Wednesday, 17 September 2014

டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு: சரியா தவறா - சமூக ஆர்வலர்கள் கருத்து

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்:
இந்த தீர்ப்பு வருத்தமளிக்கிறது. குற்றவாளிகளை உருவாக்குவதில் சமூகத்துக்கும் பங்கு இருக்கிறது. தூக்கு தண்டனை எப்போதும் ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்கப்படுகிறது. பணக்காரர்கள், அரசியல்வாதிகள் ஏன் தூக்கு தண்டனை பெறுவதில்லை? தண்டனை என்பது ஒருவர் திருந்துவதற்கு உதவவேண்டும். ஆனால், தூக்கிலிட்ட பின் எப்படி திருந்த முடியும்? பிறர் தவறு செய்ய அஞ்சுவார்கள் என்பதற்காக ஒருவரை தண்டிப்பது தவறு.
பெண்ணிய எழுத்தாளர் வ.கீதா:
தூக்கு தண்டனைக்கு பல பெண்ணியவாதிகள் எதிராகவே உள்ளோம். இவ்வழக்கு டெல்லியில் நடந்ததாலும், ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டதாலும் இந்த வழக்கு அதிக கவனம் பெற்றிருக்கிறது. வாச்சாத்தியில் தாழ்த்தப்பட்ட பெண்களை மிக கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய 284 பேரை தூக்கில் போட முடியுமா? குற்றம் சாட்டப்பட்டவர்களின் சமூக பின்னணியும் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் கே.வனஜா:
“நான் பொதுவாக தூக்கு தண்டனைக்கு எதிரானவர் என்றாலும் இந்த சம்பவம் மிகவும் கொடூரமான முறையில் நடந்துள்ளது என்பதால் இந்த வழக்கில் தூக்கு தண்டனை சரியானதுதான். இது போன்ற அனைத்து வழக்குகளிலும் விரைவாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். டெல்லி சம்பவம் நடந்த அதே சமயத்தில் நடந்த வித்யா மீதான அமில வீச்சு வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை” என்றார்.

குழந்தை திருமணம்: இரண்டாம் இடத்தில் இந்தியா


தெற்காசியாவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா.வின் யூனிசெப் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தெற்காசியாவில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிராந்தி யத்தில் சுமார் 46 சதவீத பெண்களுக்கு அவர்கள் 18 வயதை எட்டும் முன்னரே திருமணம் நடைபெறுகிறது. இதில் 18 சத வீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள்.
குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குழந்தை திருமணத்தை தடுக்க பெண் குழந்தைகள் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதற்கு அவர்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற வேண்டும்.
தெற்காசிய நாடுகளில் குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்வதை கண்டிப்புடன் அமல் படுத்த வேண்டும். அப்போதுதான் பெண் குழந்தைகளின் சரியான வயதைக் கண்டறிந்து குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த முடியும். ஆனால் இந்தப் பிராந்தி யத்தில் 60 சதவீத குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படுவதில்லை. இந்தியாவில் மட்டும் கடந்த 2000 முதல் 2012-ம் ஆண்டு வரை 7.1 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெணா என்பதை கண்ட றிந்து பெண் குழந்தை என்றால் கருவிலேயே கொலை செய்யும் வழக்கம் தெற்காசியாவில் அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்த சமூக கொடுமை இன்னமும் தொடர்கிறது.
வங்கதேசம், இந்தியா, பாகிஸ் தான், இலங்கை ஆகிய நாடுகளில் 5 வயது முதல் 13 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 2.7 கோடி பேர் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். குழந்தைகளுக்கான கழிப்பறை வசதியும் போதுமானதாக இல்லை. இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 48 சதவீதம் பேருக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை.
தெற்காசியாவில் ஊட்டச்சத்து குறைபாடும் அதிகமாக உள்ளது. சுமார் 38 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக 20 லட்சம் குழந்தைகள் ஐந்து வயதை எட்டும் முன்னரே உயிரிழக்கின்றனர்.

தொழிலாளியின் கனவு இல்லத்தை நனவாக்கிய மாணவர்கள்: குருவி போல் சேகரித்த பணத்தில் வீடு

தொழிலாளி மனோகர் புதிதாக கட்டிய வீட்டின் முன் திரு இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்
தொழிலாளி மனோகர் புதிதாக கட்டிய வீட்டின் முன் திரு இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்
வீடு கட்டுவது என்பது ஒவ்வொரு தனி மனிதனின் லட்சியமாக உள்ளது. நகரப்பகுதி முதல் கிராமங்கள் வரை தற்போது குடியிருப்புகளின் தேவை அதிகரித்து இருப்பதால், வீட்டுமனைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இச்சூழ்நிலை யில், பள்ளி மாணவர்கள் தாங்கள் சிறுக, சிறுக சேமித்த ரூ.2.5 லட்சத்தை கொடுத்து, கூலி தொழிலாளி வீடு கட்ட உதவியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூட்டு பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மனோகர் (50). இவர் தனது மனைவி மற்றும் இரு ஆண், இரு பெண் குழந்தைகளுடன் மண் குடிசை வீட்டில் குடியிருந்து வந்தார். இவரது வீட்டின் அருகே திரு இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் பிளஸ் டூ வரை 1,800 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
வேதனை தந்த குடிசை
குடிசை வீடு என்பதால் மழைக்காலங்களில் மனோகரனின் வீட்டில் மழை நீர் தேங்கி நிற்பதையும், மனோகரனின் குடும்பத்தினர் குடிசைக்குள் புகும் தண்ணீரை வெளியேற்றுவதையும், பள்ளிக்கு செல்லும் போது மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் வேதனையுடன் பார்த்து செல்வர்.
