Sunday, 31 August 2014

குழந்தையா, குற்றவாளியா?

ச. பாலமுருகன்
COMMENT (9)   ·   PRINT   ·   T+  
1
‘சிறார் நீதி-பாதுகாப்புச் சட்ட’த்தில் திருத்தம் மேற்கொள்வது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது.
நமது குற்ற விசாரணை முறையில் ‘சிறார் நீதி மற்றும் பாதுகாப்புச் சட்டம்-2000’ என்று ஒரு சட்டம் இருக்கிறது. இதன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு சிறார் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை என்பது மூன்று ஆண்டுகள். குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்களைக் குற்றவாளிகள் என்று பார்க்காமல் சட்டத்துடன் முரண்படும் குழந்தை என்று பார்ப்பதுதான் நமது நீதிமுறையின் சிறப்பு. ஆனால், இதற்கு ஆபத்து ஏற்படுத்தும் வேலையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. ‘சிறார் நீதி மற்றும் பாதுகாப்புச் சட்ட’த்தில் திருத்தம் செய்து, வயதுவந்த குற்றவாளிகளை நடத்துவதுபோல, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்களையும் நடத்துவது என்று சமீபத்தில் மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. அதற்காக, மோசமான குற்றங்களுக்கு வயதுவரம்பை 18 வயதிலிருந்து 16-ஆகக் குறைப்பதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
பொதுப்புத்தியின் குரல்
டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் மாதம் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மோசமான சம்பவத்தில் குற்றம்சாட்டப் பட்டவர்களில் ஒருவர் 18 வயதுக்குக் குறைவான சிறுவன். அவன் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால்கூட அந்தச் சிறுவன் மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டு அதற்குப் பிறகு விடுவிக்கப்படுவான் என்ற கருத்தில் அந்தச் சிறுவனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்ற கோரிக்கை டெல்லியின் வீதியில் குழுமியிருந்த கூட்டத்தின் பொதுப்புத்தியின் குரலாக இருந்தது. அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி உட்பட பலரும் இதே கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தார்கள். இந்த வழக்குகளை மார்ச் 2014-ல் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதற்கு முன்பு 2013-லும் இதே போன்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்தப் பின்னணியில், புதிய அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சிறார் குற்றவாளிகளின் வயதைக் குறைப்பதற்கான முடிவை, குழந்தைகளுக்கும் பெண்களுக்குமான மத்திய அமைச்சகம் எடுத்திருந்தது. அதற்காக அமைச்சர் மேனகா காந்தி கூறிய காரணம்: “பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களில் பாதியளவு, சிறார் குற்றவாளிகளால் நிகழ்த்தப்படுகிறது.” இதன் காரணமாக, சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பைக் குறைத்து பெரியவர்களைப் போலவே அவர் களுக்கும் தண்டனை வழங்க வழிவகை செய்துள்ளதாக அவர் கூறியிருந்தார். ஆனால், ஒட்டுமொத்தப் பாலியல் குற்றங்களில் 5.6% மட்டுமே 18 வயதுக்குக் கீழே உள்ளவர் களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும், மொத்த குற்றங்களில் 1.2% மட்டுமே சிறாரின் பங்கு இருந்திருக்கிறது என்ற உண்மை வசதியாக மறைக்கப்பட்டுள்ளது.
உரிமைகள் மறுக்கப்பட்ட குழந்தைகள்
உலகிலேயே அதிகக் குழந்தைகளைக் கொண்ட நாடு இந்தியாதான். இங்குள்ள குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் கண்ணியமான சூழலில் அவர்கள் பெற்றிருக்க வேண்டிய வாழும் உரிமை, ஆரோக்கியமாக வளரும் உரிமை, சமூகத்தின் தீங்கு களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை, சமூகத்தின் வளர்ச்சியில் பங்கேற்கும் உரிமை போன்றவை மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர். இந்த உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டிய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றாமல் அந்தக் குழந்தைகளைக் கைவிட்டிருக்கிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற புறக்கணிப்புச் சூழலிலேயே சிறார் குற்றவாளிகள் உருவாக்கப்படுகின்றனர். இந்தச் சமூகச் சூழலை மாற்ற முயற்சிக்காமல் தண்டனைகளை மட்டும் கடுமையாக்குவது பாரபட்சமானது.
