact on lives is unmistakable. The accuracy which has been preserved despite every attempt to corrupt, attack, or destroy it is clear testimony to the fact that the Bible is truly God’s Word and is supernaturally protected by Him. It should not surprise us that, no matter how the Bible is attacked, it always comes out unchanged and unscathed. After all, Jesus said, “Heaven and earth will pass away, but my words will never pass away” (Mark 13:31). After looking at the evidence, one can say without a doubt that, yes, the Bible is truly God’s Word.
Recommended Resources:Making Sense of Bible Difficulties: Clear and Concise Answers from Genesis to Revelation by Geisler & HoweandLogos Bible Software.

Read more:http://www.gotquestions.org/Bible-God-Word.html#ixzz3IcMxN2vA

ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? அதிகமாக ஷேர் செய்யவும்…!!
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?
1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
2. பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.
3. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
4. Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.\
5. அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
இது ஓகே தானே நான் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது ஒரு share ஐ மட்டுமே…

What is new covenant theology?


new covenant theology
Question: "What is new covenant theology?"

Answer:
New covenant theology is best described as a hermeneutical principle, or an interpretative grid through which one reads and interprets the Scriptures. As a hermeneutical principle, it stands as a bridge betweendispensational theologyandcovenant theology. That is not to say that new covenant theology has intentionally set itself up between dispensational theology and covenant theology, but that new covenant theology shares things in common with both dispensational and covenant theology. As such, we cannot say what new covenant theology is without reference to dispensational theology and covenant theology.

Dispensational theology essentially sees the Scriptures unfolding in a series of, usually, seven “dispensations.” A dispensation can be loosely defined as the means through which God governs His actions with man and creation. Therefore, God’s governance was different with Adam than it was with Abraham, etc. Dispensational theology views the revelation as progressive, i.e., in each dispensation, God reveals more and more of His divine plan of redemption. However, while Scripture is a progressive revelation, each successive dispensation represents a new way of God dealing with His creation. In other words, according to dispensational theology, there is a strong level of discontinuity between the dispensations; once an old dispensation is over and a new one begun, the "old" way of doing things under the old dispensation is superseded by the new dispensation. And each dispensation is typically introduced with some new revelation from God.

The thing to remember with dispensational theology is that there is a sharp distinction between Israel and the Church. They are two different people with two different destinies in God’s economy. The Church is seen as a "parenthesis" between God’s dealings with national Israel. The restored kingdom promised to Israel will be fulfilled in theMillennium. Until then is the Church Age—the time of the Gentiles.

Covenant theology is effectively the polar opposite of dispensational theology. While both agree that Scripture is progressive, the overarching principle of covenant theology is the covenant. Covenant theology sees two theological covenants in Scripture—the covenant of works and the covenant of grace. The covenant of works was introduced in the Garden between God and man in which God promised mankind life for obedience and judgment for disobedience. The covenant of works was re-introduced at Sinai as God promised Israel long life and blessing in the land on the condition of their obedience to the Mosaic covenant, but expulsion and judgment in the event of their disobedience. The covenant of grace was implemented after the fall and represents God’s unconditional covenant with man to redeem and save the elect. All of the various biblical covenants (Noahic, Abrahamic, Mosaic, Davidic, and the New) are outworkings of the covenant of grace as God works His plan of redemption in human history. So, where dispensational theology saw a discontinuity between the various dispensations (and in particular between the Old and the New Testaments), covenant theology sees a great deal of continuity.

This is especially evident in the fact that covenant theology does not see a sharp distinction between Israel and the Church. Both entities are seen as one continuous people of God with one ultimate destiny.

All of that serves as the backdrop to view new covenant theology. As mentioned previously, new covenant theology is a middle point between the two. It shares a lot in common with classic covenant theology, in particular the continuity between the Church and Israel as being one people of God. However, it also differs from covenant theology in that it does not necessarily view the Scriptures as the unfolding of redemption in a covenant of works/covenant of grace framework. Instead, it sees the Scriptures in a more promise/fulfillment paradigm.