மனோகர் தனது வீட்டை இடித்து விட்டு காங்கிரீட் வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருந்தபோதும், சொற்ப வருமானத்தில் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை. மனோகரன் வீட்டின் நிலையை பார்த்து பரிதாபப்பட்ட திரு இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பாதர் ரோபின்ஸி, மாணவர்கள் மூலம் மனோகரனின் கனவு இல்லத்தை நனவாக்கியுள்ளார். இதன் மூலம் மாணவர்களிடையே சிறுசேமிப்பையும், உதவும் உள்ளத்தையும் வளர்த்துள்ளார்.
நனவாக்கிய மாணவர்கள்
இது குறித்து பாதர் ரோபின்ஸி கூறியதாவது:
மனோகர் தனது குடிசை வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட சிரமப்பட்டு வந்தார். ஓராண்டுக்கு முன் பள்ளி மாணவர்களிடம் இது குறித்து சுற்றறிக்கை விட்டேன். அதில், நாம் அடுத்த ஆண்டு வரை நம் தேவை போக, மீதி பணத்தை உண்டியலில் சேர்த்து, மனோகருக்கு உதவி செய்ய பயன்படுத்துவோம் என்று வேண்டுகோள் விடுத்தேன்.
மாணவ, மாணவியர்கள் தங்கள் செலவுக்கு பெற்றோர் வழங்கும் பணத்தில் சிறு தொகையை தாங்களே சேகரிக்க தொடங்கினர். ஓராண்டில் ரூ.2.5 லட்சம் சேகரித்து மனோகருக்கு வீடு கட்ட உதவினோம். மாணவர்கள் கொடுத்த பணத்துடன் மனோகர் ரூ.1.5 லட்சம் போட்டு தனது கனவு இல்லத்தை நனவாக்கியுள்ளார். அடுத்த கட்டமாக இன்னொரு பெண்ணுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளோம். எங்கள் மாணவர்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் இதே போல் ஏழைகளுக்கு உதவுவார்கள் என்றார் அவர்.
மகிழ்சியும், சந்தோசமும்
மாணவர்கள் கூறும்போது, “சின்ன சின்னதா நாங்க சேர்த்த காசு, பெருசா ஒரு குடும்பத்தை சந்தோசப்படுத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கு இதைவிட வேற என்ன சொல்ல இருக்கு” என்றனர்.
கடந்த வியாழக்கிழமை புதிய வீட்டுக்கு பள்ளி மாணவ, மாணவியர்களை அழைத்து மனோகர் கிரகப்பிரவேசம் நடத்தி முடித்துள்ளார். கடந்த நாட்களில் மனோகரின் குடிசை வீட்டை பரிதாபத்துடன் பார்த்து செல்லும் மாணவர்கள் தற்போது தங்கள் சேமிப்பு பணம் மூலம் கம்பீரமாக எழுந்து நிற்கும் வீட்டை பாசத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இருபெரும் நாயகர்கள்!

முத்துமுனியன் - இயேசுபுத்திரன்
முத்துமுனியன் - இயேசுபுத்திரன்
நீர்ப் பயணத்தில் சந்தித்த இரு ஆச்சரிய மனிதர்கள் இவர்கள். ஒருவர் தன்னுடைய இளவயதில் வெடி விபத்தில் - பார்வையை அல்ல; இரு கண்களையுமே - இழந்தவர். ஆனால், அவருடைய நம்பிக்கை அகக்கண்ணாக மாறி அவரை இயக்குகிறது. நம்மைப் போல நடக்கிறார், பஸ் ஏறுகிறார், கடல் தொழிலுக்குச் செல்கிறார், மீன் பிடிக்கிறார். இன்னொருவர் ஆக்ரோஷ அலைகளும் வாரிச் சுருட்டும் சுழல்களும் மிக்க குமரிக் கடலில் சிக்கிய 18 உயிர்களைத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியவர். யார் உதவிக்கு அழைத்தாலும் உடனே கடலில் குதிப்பவர். அவருடைய தர்மம் அவரை வழிநடத்துகிறது.
தன்னம்பிக்கை நாயகன்!
“ஏல...”
“ஏல...”
“யாழி...”
“யாழி...”
“கோவேல்...”
“வாங்க...”
“வலிய...”
“பணிய...”
“ஏல...”
“ஏல...”
- கடற்கரையை நெருங்கும்போதே அழைக்கிறது அம்பா பாடல். கடலையே கயிறு கட்டி இழுப்பதுபோல, கரை வலை இழுத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆண்களும் பெண்களும். மீன்பிடி முறைகளிலேயே கொஞ்சம் வித்தியாசமான முறை கரை வலை முறை. கரையிலிருந்து சில மைல் தூரத்தில், கடலில் வலையை அரை வட்ட வடிவில் விரித்துவிட்டு, கரையிலிருந்து அதைக் கயிறு கட்டி இழுக்கும் மீன்பிடி முறை இது. விசேஷம் என்னவென்றால், ஆண்களோடு பெண்களும் பங்கேற்கும் மீன்பிடி முறை. பெரும் பகுதியான உழைப்பு கரையிலிருந்தே கொடுக்கப்பட்டாலும், கடலிலும் சிலர் நின்று ஒழுங்குபடுத்துவார்கள். கயிற்றை இழுக்கும்போது கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். இத்தகைய தருணங்களில் அவர்கள் பாடும் அம்பா பாடலைக் கேட்கத்தான் கோதண்டராமர்கோவில் சென்றிருந்தேன். ராமேஸ்வரத்துக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதி இது. முத்துமுனியன் முனிய சாமியை அங்குதான் சந்தித்தேன். பாரம்பரியமான பாடலினூடே, அன்றைய தினம் ராமேஸ்வரம் பகுதி கடலோடிகளை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்ற செய்தியையும் கலந்தடித்துப் பாடியவாறே வலையை இழுத்துக்கொண்டிருந்தார். மிகுந்த உற்சாகத்தோடு பாடிக்கொண்டே வலை இழுத்தபோதுதான் அவரிடம் அந்த வேறுபாட்டை உணர்ந்தேன்: அவருக்குக் கண்களே இல்லை!
