
இந்தியாவை இந்துமயமாக்கும் ஆர்.எஸ்.எஸின் திட்டம்
மோடியை ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தும் பின்னணி என்ன? தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு படப்பிடிப்பு
மும்பை, ஏப்.28- மோடியை ஆர்.எஸ்.எஸ் ஏன் முன்னிறுத்துகிறது என்பது குறித்து தி எக்னா மிக் டைம்ஸ் தெளிவாகப் படம் பிடித்துள்ளது.
மும்பை, ஏப்.28- மோடியை ஆர்.எஸ்.எஸ் ஏன் முன்னிறுத்துகிறது என்பது குறித்து தி எக்னா மிக் டைம்ஸ் தெளிவாகப் படம் பிடித்துள்ளது.
16ஆம் மக்களவைத் தேர்தலில் சிறப்பாக குறிப் பிடத்தக்கதாக சோனியாவின் தொலைக்காட்சிமூலம் ஏப்ரல் 14 அன்று அளித்த செய்தியாகும். தேர்தல் களத் தில் மக்களைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராடும் நிலை உள்ளது. பாரதீய, ஹிந்துஸ்தானியம் என்கிற பெயரில் அழிவை நோக்கி இட்டுச் செல்கி றார்கள் என்றார். இத்தேர்தல் கொள்கையைச்சார்ந்த போட்டியாக உள்ளது என்று பிரியங்காகாந்தி கோடிட் டுக்காட்டியதுடன் பாஜகவு டன் இணைத்துக் கொண் டுள்ள வருண்காந்தியை சாடியுள்ளார்.
இதுகுறித்து சி.பி. பாம்ப்ரி (Bhambhri) தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (28.4.2014) எழுதி இருப்பதாவது:
கொள்கைப்பூர்வமான போட்டி என்பது இந்தியா வில் பழமையானதும், மிகப் பெரிய சமுதாய, அரசியல் அமைப்பாக உள்ளதுமான காங்கிரசுக்கு ஒரே உண் மையான எதிரியாக உள்ள ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ் டிரிய சுயம் சேவக் சங் அமைப்பை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
பிஜேபியை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ்.
1952 முதல் நடைபெற்று வரும் இந்தியாவின் மற்ற எந்த தேர்தலையும் விட, முடிவுடனும், ஒருவித வெறியுடனும், முழு சக்தியுடன் ஆர்.எஸ்.எஸ்சை வழிநடத்தும் மோகன் பகவத் குதித்துள்ளார். வெளிப்பார்வையில் கலாச் சார அமைப்பு என்கிற முக மூடியை அணிந்து கொண்டு, தேர்தல் காலங்களில் பாஜக மற்றும் ஜன சங்கத்தை ஆர்.எஸ்.எஸ். பின் இருக் கையில் இருந்துகொண்டு இயக்கி வரும். ஆனால், 2014இல் தேர்தல் அரசிய லில் ஆர்.எஸ்.எஸ். கொள் கையுடன் உள்ள அனைத்து ஆதரவு அமைப்புகளையும் நேரிடையாக ஈடுபடுத்தி யது. சங் பரிவாரங்கள் 1998இல் ஏற்பட்ட அனுப வத்திலிருந்து 2014இல் மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றினால்தான் ஹிந்து ராஷ்டிரவாதம் அமைக்க முடியும் என்முடிவு செய்தது. அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான அரசு இந்தியாவில் உள்ள மாநி லங்களை ஹிந்துத்துவமாக் கும் கருத்துக்கு முன்னெ டுத்துச் சென்றதில் வெற்றி கண்டது. ஆனாலும், ஆட் சியதிகாரத்தை 2004இல் இழந்தது. பாஜகவின் இந்த தோல்வி சங்பரிவாரங்களின் தலைமையிடம் விழிப்பை ஏற்படுத்தியது. மோடியை முன்னிறுத்துவது ஏன்?
ஆகவே, மோகன் பகவத் வாஜ்பேயி காலத்திய பாஜக தலைவர்களை அரசியலிலி ருந்து ஒதுக்கிவிட்டு, பிரத மருக்கான வேட்பாளராக நரேந்திர மோடியை நிய மித்தார். ஹிந்துத்துவாவுக் காக எல்.கே.அத்வானி பாப்ரி மஸ்ஜித் இடத்தில் ராமன்கோவில் கட்டுவதாக யாத்திரை நடத்தியதைப் போன்றே, நரேந்திர மோடி யும் செயல்படுவார் என்கிற எதிர்பார்ப்பில் அவரை பிரதமருக்கான வேட்பாள ராக மோடியை ஆர்.எஸ். எஸ். நியமனம் செய்தது.