By far the biggest difference between new covenant theology and covenant theology is how each views the Mosaic Law. Covenant theology sees the Law in three ways: civil, ceremonial and moral. The civil aspect of the Law was those laws in the covenant of Sinai which governed the theocratic nation of Israel while they live in the Promised Land. The ceremonial aspect of the Law governed the worship of God by Israel while in the land. Finally, the moral aspect of the Law governed the behavior of God’s people. It should be understood that the Law, in and of itself, is one cohesive whole and that the Jews did not delineate between civil, ceremonial and moral; these are just terms used to help identify the three areas of Israelite life that the Mosaic Law governed.

According to classic covenant theology, Jesus came to fulfill the Law (Matthew 5:17). He did so by satisfying all of the ceremonial, civil and moral aspects of the Law. Jesus Christ is the reality behind the shadows of the Old Testament sacrificial system and thereby fulfills the ceremonial aspect of the Law. Jesus Christ also bore the penalty our sins deserved and thereby fulfilled the civil aspect of the Law. Finally, Jesus Christ lived in full accordance with the moral aspect of the Law and fulfilled the righteous requirements of the Law.

Now, the moral aspect of the Law represents the essence of the covenant of works. As such, it transcends the Mosaic economy. In other words, God has always required holiness from humanity. The covenant of works was not negated due to the fall, nor was it negated even though it was fulfilled in Christ. The moral aspect of the Law still stands as the standard of morality for mankind because it is reflective of God’s character, and that does not change. Therefore, covenant theology still sees the Mosaic Law (especially the Ten Commandments) as prescriptive for the Church, even though the ceremonial and civil aspects have been rendered obsolete in Christ.

New covenant theology sees the Mosaic Law as a whole and sees it all fulfilled in Christ (so far in agreement with covenant theology). However, because new covenant theology sees the Mosaic Law as a whole, it also sees the moral aspect of the Mosaic Law as fulfilled in Christ and no longer applying to Christians. Instead of being under the moral aspect of the Mosaic Law as summarized in the Ten Commandments, we are under the law of Christ (1 Corinthians 9:21). The law of Christ would be those prescriptions that Christ specifically stated in the Gospels (e.g., the Sermon on the Mount). In other words, the entire Mosaic economy has been set aside in new covenant theology; it no longer applies in any way to Christians. So, while new covenant theology sees a continuity between the Old and New Testaments in regards to God’s people and the way of salvation, new covenant theology draws a rather sharp line of distinction between the Old and New Testaments when it comes to the difference between the old Mosaic covenant and the new covenant mediated by Christ. The old covenant is obsolete (including the moral aspect of the Mosaic Law) and replaced by the new covenant with the law of Christ to govern its morality. http://www.gotquestions.org/questions_theology.html
Recommended Resources:The Moody Handbook of Theology by Paul EnnsandLogos Bible Software.