“எனக்குச் சொந்தூரு தனுஷ்கோடி. பெரும்புயலு அடிச்சுச்சுப் பாருங்க, அதுலயே நான் தப்பினவன். சின்ன வயசுல நல்ல பழக்கம் ஏதுமில்ல. காலியாதான் திரிஞ்சன். மொரட்டு சுபாவம். கைக்துடுக்கு வாய்த்துடுக்கு. பேச்சு நீண்டா சாத்திருவேன். ஒரே அடி. இப்பமே அறுவத்தியஞ்சி நெருங்குது, நல்லாத்தானே இருக்கன்? அப்ப இன்னும் நல்லா வாட்டஞ்சாட்டமா இருப்பன்.
உத்த ஒரே தொணயா எங்கய்யா இருந்தவரைக்கும் கஸ்ட நஸ்டம் தெரியல. ஒரு நா கடலுக்கு எங்கய்யாகூடப் போயிருந்தன். வலய இழுக்குறப்போ, மீனுங்ககூடவே ஒரு சொறி வலயில ஏறிடுச்சு. வலய இழுத்த வேகத்துல அவரு நெஞ்சுல பட்டுடுச்சு. ‘ஏ... யப்பா... சொறிடா... தொட்டுராதடா’ன்னார். அவ்ளோதான். நெஞ்சை அரிச்சிக்கிட்டு ரத்தம் கொப்புளிச்சிச்சி. போய்ட்டார். அப்பவும் திருந்தல. வாரிக் கொடுக்குற கடல்ல வெடிய போட்டு மீன் புடிச்சேன்.
கடலம்மா எவ்வளவு பொறுப்பா? ஒருநா வெடிய போடும்போது, கையிலேயே வெடிச்சிடுச்சு. அப்பிடியே மண்டை ரெண்டா செதறிட்டு. கண்ணெல்லாம் காலி. படகுல போட்டு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கிட்டு ஓடுறாங்க. ‘ஏ... யய்யா... புயல்லயே பொழச்சவன் நானு, என்னய காப்பாத்தி மட்டும் உட்ருங்க, நாஞ் சாவ மாட்டன். பொழச்சிக்குவன்’னு அனத்திக்கிட்டே இருந்தவன் அப்படியே மயங்கிட்டன். ஆஸ்பத்திரில ஒரு வாரஞ் செண்டு நெனப்பு வந்தப்போ, கண்ணு இல்ல. உசுரப் பொழைக்கவெச்சதே பெரிசுன்னுட்டாங்க.
நெலகொலஞ்சி ஊர் திரும்பினப்போதாம் தெரிஞ்சிது, எம் மேல ஊருக்கு இருந்தது பயம் இல்ல, அருவருப்புன்னு. ச்சீ... என்னடா வாழ்க்க நாம வாழ்ந்ததுன்னு போயிட்டு. ஒரு பய சீந்தல. கடக்கரயில நெதம் வந்து ஒக்காந்திருக்குறதைப் பாத்துட்டு, ஒரு கூட்டம் ஒரு நா எரக்கப்பட்டு கொஞ்சம் மீனும் சோறும் தந்துச்சு. ‘அய்யா... எனக்கு சோறு வேணாம், நா பிச்ச எதிர்பாக்கல, வேல கொடு, என்னால செய்ய முடிஞ்சதுக்குக் கூலி கொடு’ன்னு கேட்டேன். அவங்களுக்கு மலப்பு. கடத் தொழிலுக்கு ஒடம்புதான் உசுரு. கடலோடுறவனுக்கு ஒடம்பு முழுக்க கண்ணா இருக்கணும். எனக்குக் கண்ணே இல்ல. நா வுடுறதா இல்ல. சேத்துக்கிட்டாங்க.
ஒடம்பு அத்துக்கெடந்தப்போ, கிராமத்துல ஒரு ஆத்தாதான் எரக்கப்பட்டு உதவுனா. ஒழைச்சத அந்த ஆத்தாகிட்ட கொண்டுபோய் கொடுத்தன். ஒரு நா அந்த மவராசி செத்துட்டா. அந்த ஆத்தாளுக்கு ஒரு மவ. ஏ... ஆயா நா ஒன்னக் கடசி காலம் வரைக்கும் என் ராணி மாரி வெச்சு பாத்துக்குவேன். என்னய கட்டிக்குறீயான்னேன். சரின்னுச்சு. கட்டிக்கிட்டேன். மூணு புள்ளைங்க. என்னய நம்பி வேல கொடுத்தவங்களுக்கும் வாழ்க்க கொடுத்தவளுக்கும் நம்பிக்க கெடாம விசுவாசத்தக் காப்பாத்துறன்.
அதிகாலயிலயோ நடுராத்திரியிலயோ தொழிலுக்குக் கூப்பிட்டா ஒடனே ஓடியாந்திருவேன். கவனமா தொழில் பண்ணுவேன். கடுசா உழைப்பென். கண்ணில்லேன்னு நா நெனக்கிறதே இல்ல. மனசு முழுக்க நம்பிக்க கெடக்கு. வாரிக் கொடுக்க கடலம்மா இருக்கா. நாம இயற்கய துன்புறுத்தலன்னா, அதவிட நமக்குத் தொண கெடயாது. என்ன நா சொல்றது?”