ஆர்.எஸ்.எஸ்சின் நிறுவனர் ஹெட்கேவர், தொடக்கக் கால ஒருங்கி ணைப்பாளர் எம்.எஸ். கோல்வால்கர் கட்டுப்ப டாக ஹிந்துத்துவாவைப் பரப்புபவர்களை உரு வாக்குவதற்கு மட்டுமின்றி பிரிட்டிஷ் காலனியாதிக் கத்தின் பாதையில், பல்வேறு சமயங்களால், பிரிந்து இருப் பவர்களிடம் ஹிந்து பிரா மணீயத்தின் ஆதிக்கத் தூணை நாட்டுவதற்கும் ஆர்.எஸ்.எஸ். பணியாற் றியது. 2014இல் ஆர்.எஸ்.எஸ் கூறும் ஹிந்து என்பதற்கு விளக்கமாக பொருள் கூறி உள்ளது. இந்தியாவுக்கான கொள்கை என்பதாக, ஆர். எஸ்.எஸ்சின் கொள்கையாக அதன்வழியில் உள்ள அமைப்புகள், மற்றும் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என்று தெளி வாகவே கூறுகிறது.
ஆர்.எஸ்.எஸின் திட்டம்!
மத்தியிலோ, மாநிலத் திலோ பாஜக அல்லது ஆதரவு கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது, வணிகம் மற்றும் தொழில்களில் உள்ள சில முக்கிய தொழி லதிபர்கள் ஆர்.எஸ்.எஸ்சால் நியமிக்கப்படும் நரேந்திர மோடியை ஆதரிக்க வேண் டும். இந்தத் தேர்தல்களில் இலாபத்தை எதிர்நோக்கும் பெரும்பணக்காரர்கள் சங் பரிவாரங்களை வெளிப் படையாக ஆதரிக்க வேண் டும். ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கைகளை ஏற்காத வர்கள், மேலோட்டமாக உள்ள நடுத்தர மற்றும் உயர் வகுப்பினர் ஹிந்து மனப் பான்மையுடன் இருப்பவர் களிடம் பாஜகவை, மோடியை ஆதரிக்கும் ஆர்வத்தை உருவாக்க வேண்டும்.
ஹிந்துக்களில் ஆர்வ முள்ளவர்களைத் திரட்டி ஆர்.எஸ்.எஸ்சின் கொள் கைப் பயிற்சி அளித்து ஹிந்துத்துவக் கட்சிகளில் இணைக்க வேண்டும். தேச பக்தி, தியாக உணர்ச்சியை ஹிந்துக்கட்சியின் நிகழ்ச் சிகள் மற்றும் கொள்கை களில் எதிரொலிக்க வேண் டும். தேச நலனுக்கான கட்டுப்பாடுகள்மூலம் மில் லியன் கணக்கானவர்கள் பாஜகவை நோக்கி வர வேண்டும். ஆனால், இந்தி யாவின் கொள்கை ஹிந்து என்பதில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் கணக்கில் கொள்ளப்படு கிறார்களா?
முசாபர்நகர் மற்றும ஷாம்லியில் முஸ்லீம்கள் மீதான கலவரத்தில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத் தின்கீழ் குற்றம் சுமத்தப் பட்டுள்ளனர். அவர்களை மக்களவைத் தேர்தலில் எவ் வித தயக்கமும் இல்லாமல் தேர்தலில் நியமிப்பதும், தேர்தல் பணிகளில் ஈடு படுத்துவதுமாக இருப் பதைப்பார்க்கும்போது, ஹிந்து இந்தியாவில் முஸ் லீம்கள் ஒருபொருட்டாக கருதப்பட வில்லை என் பதையே காட்டுகிறது. இரு வகை குடிமக்கள்
பாரத மாதா என்கிற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே முதல் தரக்குடி மகன்களாகவும், மற்ற மதத் தைச் சேர்ந்தவகுப்பினரை
இரண்டாம் தரக் குடிமகன்களாகவும் ஆக்கிவிட்டு எப்போதுமே அவர்கள் குறிவைக்கப்படும் நிலையும் ஏற்படும்.
இந்த சிறுபான்மையருக்கு எதிரான தகவல் ஆர்.எஸ்.எஸ். பணிகளை மேற் கொண்டுள்ள அய்ம்பது அமைப்புகளுக் கும், நாடுமுழுவதும் உள்ள 44,982 ஷாகாக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூலம் பரவியுள்ளது. இதன்மூலம் முஸ்லீம்கள் குறிவைக்கப்பட மாட் டார்கள் என்பவர்களை ஆர்.எஸ்.எஸ். முட்டாளாக்கி உள்ளது.
சுருக்கமாகக் கூறவேண்டுமானால், இந்தியாவில் மே 16இல் இரு வேறு எதிர்ப்புக் கருத்துக்களை உடையவர்கள் வெளியில் வருவதே கடினமாகிவிடும். சமுதாயத்தில் குறிப்பிட்ட தத்துவத்தைக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்.-பாஜக சிறு பான்மையரை சமுதாயத்திலிருந்து விலக்கிவைப்பதைக் கொள்கையாக கொண்டுள்ளது. இதைத்தான் ஒரு சார்பற்ற வளர்ச்சியின் முன்னுதாரண மாக கூறுகிறார்கள் என்று சி.பி. பாம்ப்ரி எழுதியுள்ளது.
(‘The Economic Times - 28.4.2014 - page-12)
Read more: http://viduthalai.in/e-paper/79419.html#ixzz30Ljj7CSs
No comments:
Post a Comment