Read more:http://www.gotquestions.org/new-covenant-theology.html#ixzz3IcEgJd3l
திருநெல்வேலி (இருட்டுக்கடை) அல்வா - அறியாத தகவல்கள்-
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை பற்றி கேள்விப்படும் பல தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது .
1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள் இக்கடையை !
மாலை ஐந்தரை அளவில் தான் கடையே திறக்கப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மொத்த ஸ்டாக்கும் காலியாகி விட கடையை மூடி விட்டு கிளம்பி விடுகிறார்கள்.
மற்ற கடைகளை விட இங்கு அல்வா நிச்சயம் அட்டகாசமாய் இருக்க முக்கிய காரணமாக சொல்லப்படுவது இது தான்:
அல்வாவிற்கு தேவையான கோதுமையை இவர்கள் கைகளால் தான் அரைக்கிறார்கள். மேலும் அதை தயார் செய்வதும் Manual முறையில் தான் ! இது தான் அல்வாவிற்கு ஒரு யூனிக் சுவை தருகிறதாம். மேலும் இந்த அல்வா தயாரிக்கும் முறை இவர்களுக்கு மட்டுமே தெரியும் .. வேறு யாருக்கும் தெரியாது !
இப்படி கையால் தயார் செய்வதால், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிற்கு தான் இவர்களால் தயார் செய்ய முடிகிறது. அதனை மட்டும் விற்று முடித்து விட்டு, திருப்தி அடைந்து விடுகிறார்கள். இவர்கள் நினைத்தால் - கிடைத்துள்ள பெயரை வைத்து மெஷின் வைத்து இன்னும் 10 மடங்கு தயார் செய்ய முடியும் - அவ்வளவுக்கும் மார்கெட் இருக்கு என்றாலும் தங்கள் தரம் சிறிதும் குறைய கூடாது என்பதால் - பெரிய அளவில் செல்லாமல் இருக்கிறார்கள்.
பலகைகளால் ஆன பழைய கால கதவை கவனியுங்கள் !
இருட்டுக்கடை என்று பெயர் வர காரணம் - 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி " இருட்டு கடை அல்வா" என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு இங்கு காண்டா விளக்கு அகன்று ஒரு 200 வாட்ச் பல்பு எரிகிறது அவ்வளவு தான் வித்யாசம். கடைக்கு பெயர் பலகை கூட இல்லை. இருந்தும் கடையின் கூட்டமோ புகழோ குறையவே இல்லை.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ளது இக்கடை. வேறு கடைகளில் விசாரித்தால் உங்களை மற்ற இடங்களுக்கு மாற்றி விட வாய்ப்பு உண்டு. இக்கடையில் பிஜிலி சிங் அவர்களின் பெயர் போட்டு புகைப்படம் இருக்கும். அது தான் அடையாளம் !
இருட்டு கடை என்கிற பெயரில் இன்னொரு கோஷ்டி காபி ரைட் வாங்க, அவர்கள் மேல் இவர்கள் வழக்கு துவங்கி தங்கள் கடை பற்றி பல வருடங்களாக பத்திரிக்கைகளில் வெளி வந்த குறிப்புகளை காட்டி தங்களுக்கு தான் அந்த பெயருக்கு உரிமை உண்டு என போராடி வருகிறாகள்.
இவர்களின் குழும கடையாக சற்று தள்ளி விசாகா சுவீட்ஸ் என்ற கடை இருக்கிறது. இங்கும் இருட்டு கடை அல்வா பகல் வேளைகளில் கிடைக்கிறது ( பிஜிலி சிங் படம் இங்கும் இருக்கும் !)
உள்ளூர் வாசிகள் நூறு கிராம் அல்வா சுட சுட வாங்கி கொண்டு ஓரமாக நின்று ருசித்து சாப்பிட்டு விட்டு, சைடில் சென்று கை நீட்ட , சற்று மிக்சர் இலவசமாக தருகிறாகள். அதை சாப்பிட்டு விட்டு அங்கு மாட்டி யுள்ள பேப்பரை எடுத்து கை துடைத்து கொண்டே செல்வதை காண முடிந்தது
சில நேரங்களில் கியூவில் நின்றும் வாங்கி செல்வதுண்டாம். எப்பவும் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்கள் தயாராய் இருக்கின்றன. நீங்கள் சென்றவுடன் கேட்கிற அளவை கொடுத்து உடன் அனுப்பி விடுகிறார்கள். இருந்தும் தீபாவளி பொங்கல் நேரங்களில் கூட்டம் மிக அதிகமாகி இருக்கும் அல்வாவை அனைவருக்கும் பகிந்தளிக்க வேண்டிய சூழலில் ரேஷன் முறையும் அமல் படுத்தப்படுமாம் ! ( ஒரு கிலோ கேட்டால் கால் கிலோ தருவது !)
இவ்வளவு அற்புதமான, மிக சுவையான, தமிழகத்தின் நம்பர் : 1 அல்வா - ஒரு கிலோ 140 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா?
இங்கு வாங்கப்படும் அல்வா ஒரு வாரம் வரை கெடாது ! தாமிரபரணி தண்ணீரில் கிடைக்கும் ஓர் அற்புத சுவை மிகுந்த திருநெல்வேலி அல்வா..! ..!