கேள்விக்குப் பதில் எதிர்பார்க்காமல் ஓடுகிறார். அம்பா பாடல் தொடர்கிறது...
“ஏல...”
“ஏல...”
தர்மத்தின் தலைவன் !
“யாரு, எங்கூரு எம்ஜிஆரையா தேடிக்கிட்டு ருக்கீங்க?” - இயேசுபுத்திரனைக் கன்னியாகுமரி நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறது.
கடல் நடுவே இருக்கும் பாறைகள் வெளியிலிருந்து கடற்கரைக்குச் செல்பவர்களுக்குக் கிளர்ச்சியூட்டக் கூடியவை. அழகானவை. கடற்பாறைகளின் முழு அடியையும் ஆபத்தையும் கடலோடிகள் மட்டுமே அறி வார்கள். கரைக்கடலில் பாறைகள் நிறைந்த பகுதியைத் தாண்டிச் செல்வதை ஆழி தாண்டுதல் என்று சொல்வார்கள் அவர்கள். மிகச் சவாலான பகுதி அது.
இந்தியப் பெருநிலத்தின் எல்லையான குமரிக் கடலில் இப்படி நிறைய ஆபத்தான பாறைகள் உண்டு. “அதோ தெரியிதே அது பேரே மரணப் பாறன்னுதாம் சொல்லுவம். அதுக்கிட்ட அலயில விழுந்தம் விறுவிறுன்னு இழுத்து, பாறயிடுக்குல கொண்டுபோயி சொருக்குன்னு சொருகியிரும். அதோ தெரியிதே கொஞ்சம் சின்னதா, அந்தப் பாறகிட்ட ஆப்புட்டாலும் அப்பிடித்தாம். மேல பாக்க ரெண்டு ஆளு ஒசரம் தெரியிதுல்ல, உள்ள போய்ப் பாத்தீங்கன்னா அசந்துருவீங்க. அவ்ளோ உசரம். மத்ததெல்லாமும் லேசுபட்டதுன்னு நெனைக்க வேணா. கடத் தொழிலுக்குப் போறவங்களே அசந்தா சிக்கிக்குற எடம் இது. கடலப் பத்தி ஒண்ணுந் தெரியாத சுற்றுலா பிராயணிங்க சிக்கிக்கிட்டா என்னாவும்? இதுவரைக்கும் பல நூறு பொணம் வுழுந்துருக்கு, பாருங்க இங்கெ...” - உள்ளூர்க்காரர்கள் இப்படி ஒவ்வொரு பாறைக்கும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள்.
குமரிக் கடலில் கடலலையின் அடியில் படகு தவறிக் கவிழ்ந்தாலும் சரி, பாறையில் ஏறி ஆட்கள் யாரும் விழுந்தாலும் சரி, உடனே அழைப்பு செல்லும் இடம் இயேசுபுத்திரன் வீடு.
“சின்ன வயசுலேந்தே எம்ஜிஆர்னா ஒரு பிரியம். அதுவும் கடலோடியா, படகோட்டியா நடிச்சாரு பாருங்க சார், அவரு மேல உசுராயிட்டு. அப்போ மனுசன்னா, என்னா சார்?
(பாடிக்காட்டுகிறார்)
‘உழைத்து வாழ வேண்டும்... பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...’
‘இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...’
இதாம் நம்ம லட்சியம். சும்மா பேசுனா, லட்சியமாயிடுமா? ஒதவின்னு வந்தா ஒதவணும் சார், ஒதவணும். எங்கிட்ட யாரு ஒதவின்னு கேட்டு வந்தாலும் ஒதவிருவன். அப்படி ஒரு நா, கடக்கரயில நின்னுக்கிட்டிருக்கன். திடீர்னு கடல்ல தவறி வுழுந்துட்டாங்கன்னு கூட்டம் ஓடுது. நான் யோசிக்குறன். என் தலைவன் படத்துல இந்நேரத்துக்கு என்னா செய்வான்னு. ‘டேய் இயேசுபுத்திரா, நீ யோசிக்காதரா... நீ மனுசன்னா ஒதவணும்... ஓடு.. குதி’ன்னு நெஞ்சுலேந்து ஒரு கொரல். அவ்ளோதாம். குதிச்சுட்டன். அப்போலேந்து இது பழக்கமாயிடுச்சு சார். இங்கெ பாருங்க, கையில தலைவன்...” என்று கையில் பச்சை குத்தப்பட்டிருக்கும் எம்ஜிஆரைக் காட்டுகிறார்.
“கடலப் பாக்க வந்து, பாறயில ஏறிக் கடல்ல வுழுந்து, சுழல்ல மாட்டிக்கிறவங்க மட்டுமில்ல சார், எங்காளுங்களே பலரு கடல்ல கட்டுமரத்துல, வள்ளத்துல போம்போது மாசா அடிச்சித் தூக்கிக் கவுத்துரும். ஓடுவன். தேடித் தூக்கியாருவன். நெறய பேரு பொணமாவே போயிருவாங்க சார், அதயும் தூக்கிட்டு வந்து போடுவன். நல்ல ஆழத்துல படகுல என்ஜின் கடச்செடி கொடிங்கள்ல சிக்கிரும். ஓடுவன். கடலுக்குள்ள குதிச்சு, ஆழம் போயி, சிக்கியிருக்க செடி கொடிங்களை அறுத்துடுவன். சமயத்துல, வள்ளம் ஒருபக்கமா கவுந்துரும். கீழ போயி சங்கிலியைக் கோத்துட்டு, தூக்க ஒத்தாச பண்ணுவம்...”