18 ஏன்?
நமது ஜனநாயக சமூகத்தில் வாக்களிக்கும் உரிமை 18 வயது பூர்த்தியானவர்களுக்கே வழங்கப்படுகிறது. ஏனெனில், சுயசிந்தனை என்பது ஏறக்குறைய அந்த வயதிலிருந்தே தொடங்குவதாகக் கருதப்படுகிறது. மனிதர்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் சிந்தனை, பகுத்தாய்வு செய்யும் மனநிலை போன்றவற்றுக்கு அடிப்படையாக உள்ள மூளையின் முன் பகுதி (ஃப்ரான்டல் லோப்) கிட்டத்தட்ட 18 வயது வரை வளர்ந்து வருகிறது. எனவே, 17 வயதுடைய ஒரு சிறுவனுக்கு வயதுவந்த இளைஞனைப் போல உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. ஒரு செயலின்போது ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிப் புரிந்துகொள்வதிலும், அந்த பாதிப்புகளை உணர்ந்து அந்தச் செயலைக் கைவிடுவதிலும், பின்விளைவுகளைப் பற்றி எச்சரிக்கை கொள்வதிலும், நியாய உணர்வுகளின் வழியில் பகுத்தாய்வு செய்வதிலும் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படும் வயதாக 18 வயதுக்குக் குறைந்த வயதுகள் இருக்கின்றன. எனவே, 18 வயதுக்குக் கீழே உள்ள சிறார்கள் உடலாலும் மனதாலும் 18 வயது பூர்த்தியானவர்களுக்குச் சமமாக முடியாது என்பது அறிவியல்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ‘கிரகாம் எதிர் புளோரிடா’ என்ற வழக்கில் 2010 ஆண்டில் இந்தக் கருத்தை உறுதிசெய்துள்ளது. குற்றம் செய்த சிறார்களில் 90 சதவீதத்துக்கும் மேலானவர்கள் மறுவாழ்வுக்கு வாய்ப்பு தரப்பட்டு கண்காணிக்கப்படும் சூழலில், மீண்டும் எந்தக் குற்றத்திலும் ஈடுபடாமல் நல்லவர்களாக வாழ்கிறார்கள் என்பதை அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தின் குற்ற ஆய்வு ஒன்று உறுதிசெய்திருக்கிறது.
பெண்களுக்கு எதிரானவர்களா?
இந்தியாவின் தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனமும் தேசிய சட்டப் பல்கலைக்கழகமும் இணைந்து மத்திய அரசுக்கு வழங்கிய பரிந்துரையில் 18 வயதுக்குக் குறைவான சிறார்களை வயதுவந்தவர்களுக்கு இணையாக வைத்துக் குற்றவிசாரணை நடத்தக் கூடாது என்று பரிந்துரைத்திருக்கின்றன. மேலும், இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள ஐ.நா-வின் குழந்தைகள் உரிமைகளுக்கான மாநாட்டு வரைவின்படி 18 வயது பூர்த்தியடையாத அனைவரும் குழந்தைகளாகவே கருதப்பட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது ஆட்சியாளர்கள் பொதுப்புத்தியின் மனநிலைக்கும் அதன் கூச்சலுக்கும் செவிமடுத்து, எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்ததன் வெளிப்பாடே, குழந்தைகளைப் பெண்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் செயல். மேலும், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து ஒரு சிறுவன் எந்த வகையிலும் இளைஞனாக மாறிவிடுவதில்லை.