Friday, 7 November 2014

கார் ஓட்டும்போது செல்போன்?
ர.ராஜா ராமமூர்த்தி
சென்னையில் கார் ஓட்டும்போது எத்தனை பேர் செல்போனைப் பயன்படுத்துகிறார்கள்? சென்னையின் முதுகெலும்பான அண்ணா சாலை வழியாகச் சென்று பாருங்கள். ஐ.டி.யில் இருந்து டாக்ஸி வரை அனைத்துவிதமான டிரைவர்களையும் கையில் போனுடன் பார்க்க முடியும். ஒரு குறுந்தகவல் வந்தாலோ, அனுப்பினாலோ 4 முதல் 6 விநாடிகள் வரை சாலையைவிட்டு கண்கள் விலகுகின்றன. இந்த விநாடிகளுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
முன்னே செல்லும் வாகனம் திடீரென பிரேக் போடலாம். நீங்கள் கவனித்துவிட்டீர்கள் என நினைத்துக்கொண்டு, இன்னொரு வாகனம் சிக்னல் கொடுத்த பின்பு உங்கள் லேனுக்குள் நுழையலாம். திடீரென்று ஒரு டூவீலர், தவறான வழியில் வந்துகொண்டிருக்கலாம். நெடுஞ்சாலையானால், லேன் மாறுவதையே உணராமல் மாறிக் கொண்டிருக்கலாம். மாடுகள் சாலையைக் கடந்து கொண்டிருக் கலாம். இப்படி எத்தனையோ சம்பவங்கள் சில விநாடிகளுக்குள் நடந்துவிட முடியும். மணிக்கு 88 கி.மீ வேகத்தில் செல்லும்போது, 6 விநாடிகள் வரை சாலையைவிட்டு கண்கள் விலகினால், ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கான தூரத்தை, பார்க்காமலேயே கடக்கிறோம் என்கிறது ஓர் ஆராய்ச்சி.
தற்போது நிறைய பேர் டச் ஸ்க்ரீன் போன்கள் வைத்திருக்கிறார்கள். சாலையில் பதிந்திருக்க வேண்டிய அவர்களது பார்வை, போன்களில் நிலைகுத்தியிருந்ததைப் பார்க்க முடிகிறது. முக்கியமாக, இவர்களில் பெரும்பாலானோர் டாக்ஸி டிரைவர்கள் இல்லை. நல்ல வேலையில், நான்கு பேரை வழிநடத்தும் இடத்தில் இருப்பவர்களைப் போலத்தான் தெரிந்தார்கள்.
செய்வது தவறு என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. இருப்பினும் ஃபேஸ்புக்கில் விழும் அந்த ஒரு லைக்கும், வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷனும் கண்ணையும் கையையும் இழுக்கிறது. அது மட்டுமல்ல, ஸ்டீயரிங்கில் பிரத்யேக ஹோல்டரில் போனைப் பொருத்திக்கொண்டு பயன்படுத்தும் அளவுக்கு பலர் அடிமையாகிவிட்டதைக் காண முடிகிறது. டூவீலர்களும், ஆட்டோக்களும் நிறைந்திருக்கும் சென்னை போன்ற நகர டிராஃபிக்கில், சில விநாடிகள் கவனம் சிதறினால், என்ன ஆகும் என்பதைச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.
உலகின் மிக வேகமாக வளரும் ஸ்மார்ட்போன் மற்றும் ஆட்டோமொபைல் சந்தையாக, நம் நாடும் உருவெடுத்துவரும் நேரத்தில், இது குறித்த விழிப்புஉணர்வு அவசியம். உலகளவில், 10 பேரில் இருவர் கார் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துகிறார்களாம். நீங்கள் இந்த வாசகத்தைப் படிக்கும்போது, உலகம் முழுக்க 6,60,000 பேர் கையில் போனுடன் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்ஸோஸ் (Ipsos OTX) எனும் மார்க்கெட் ரிசர்ச் அமைப்பு, கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் இந்தியா குறித்து அதிர்ச்சியான தகவல்களைச் சொல்லியிருக்கிறது.