“கடல் பயமாக இருக்காதா?”
“நம்ம கடலம்மா புள்ளைங்க சார். அதாம் ஒரே நம்பிக்க. நம்ம நமக்காவ குதிக்கல. நாலு பேர் உசுருக்காகக் குதிக்கிறம். கடலம்மா பாத்துக்குவான்னு ஒரு நம்பிக்க.
எல்லாமே சாவுக்குத் துணிஞ்சு எறங்குற வேலதான் சார். பயங்கர ஆழம். சொழலு வேற இழுக்கும். வரிப்புலியன் சுறா, மொரட்டுத் திருக்கைங்க கெடக்கும். கடப்பாம்புங்க கெடக்கும். கண்ணுல சிக்கினம், சிக்குன வேகத்துல மேல போய்ச் சேர வேண்டியதான். அதெல்லாம் வுடுங்க. மூச்ச அடக்குறது இருக்கே, அத சரியா கணக்குப் பண்ணாம வுட்டோம்னாலும் அவ்ளோதான். மாரடச்சு, கண்ணு தெரிச்சுப் போய்சேர வேண்டியதுதாம். எங்கண்ணனே ஒருத்தரு அப்பிடிப் போய்சேந்துருக்கார்.
ஒவ்வொருவாட்டியும் இப்பிடிப் போயி கடல்ல குதிச்சு முங்கி வெளிய வரும்போது எதாவது ஒடம்புல அடியோடுதான் வருவன். வூட்டுல திட்டுவாங்க. இனிமே இந்த வேல பாக்கக் கூடாது, நமக்கும் வயசாயிட்டுன்னெல்லாம் எனக்குள்ளயே சொல்லிக்குவேன். ஆனா, யாரோ ஒருத்தர் ஒதவின்னு கேட்டு வரும்போது எல்லாமே மறந்துரும். என் தலைவனா இருந்தா, என்னா செய்வான்னு நெனச்சுக் குதிச்சுருவன். இதுவரைக்கும் பதினெட்டு உசுரக் காப்பாத்திருக்கன் சார். இருபத்தியஞ்சி பொணத்தத் தூக்கிப்போட்டுருக்கன். போலீஸே நம்மளத் தேடித்தான் வருவாங்க. எதயும் காசு பணத்துக்காவ செய்யிறதுல்ல.
ஆக்ராலேந்து அசோக் ராணான்னு போலீஸ் அதிகாரி. எஸ்பியா இருந்தவரு. அவரு பையன் இங்கெ வந்தப்போ தவறி வுழுந்துட்டான். உசுரக் கொடுத்துக் காப்பாத்தினேன். என்ன வேணும் கேளுன்னு புடியா நிக்கிறாரு மனுஷன். ஒண்ணும் வேணாம் சார்னு சொல்லி அனுப்பிட்டன். கொஞ்ச நாள் கழிச்சு ஆள் வுட்டு ஆக்ரா அழைச்சுக்கிட்டு வரச் சொன்னார். வீட்டுக்குப் போய்ப் பாத்தா என் படத்த சாமி படத்தோட வெச்சிருக்காங்க. இந்த அன்பு போதும் சார்னு சொல்லிட்டு வந்துட்டன். அன்பைவிட மேல என்னா சார் இருக்கு இந்த ஒலகத்துல? நான் சொல்றது சரிதான?”
நெகிழவைக்கிறார் இயேசுபுத்திரன்.
(அலைகள் தழுவும்...)

Wednesday, 10 September 2014

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 மாதத்தில் 361 தற்கொலைகள்: இன்று உலக தற்கொலை தடுப்பு நாள்

என்.சுவாமிநாதன்
COMMENT   ·   PRINT   ·   T+  
கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 8 மாதத்தில் 361 தற் கொலைகள் நடந்துள்ளது. தனிமனி தனின் வாழ்வியல் போக்கை மாற்றும் இந்த அவலபோக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கற்றவர்கள் அதிகம் இருந்த போதும், தொழில் வாய்ப்புகள் இல் லாததால், பிற மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்புத் தேடிச் செல்லும் அவலம் தொடர்கிறது. இதனால் பல முதியவர்கள் பாதுகாப்பின்றி அவதிப்படுகிறார்கள்.
இடம்பெயரும் அவலம்
இந்த மாவட்டத்தில் உள்ள படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நோக்கத்துடனும், ரப்பர் விவசாயிகளை வாழவைக்கவும், ‘ரப்பர் தொழிற்சாலை கொண்டுவர வேண்டும்’ என்கிற கோரிக்கை கிடப்பிலேயே உள்ளது.
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக் காத விரக்தியில் சமீப காலமாக சில இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதை யாகி வருகிறது. 2014 ஜனவரி தொடக்கத்தில் இருந்து இன்றுவரை தீக்குளித்தல், தூக்கிட்டுக்கொள் வது, விஷம் குடிப்பது உள்ளிட்ட தவறான முடிவுகளால் இறந்தவர் களின் எண்ணிக்கை 361. இதில், 50 சதவீதம் பேர் 60 முதல் 70 வயது வரை உள்ளவர்கள்.
தற்கொலையின் நிலை
தற்கொலைகுறித்த காவல் துறை ஆவணங்களில், ‘பராமரிப்புக்கு யாரும் இல்லாத நிலையில், நோயின் தாக்குதலில் அவதிப் பட்டவர் தற்கொலை’ என்றே பதிவாகி உள்ளது.