இளைஞர்களைப் போலச் சிறாரைத் தண்டிப்பதால் குற்றம் குறைந்துவிடாது. மேலும் அவர்கள் குற்றச் சூழலில் வாழும் நிலையையே அது உறுதிசெய்யும். இளம் சிறாரைப் பிற குற்றவாளிகளுடன் கலந்து விசாரிக்கும் சூழலில் அந்தச் சிறார்கள் உடலாலும் மனதாலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. அது சமநீதி விசாரணையாக இருக்க முடியாது. தற்போது நடைமுறையில் உள்ள ‘சிறார் நீதி மற்றும் பராமரிப்புச் சட்டம்-2000’ குழந்தைகளின் மறுவாழ்வை உத்தரவாதப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. ஆனாலும், சமூகத்தில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்தச் சட்டத்தின் நோக்கத்துக்கு மாறாக ஒரு சட்டத்திருத்தம் வருவது, அந்தச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்ப்பதாக உள்ளது.
2012-ல் டெல்லி பாலியல் வன்செயலை ஒட்டி அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷன் சுட்டிக்காட்டியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்: “கடுமையான தண்டனை என்பதைவிட, மறுவாழ்வு நடவடிக்கைகளே சமூகத்தில் குற்றத்தைக் குறைக்கும். மேலும், நமது சிறைகள் குற்றவாளிகளை நல்ல மனிதர்களாக மாற்றுவதற்குப் பதிலாக மேலும் குற்றவாளிகளாக்கும் நிலையில்தான் இருக்கின்றன.”
சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை 18-லிருந்து 16-ஆகக் குறைக்கும் மத்திய அரசின் செயல் பொறுப்பற்றது; அறிவியல் பார்வையற்றது. ஜனநாயகச் சமூகம் மத்திய அரசின் இந்தச் செயலைத் தடுக்க முன்வர வேண்டும்.
- ச. பாலமுருகன், ‘சோளகர் தொட்டி’ என்ற நாவலின் ஆசிரியர், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்;

குழந்தையா, குற்றவாளியா?

ச. பாலமுருகன்
COMMENT (9)   ·   PRINT   ·   T+  
1
‘சிறார் நீதி-பாதுகாப்புச் சட்ட’த்தில் திருத்தம் மேற்கொள்வது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது.
நமது குற்ற விசாரணை முறையில் ‘சிறார் நீதி மற்றும் பாதுகாப்புச் சட்டம்-2000’ என்று ஒரு சட்டம் இருக்கிறது. இதன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு சிறார் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை என்பது மூன்று ஆண்டுகள். குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்களைக் குற்றவாளிகள் என்று பார்க்காமல் சட்டத்துடன் முரண்படும் குழந்தை என்று பார்ப்பதுதான் நமது நீதிமுறையின் சிறப்பு. ஆனால், இதற்கு ஆபத்து ஏற்படுத்தும் வேலையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. ‘சிறார் நீதி மற்றும் பாதுகாப்புச் சட்ட’த்தில் திருத்தம் செய்து, வயதுவந்த குற்றவாளிகளை நடத்துவதுபோல, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்களையும் நடத்துவது என்று சமீபத்தில் மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. அதற்காக, மோசமான குற்றங்களுக்கு வயதுவரம்பை 18 வயதிலிருந்து 16-ஆகக் குறைப்பதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
பொதுப்புத்தியின் குரல்
டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் மாதம் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மோசமான சம்பவத்தில் குற்றம்சாட்டப் பட்டவர்களில் ஒருவர் 18 வயதுக்குக் குறைவான சிறுவன். அவன் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால்கூட அந்தச் சிறுவன் மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டு அதற்குப் பிறகு விடுவிக்கப்படுவான் என்ற கருத்தில் அந்தச் சிறுவனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்ற கோரிக்கை டெல்லியின் வீதியில் குழுமியிருந்த கூட்டத்தின் பொதுப்புத்தியின் குரலாக இருந்தது. அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி உட்பட பலரும் இதே கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தார்கள். இந்த வழக்குகளை மார்ச் 2014-ல் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதற்கு முன்பு 2013-லும் இதே போன்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்தப் பின்னணியில், புதிய அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சிறார் குற்றவாளிகளின் வயதைக் குறைப்பதற்கான முடிவை, குழந்தைகளுக்கும் பெண்களுக்குமான மத்திய அமைச்சகம் எடுத்திருந்தது. அதற்காக அமைச்சர் மேனகா காந்தி கூறிய காரணம்: “பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களில் பாதியளவு, சிறார் குற்றவாளிகளால் நிகழ்த்தப்படுகிறது.” இதன் காரணமாக, சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பைக் குறைத்து பெரியவர்களைப் போலவே அவர் களுக்கும் தண்டனை வழங்க வழிவகை செய்துள்ளதாக அவர் கூறியிருந்தார். ஆனால், ஒட்டுமொத்தப் பாலியல் குற்றங்களில் 5.6% மட்டுமே 18 வயதுக்குக் கீழே உள்ளவர் களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும், மொத்த குற்றங்களில் 1.2% மட்டுமே சிறாரின் பங்கு இருந்திருக்கிறது என்ற உண்மை வசதியாக மறைக்கப்பட்டுள்ளது.