அதன்படி, உலகிலேயே கார் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துபவர்கள் அதிகம் உள்ள நாடு, சவுதி அரேபியா. அங்கு 43 சதவிகிதம் பேர் கார் ஓட்டிக்கொண்டே, போனைப் பயன்படுத்துகிறார்கள். அடுத்து தென்னாப்பிரிக்கா, தென்கொரியா நாடுகள் வர, நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அதாவது, நம் நாட்டில் இந்தக் கணக்கு 29 சதவிகிதமாம். நமக்கு அடுத்த இடங்களில் சீனாவும், அமெரிக்காவும் இருக்கின்றன. உலகிலேயே மிகவும் கடுமையான சாலை விதிகள் கொண்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் (18 சதவிகிதம்) இருக்கிறது. 
அமெரிக்க அந்நியன்!
அமெரிக்காவின் யூடா (Utah) பல்கலைக் கழகத்தின் கூற்றுப்படி, கார் ஓட்டும்போது கையில் போன் இருந்தாலோ, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ பயன்படுத்தினாலோ, ஓர் ஓட்டுநரின் எதிர்வினை நேரம், மது அருந்தி வாகனம் ஓட்டுபவரின் எதிர்வினை நேரத்தைவிட தாமதமாக இருக்கிறதாம். அப்படியானால் வருங்காலத்தில், மது அருந்தி வாகனம் இயக்குபவர்களைவிட, போன் பயன்படுத்திக்கொண்டே ஓட்டுபவர்களால், அதிக உயிரிழப்புகள் ஏற்படப் போகின்றனவா?
செல்போனைப் பயன்படுத்திக்கொண்டே கார் ஓட்டுபவர்களைத் தண்டிக்க, அந்நியன் ஒருவர் இருக்கிறார் தெரியுமா? கடந்த மார்ச் மாதம், அமெரிக்காவில் சான்ஃப்ரான்ஸிஸ்கோ நகரச் சாலைகளில் செல்போனைக் கையில் வைத்துக்கொண்டு கார் ஓட்டியவர்கள், ஒரு விளம்பர பேனரைப் பார்த்ததும் அதிர்ச்சியில் போனைக் கீழே போட்டுவிட்டு ஒழுங்காக வாகனம் ஓட்டினார்கள். அந்த விளம்பர பேனரில் என்ன இருந்தது தெரியுமா?
இவர்களைப் போன்றே கார் ஓட்டும்போது, போன் பயன்படுத்தியவர்களைப் புகைப்படம் எடுத்து, குற்றவாளிகள் போல, விளம்பர பேனரில் பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. இதைச் செய்தது போலீஸ் அல்ல.  பிரையன் சிங்கர் என்ற சமூக ஆர்வலர்  Texting While in Traffic (TWIT - Twitspotting.com) என்ற பெயரில் இப்படி ஒரு விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறார். கார் ஓட்டும்போது யாராவது செல்போன் பயண்படுத்தினால், அந்தக் காட்சியை அந்தச் சாலையில் பயணிக்கும் (வாகன ஓட்டுனராக அல்லாமல், பயணியாகப் பயணிக்கும்) யார் வேண்டுமானாலும், புகைப்படம் எடுத்து இவருக்கு அனுப்பலாம். இவரே சொந்த செலவில் விளம்பர பேனர் வைக்கிறார்.