“பெரும்பாலான வயோதிகர் களுக்குக் குடும்பத்தில் ஆதரவும், அன்பும் கிடைக்காத நிலைதான் அவர்களை தற்கொலை முடிவுக்கு உந்தித் தள்ளுகிறது” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டுக் குடும்ப சிதைவு
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன நலத் துறை இணை பேராசிரியர் டாக்டர் அருள்பிரகாஷ் இது குறித்து கூறியதாவது:
“குமரி மாவட்டத்தில் பாதுகாப் பற்ற மனநிலை, கூட்டுக் குடும்ப சிதைவு ஆகியவைதான் அதிக அளவிலான தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளன. முன்பெல் லாம் கூட்டுக் குடும்ப கலாச்சாரத்தில் வீட்டில் யாருக்கேனும் பிரச்சினை என்றால் குழுவாக இருந்து அது குறித்து விவாதிப்பார்கள்.
இப்போது கூட்டுக் குடும்ப கட்டமைப்புகள் அரிதாகிவிட்டது. இளையவர்களை வழி நடத்த தாத்தா, பாட்டிகள் வீட்டில் இல்லை என்கிற குறை ஒருபக்கம் இருந்தா லும், முதியோர்கள் தங்களை பாதுகாக்க யாரும் இல்லை என்கிற நிலையில் மனச்சிதைவு அடைந்து தற்கொலை செய்துகொள் கின்றனர். இதுவும் ஒரு வகையில் சமூக தீங்குதான்.
நட்பு பாராட்டல்
சமூக வலைதளங்களில் முகம் தெரியாதவரிடம் நட்பு பாராட்டி, அன்பை வாரி இறைத்து அதில் ஏமாற்றம் மிஞ்சும்போதும், சிறு சிறு குடும்பச் சண்டைகளுக்கு உணர்ச்சி வசப்பட்டும் இளைஞர்கள் மத்தியில் தற்கொலைகள் நடக்கின்றன. ஆனால், அதைவிட முதியவர்கள் தற்கொலை செய்துகொள்வதுதான் பரிதாப நிலை’’ என்றார்.
அடுத்த நொடி, ‘உயிருடன் இருக்க மாட்டோம்’ எனத் தெரிந்தும் தற்கொலை செய்துகொள்ள துணி வோருக்கு, வாழ்க்கையில் எது எதிர்வந்தாலும், ‘போராடி வெல் வோம்’ என்ற தைரியத்தை கொடுக் கக்கூடிய வாழ்வியல் போக்கு இல் லாமல் இருப்பதும் இந்தத் தற் கொலைகளுக்கு காரணமாகிறது.
முதியோர்களை மதித்து பாது காக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உள்ளது. குழந்தையாக இருக்கும்போது வாரி அணைத்து வழிகாட்டிய பெற்றோரை, முதுமை காலத்தில் அவர்களை குழந்தையாக பாவித்து, காத்தால் தற்கொலை எண்ணிக்கை குறையும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.

ஃபேஸ்புக் அடிமையானால் தனிமை உணர்வுக்கு ஆளாகும் அபாயம்!

ரஞ்ஜனி ராமநாதன்
COMMENT (6)   ·   PRINT   ·   T+  
கோப்புப் படம்
கோப்புப் படம்
நீங்கள் எவ்வித நோக்கமும் இல்லாமல் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா?
உங்களது விழிகள் திரையை விட்டு நீங்காமல் இருக்கின்றதா?
இவ்விரண்டு கேள்விகளுக்குமான பதில் 'ஆம்' எனில், மன அழுத்தத்தை உள்ளாகும் அபாயத்துக்கான அறிகுறிகள் உங்களிடம் இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.
அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிப்பவர்கள் பலர் மன அழுத்தத்தில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
மேலும், ஃபேஸ்புக் தளத்துக்கு அடிமையாவோர், தனிமை உணர்வால் வாடும் நிலைக்குத் தள்ளப்படும் சூழலுக்கு ஆளாவார்கள் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
என்னதான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நம் அனைவரையும் இணைக்கும் வண்ணம் காட்சியளித்தாலும், அதிக நேரம் இவற்றை பயன்படுத்துவது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.
"ஒருவர் மனதில் தங்கும் சோகத்துக்கும், ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் உளவியல் ரீதியான தொடர்பு இருக்கிறது" என்கின்றனர் ஆஸ்டிரியன் உளவியலாளர்களான கிறிஸ்டீனா சஜொய்கலோவும் டோபியாஸ் கிரிட்மேயரும்.
மூன்று கட்டமாக நடந்த இந்த ஆய்வில், முதல் கட்டமாக 123 ஜெர்மன் பேசும் ஃபேஸ்புக் வாசகர்களைக் கொண்டு ஆராய்ந்தனர். பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கில் சிறிது நேரம் செலவிட்டவுடன் அவர்களின் மனநிலையில் மாற்றம் காணப்பட்டது. 'அமேசான் மெகேனிகல் டர்க்' என்ற திட்டத்தின் மூலம் இதன் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில் 263 பேர் பங்கேற்றனர். அதில் பங்கு பெற்றவர்களின் மனநிலையிலும் மாற்றம் காணப்பட்டது.
இந்த ஆராய்ச்சியின் கடைசி கட்டமாக 101 ஃபேஸ்புக் வாசகர்களிடம் "ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்ப்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமா அல்லது சோகத்தை உண்டாக்குமா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கட்டத்திலும்,ஃபேஸ்புக்கிலிருந்து வெளிவரும்போது தங்கள் வாழ்க்கையில் தனிமை ஏற்படுகிறது என்று பதிலளித்தார்கள் என வைரல் க்ளோபல் நியூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஆராய்ச்சி தகவல்கள் 'கம்பியூடர்ஸ் இன் ஹுயூமன் பிஹேவியர்'என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கூச்ச சுபாவம் உள்ளவர்கள், பிறரிடம் அதிகம் பேசாத உள்முக சிந்தனையாளர்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதால் தம் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்வது சிறிதே என்றும் அலபாமா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

Tuesday, 2 September 2014

'ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!'