உரிமைகள் மறுக்கப்பட்ட குழந்தைகள்
உலகிலேயே அதிகக் குழந்தைகளைக் கொண்ட நாடு இந்தியாதான். இங்குள்ள குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் கண்ணியமான சூழலில் அவர்கள் பெற்றிருக்க வேண்டிய வாழும் உரிமை, ஆரோக்கியமாக வளரும் உரிமை, சமூகத்தின் தீங்கு களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை, சமூகத்தின் வளர்ச்சியில் பங்கேற்கும் உரிமை போன்றவை மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர். இந்த உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டிய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றாமல் அந்தக் குழந்தைகளைக் கைவிட்டிருக்கிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற புறக்கணிப்புச் சூழலிலேயே சிறார் குற்றவாளிகள் உருவாக்கப்படுகின்றனர். இந்தச் சமூகச் சூழலை மாற்ற முயற்சிக்காமல் தண்டனைகளை மட்டும் கடுமையாக்குவது பாரபட்சமானது.
18 ஏன்?
நமது ஜனநாயக சமூகத்தில் வாக்களிக்கும் உரிமை 18 வயது பூர்த்தியானவர்களுக்கே வழங்கப்படுகிறது. ஏனெனில், சுயசிந்தனை என்பது ஏறக்குறைய அந்த வயதிலிருந்தே தொடங்குவதாகக் கருதப்படுகிறது. மனிதர்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் சிந்தனை, பகுத்தாய்வு செய்யும் மனநிலை போன்றவற்றுக்கு அடிப்படையாக உள்ள மூளையின் முன் பகுதி (ஃப்ரான்டல் லோப்) கிட்டத்தட்ட 18 வயது வரை வளர்ந்து வருகிறது. எனவே, 17 வயதுடைய ஒரு சிறுவனுக்கு வயதுவந்த இளைஞனைப் போல உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. ஒரு செயலின்போது ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிப் புரிந்துகொள்வதிலும், அந்த பாதிப்புகளை உணர்ந்து அந்தச் செயலைக் கைவிடுவதிலும், பின்விளைவுகளைப் பற்றி எச்சரிக்கை கொள்வதிலும், நியாய உணர்வுகளின் வழியில் பகுத்தாய்வு செய்வதிலும் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படும் வயதாக 18 வயதுக்குக் குறைந்த வயதுகள் இருக்கின்றன. எனவே, 18 வயதுக்குக் கீழே உள்ள சிறார்கள் உடலாலும் மனதாலும் 18 வயது பூர்த்தியானவர்களுக்குச் சமமாக முடியாது என்பது அறிவியல்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ‘கிரகாம் எதிர் புளோரிடா’ என்ற வழக்கில் 2010 ஆண்டில் இந்தக் கருத்தை உறுதிசெய்துள்ளது. குற்றம் செய்த சிறார்களில் 90 சதவீதத்துக்கும் மேலானவர்கள் மறுவாழ்வுக்கு வாய்ப்பு தரப்பட்டு கண்காணிக்கப்படும் சூழலில், மீண்டும் எந்தக் குற்றத்திலும் ஈடுபடாமல் நல்லவர்களாக வாழ்கிறார்கள் என்பதை அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தின் குற்ற ஆய்வு ஒன்று உறுதிசெய்திருக்கிறது.