Tuesday, 4 November 2014

கூடலூர் பஸ் விபத்து: பயணிகளைக் காத்த டிரைவர்... பிரமிக்க வைத்த பிரேமா!
Posted Date : 04-11-2014 06:07:05 PMLast updated : 04-11-2014 08:34:52 PM
ன்னும் மிரட்சியில் இருந்து மீளவில்லை அவர்கள். அவர்கள் ....?  கடந்த திங்கட்கிழமை கேரள மாநிலத்தின் சுல்தான்பத்தேரிஎன்ற ஊரிலிருந்து தமிழக பகுதியான கூடலுருக்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள்.
80 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த அப்பேருந்து பெரும் விபத்திலிருந்து மீண்டாலும், அதில் பயணித்தவர்கள் இன்னமும் தங்களைத்தாங்களே கிள்ளி்ப்பார்த்துக்கொள்ளாத குறையாய் அதிசயித்துக்கிடக்கிறார்கள்.
மொத்த பயணிகளின் கரங்களும் ஒரு பயணியை நோக்கி கும்பிடுகிறது. அவர் பிரேமா. இன்று அத்தனை உயிர்களும் நிம்மதியில் கிடக்க அவரும் ஒரு முக்கிய காரணம்.

தமிழகத்தின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியாக விளங்குகிறது. நீலகிரி மாவட்டத்தின் கூடலூருக்கு மூன்று மாநில பேருந்துகளின் இயக்கமும் உண்டு.
கடந்த திங்கள்கிழமை (03.10.14) காலை, வழக்கம்போல  கேரளப்பகுதியான சுல்தான்பத்தேரி என்ற ஊரிலிருந்து  KL 15 7732 என்ற பதிவு எண்கொண்ட கேரள அரசுப்பேருந்து புறப்பட்டது. அதன் ஓட்டுநர்அப்துல் ரஹ்மான். காலை 7.30 மணிக்கு புறப்பட்ட அந்த பேருந்தில் நிற்க இடமில்லாத அளவுக்கு பயணிகள் நிறைந்திருந்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அடக்கம்.
தமிழக பகுதியான கூடலூர் தாலுகாவுக்குட்பட்ட நெலாக்கோட்டை எனும் இடத்தில், சில பயணிகளை இறக்கிவிட்டு திரும்ப புறப்பட்டபோது, பேருந்து ஓட்டுநர் அங்கு தண்ணீர் வாங்கி குடித்துள்ளார். மீண்டும் 8.25 மணிக்கு கூவச்சோலை என்ற இடத்தில் ஏழு பயணிகளை ஏற்றியபடி புறப்பட்டது.  பயணிகளின் பேச்சு சத்தமும், பேருந்தின் ஓட்டம் எழுப்பிய என்ஜின் சத்தமும் போட்டிப்போட்டு எதிரொலித்துக்கொண்டிருக்க, அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது.

பேருந்து இயல்பை மீறி சாலையில் ஓடுவது பயணிகளுக்கு புரிந்தது. கொஞ்ச நேரத்தில் பேருந்து முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்தது. பயணிகளின் அலறல் அந்தப் பகுதியை அதிரவைத்தது. இத்தனைக்கும் காரணம் டிரைவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி. வலியில் துடித்தாலும் டிரைவர் அப்துல் ரஹ்மான், ஒரு டிரைவருக்கான கடமை உணர்ச்சியுடன் பேருந்தில் இருந்த பயணிகளின் உயிரைக் காக்கும் பொருட்டு, தன் உடல்நிலையையும் கருதாமல் தன் சக்திக்கும் மீறிய பிரயோகத்துடன் பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினார். சாலையின் வலதுபக்கமாக இருந்த குடியிருப்புகளில் மோதாமலும், அதேசமயம் அங்கிருந்த 40 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்துவிடாமல் தடுக்கவும், ஸ்டீயரிங்கை இடதுபக்கமாகத் திருப்பி அதற்கு மேல் முடியாமல் சரிந்து மயங்கினார்.
இந்த போராட்டத்தை கவனித்துவந்து பிரேமா என்ற பயணி, சட்டென மேற்கொண்டு பேருந்து முந்தி செல்வதை தடுக்கும் வகையில் பேருந்தின் பிரேக்கை அழுத்திப்பிடித்தார். இதனையடுத்து பேருந்து, சாலையோரமாக மண் மேட்டில் மோதி நின்றது. அத்தனை உயிர்களும் காப்பாற்றப்பட்டது. தன் உயிரையும் பொருட்படுத்தாது போராடிய டிரைவரின் செயலும், அதற்கு துணைநின்ற பிரேமாவின் துணிச்சலும் பயணிகளின் நெஞ்சை நெகிழவைத்துவிட்டது.