பகீர் கிளப்பும் டெல்லி பத்திரிகையாளர்
24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!
 குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது. ஜெயின் கமிஷன் குற்றம்சாட்டிய நபர்கள் இன்னமும் விசாரணையே செய்யப்படவில்லை. இந்த நிலையில் ராஜீவ் கொலைச் சம்பவம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன. அவை கிளப்பும் சந்தேகங்கள் மலையளவு உள்ளன. அதற்குத்தான் பதில் சொல்வார் யாரும் இல்லை!
எழுதியவர் ஒரு பத்திரிகையாளர்!
இதோ டெல்லியில் இருந்து புதிய குரல். எழுப்பி இருப்பவர்  ஃபெராஸ் அஹ்மத் என்ற  மூத்த பத்திரிகையாளர். அவர் எழுதியுள்ள புத்தகத்தின் பெயர், 'ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ [Assassination of Rajiv Gandhi AN INSIDE JOB?].
இந்தப் புத்தகத்தை முன்னாள் அவுட்-லுக் ஆசிரியர் வினோத் மேத்தா வெளியிட்டார். முன்னாள் பி.ஜே.பி தலைவர் கோவிந்தாச்சாரியார், முன்னாள் சி.பி.ஐ அதிகாரிகள் அமோத் கான், ஜனதா தளக் கட்சி பொதுச்செயலாளர் எஸ்.சி.தியாகி ஆகியோர் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கெடுத்தது அவர்களுக்கும் அந்தப் புத்தகத்துக்கும் உள்ள தொடர்பைக் காட்டின. 'ஒரு நிருபராக இருந்தவர் இப்படியொரு புத்தகம் எழுதியிருப்பது நல்ல முன்னுதாரணம்’ என்று பாராட்டினார்கள்.
''ராஜீவ் காந்தி கொலை ஒரு 'ஒப்பந்தக் கொலை’. அரசியல் ஆதாயத்துக்காக நடந்தது. இந்தக் கொலை செய்தவர்களுக்கு இது உண்மையான நோக்கம் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்படுவதன் மூலமாக ஆதாயம் அடைந்தவர்கள்தான் இந்தக் கொலையைத் தூண்டியவர்கள்'' என்று வாதங்களை வைக்கிறது இந்தப் புத்தகம்.
கொலை செய்யத் தூண்டியது யார்?
இந்தக் கொலைக்கான சதி திட்டம் தீட்டியது விடுதலைப்புலிகள் அமைப்பும் அதன் தலைவர் பிரபாகரன் என்றும் சி.பி.ஐ குற்றம் சுமத்தியது. ''இந்தக் கொலை பிரபாகரனுக்குத் தெரிந்தும் இருக்கலாம் அல்லது அவருக்குத் தெரியாமலேயேகூட நடந்திருக்கலாம். ஆனால் இந்தக் கொலையினால் விடுதலைப்புலிகள் பலனடையவில்லை. அவர்கள் ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக்கூட கருதவில்லை. இந்தக் கொலைக்கான பின்னணிகள் வேறு...'' என்கிற சந்தேகத்தை வைக்கும் ஃபெராஸ், ''ராஜீவ் கொலையினால் பலனடைந்தவர்கள் அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசா, இந்தியாவில் பிரதமராகப் பதவிஏற்க வந்த நரசிம்ம ராவ் போன்றவர்களில் யாராவது ஒருவருக்கு பின்னணியில் இருப்பவர்கள்தான்'' என்று அதிரடியாக ஒரு புதிய கோணத்தை காட்டுகிறார் ஃபெராஸ் அஹ்மத்.
''இது என்னுடைய கற்பனை அல்ல!''
ஃபெரோஸ் அஹ்மத் இந்த மாதிரியான முடிவுக்கு எப்படி வந்தார் என்பதை அறிய அவரை டெல்லியில் சந்தித்தோம். ''இது என்னுடைய கற்பனை அல்ல. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். ராஜீவ் காந்தி கொலையின் பின்னணிப் பாதுகாப்பை விசாரித்த ஜெயின் கமிஷன் மற்றும் வர்மா கமிஷன் என்ன கூறியது என்பதை முதலில் பார்த்தேன். இவற்றோடு இந்தக் கொலை குறித்து சி.பி.ஐ இயக்குநர் கார்த்திகேயன், ராஜீவ் கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ அதிகாரி வினோத் குமார் ராஜு, அப்போது சட்ட அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் தமிழக டி.ஜி.பி மோகன்தாஸ், பத்திரிகையாளர் மனோஜ் மிட்டல் என்று பலர் இது பற்றி சொன்னவற்றை தொகுத்தேன். இப்படி எழுதியவர்கள் எல்லாம் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள். இதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.''
''பிரபாகரனுக்கு ராஜீவ் பற்றி பயம் இல்லை!''
''1989-ம் ஆண்டு தேர்தலில் வி.பி.சிங்கிடம் தோல்வியுற்ற ராஜீவ் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழ்நிலையில் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்பட்ட பின்னர்தான் அனுதாப அலை ஏற்பட்டது. அப்படியும் காங்கிரஸால் 240 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இதனால் அவர் கொலை செய்யப்படவில்லை என்றால் அவரால் ஆட்சிக்கு நிச்சயமாக வந்திருக்க முடியாது. இந்தக் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ கொலைக்கான காரணமாக வைத்தது, 'ராஜீவ் காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனக்கும் தன்னுடைய எல்.டி.டி.இ இயக்கத்தையும் அழித்துவிடுவார் என்று பிரபாகரன் பயந்தார். இதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார்’ என்பதுதான்.
ஆனால் இது எவ்வளவு மடத்தனமானது என்பதை அறியலாம். ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வரக்கூடிய சூழ்நிலையும் இல்லை. அப்படியே வந்தாலும் படைகளை இலங்கைக்கு அவரால் அனுப்பவும் முடியாது. முன்பு அவர் அமைதிப்படையை [ஐ.பி.கே.எஃப்.] அனுப்பியது இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே உடனான உடன்பாட்டின் அடிப்படையில் அனுப்பினார். பின்னர் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரேமதாசா தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. ராஜீவ் காந்தி பதவியில் இருந்தவரை படைகளை திரும்பப் பெறுவதில் விரும்பம் இல்லாமல் இருந்தார். ஆனால், இலங்கையில் ஜனாதிபதியாக வந்த பிரேமதாசாவுக்கு இந்தியப் படைகள் இலங்கையில் இருப்பதில் மிகவும் அதிருப்தியடைந்து, திரும்ப அனுப்புவதில் மும்முரமாக இருந்தார். இதனால் ராஜீவ் பதவி விலகும்முன்பு 1989 செப்டம்பர் மாதம் பிரமேதாசாவுடன் மற்றொரு ஒப்பந்தம் போட்டு படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டார். அதே வருடம் டிசம்பர் மாதம் ராஜீவ் காந்தி அதிகாரத்தையும் இழந்தார். 1990-ம் ஆண்டு தி.மு.க ஆதரவுபெற்ற வி.பி.சிங் ஆட்சிக்கு வந்து இந்திய படைகளும் திரும்பி வந்தன. இறையாண்மை பெற்ற இலங்கை போன்ற நாடுகளுக்கு, நாம் நினைத்தமாட்டில் படைகளை அனுப்ப முடியாது. இதனால் பிரபாகரனுக்கோ, எல்.டி.டி.இ அமைப்புக்கோ ராஜீவ் காந்தி மீது பயமோ அச்சமோ கிடையாது. புலிகளுக்கு அவரது கொலைக்கான தொடர்பில் சம்பந்தமே இல்லை. இந்தக் கொலையில் விடுதலைப்புலிகள் உறுதியாக ஈடுபடவே இல்லை என்று நான் சவால் விடவும் இல்லை. இந்த விவகாரங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் வழக்கை விசாரித்தவர்கள் சொல்லும் கூற்றுக்கு அர்த்தமில்லை என்பது என் கருத்து.''
சிவராசன் ஏன் தப்பிக்கவில்லை?
''1990-ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் கொல்லப்பட்டார்கள். அதில்  விடுதலைப்புலிகள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இந்தக் குழுவில் சிவராசன் ஈடுபட்டு இருப்பது பற்றி சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் இவர்கள் எல்லோரும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தப்பிச் சென்றனர். ராஜீவ் கொலையில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டு இருந்தால் அடுத்த நிமிடமே இங்கிருந்து தப்பியிருப்பார்கள். ஏன் போகவில்லை? 1991 மே 21-ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் கொலை நடந்தது. கிட்டத்தட்ட ஜூன் 23-ம் தேதி வரை சிவராசன் சென்னையில்தான் இருந்தார். சம்பவம் நடந்த ஸ்ரீபெரும்புதூருக்கும் கடற்கரைக்கும் மிகப்பெரிய தூரம் கிடையாது. புலிகள் சாலையில் பறப்பதைவிட படகில் பறப்பதில் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர் அப்படி போகவில்லை. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஆட்டோவில்தான் சென்னைக்கு எல்லோரும் ஒன்றாகத் திரும்பிவந்துள்ளனர் இந்த அமெச்சூர் சதிக்காரர்கள். மறுநாள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நளினியை சிவராசன் அவரது அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டுபோய் விட்டுள்ளார். இடையில் சுபா, நளினி, பத்மா ஆகியோருடன் சிவராசன் திருப்பதிக்கும் சென்று வந்துள்ளார். இவர்கள் என்ன பக்தி புலிகளா? 24-ம் தேதி செய்தித்தாளில் மனித வெடிகுண்டு தாணுவின் புகைப்படம் வெளி வந்துவிடுகிறது. அது தடயவியல் வல்லுநர் சந்திரசேகர் லீக்-அவுட் செய்ததால் வந்தது. அதன் பிறகு சிவராசன் சாலை மார்க்கமாக டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் யாழ்ப்பாணம் தானே சென்றிருக்க வேண்டும். எதற்காக டெல்லி செல்ல நினைத்தார்?
ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு ஒருநாள் முன்பு சிவராசன், ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த கனகசபாபதி என்பவரை டெல்லிக்கு அனுப்பி வாடகை வீடு பார்க்கச் சொல்லியிருந்தார். மற்றொரு குற்றவாளியான ஆதிரையையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார். இவர்கள் எதற்காக டெல்லி சென்றனர்? அப்போது இருந்த பிரதமரைக் கொல்லவா? அல்லது செங்கோட்டையைத் தகர்க்கவா? இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கக் காரணம் இந்த விவகாரத்தில் புலிகளின் தொடர்புகள் சந்தேகத்துக்குரியவை என்பதை விளக்கத்தான்!''
தணு யார், பிரபாகரனுக்குத் தெரியுமா... இதனால் லாபம் அடைந்தவர்கள் யார்... சிவராசனை வேறு யார் பயன்படுத்திக் கொண்டது?