பிரேமாவிடம் பேசினோம். அந்த “திக் திக்“ அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''நான் கூடலூரிலுள்ள ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் பணிபுரிகிறேன். வழக்கமாக இந்த பஸ்ஸில்தான் கூடலூருக்குச் செல்வேன். சம்பவம் நடந்த அன்றும் எப்போதும்போல சரியாக 8:25 மணிக்கு பஸ் வந்தது. கேரளாவில் இருந்து வருவதால், பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழியும்.
வழியில் ஏறுபவர்களுக்கு உட்கார இடம் கிடைக்காது. அதனால், நான் எப்போதும் டிரைவர் சீட் அருகே உள்ள பேனட்டில் அமர்ந்துகொள்வேன். ஆனால் அன்று, வழக்கத் தைவிட கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. டிரைவர் என்னை அமரச் சொன்னபோது, 'இல்லை அண்ணா, நான் நின்றுகொள்கிறேன். கூட்டம் அதிகமாக இருக்கிறது' என்று சொல்லிவிட்டு நின்றபடியே பயணம் செய்தேன்.

பேருந்து கிளம்பிய சிறிது தூரம் சென்றதும், திடீரென நிலைதடுமாறியது. டிரைவர், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு துடித்தார். அவரால் பேருந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நிலையிலும், தன் சக்தியெல்லாம் திரட்டி ஸ்டீயரிங்கை இடதுபக்கமாகத் திருப்பியபடி, சீட்டில் சரிந்துவிட்டார். நான் அந்தச் சூழ்நிலையை சட்டெனப் புரிந்துகொண்டுவிட்டேன்.
'டிரைவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். உதவிக்கு வாங்க' எனக் கூச்சலிட்டபடியே, டிரைவர் சீட் பகுதிக்குள் புகுந்து பிரேக்கை மிதித்தேன். என் அருகில் இருந்த ஒருவர் ஸ்டீயரிங்கை இடதுபக்கமாக இழுத்துப் பிடித்தபடி இருக்க, பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மண் மேட்டில் மோதி நின்றதுவிட்டது. வலதுபக்கமாக பேருந்து சென்றிருந்தால், வீடுகளில் மோதி 40 அடி பள்ளத்தில் உருண்டிருக்கும். அந்த சம்பவத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது'' என்ற பிரேமா, ரிலாக்ஸ் ஆக சிறிது நேரம் பிடித்தது.

"பஸ் நின்றதும் உள்ளே இருந்தவர்கள் அச்சத்தில் அலறியடித்து ஜன்னல் வழியே குதிக்க முற்பட்டனர். அவர்களை சமாதானம் செய்து ஆம்புலன்ஸுக்கு தகவல் சொன்னோம். நானும் இன்னொரு பயணியும் டிரைவர் அண்ணாவை பஸ்ஸில் இருந்து ஆம்புலன்ஸுக்கு இறக்கினோம்.
உயிருக்குப் போராடும் சமயத்திலும் எங்களை காப்பாற்ற முயற்சிசெய்த அவரது மனதை நினைத்து பேருந்தில் பயணித்த அனைவருக்கும் கண்ணீர் வந்துவிட்டது. நாங்கள் பிழைத்துக்கொண்டோம் என்ற மகிழ்ச்சி நீடிப்பதற்குள், மாரடைப்பால் மருத்துவமனைக்குக் கொண்டுபோகும் வழியிலேயே டிரைவர் அண்ணா உயிரிழந்து விட்டார் என்ற தகவல் வந்து வேதனையை ஏற்படுத்திவிட்டது'' என்று கண் கலங்கினார் பிரேமா.
மகத்தான மனித உயிர்களை சாதுர்யமாக காப்பாற்றிய பிரேமாவுக்கு நம் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கிளம்பினோம்.

- ஜெ.சசீதரன் (மாணவப் பத்திரிகையாளர்)