பெண்களுக்கு எதிரானவர்களா?
இந்தியாவின் தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனமும் தேசிய சட்டப் பல்கலைக்கழகமும் இணைந்து மத்திய அரசுக்கு வழங்கிய பரிந்துரையில் 18 வயதுக்குக் குறைவான சிறார்களை வயதுவந்தவர்களுக்கு இணையாக வைத்துக் குற்றவிசாரணை நடத்தக் கூடாது என்று பரிந்துரைத்திருக்கின்றன. மேலும், இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள ஐ.நா-வின் குழந்தைகள் உரிமைகளுக்கான மாநாட்டு வரைவின்படி 18 வயது பூர்த்தியடையாத அனைவரும் குழந்தைகளாகவே கருதப்பட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது ஆட்சியாளர்கள் பொதுப்புத்தியின் மனநிலைக்கும் அதன் கூச்சலுக்கும் செவிமடுத்து, எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்ததன் வெளிப்பாடே, குழந்தைகளைப் பெண்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் செயல். மேலும், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து ஒரு சிறுவன் எந்த வகையிலும் இளைஞனாக மாறிவிடுவதில்லை.
இளைஞர்களைப் போலச் சிறாரைத் தண்டிப்பதால் குற்றம் குறைந்துவிடாது. மேலும் அவர்கள் குற்றச் சூழலில் வாழும் நிலையையே அது உறுதிசெய்யும். இளம் சிறாரைப் பிற குற்றவாளிகளுடன் கலந்து விசாரிக்கும் சூழலில் அந்தச் சிறார்கள் உடலாலும் மனதாலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. அது சமநீதி விசாரணையாக இருக்க முடியாது. தற்போது நடைமுறையில் உள்ள ‘சிறார் நீதி மற்றும் பராமரிப்புச் சட்டம்-2000’ குழந்தைகளின் மறுவாழ்வை உத்தரவாதப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. ஆனாலும், சமூகத்தில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்தச் சட்டத்தின் நோக்கத்துக்கு மாறாக ஒரு சட்டத்திருத்தம் வருவது, அந்தச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்ப்பதாக உள்ளது.
2012-ல் டெல்லி பாலியல் வன்செயலை ஒட்டி அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷன் சுட்டிக்காட்டியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்: “கடுமையான தண்டனை என்பதைவிட, மறுவாழ்வு நடவடிக்கைகளே சமூகத்தில் குற்றத்தைக் குறைக்கும். மேலும், நமது சிறைகள் குற்றவாளிகளை நல்ல மனிதர்களாக மாற்றுவதற்குப் பதிலாக மேலும் குற்றவாளிகளாக்கும் நிலையில்தான் இருக்கின்றன.”
சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை 18-லிருந்து 16-ஆகக் குறைக்கும் மத்திய அரசின் செயல் பொறுப்பற்றது; அறிவியல் பார்வையற்றது. ஜனநாயகச் சமூகம் மத்திய அரசின் இந்தச் செயலைத் தடுக்க முன்வர வேண்டும்.
- ச. பாலமுருகன், ‘சோளகர் தொட்டி’ என்ற நாவலின் ஆசிரியர், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்;

தண்ணீரைத் தொலைப்பவர்களா நாம்?

COMMENT (12)   ·   PRINT   ·   T+  
2
தமிழ்நாட்டில் இப்போது பெரும்பாலான அணைகள் கிட்டத்தட்ட முழுக்க நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக, மேட்டூர் அணை கிட்டத்தட்ட 110 அடியாக இருக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் முழு மூச்சாகத் தொடங்கியிருக்கும் இந்த நிலையில், பாசன ஏரிகளில் பெரும்பாலானவை தூர்வாரப்படாமல் இருக்கின்றன என்பது தெரியவந்திருக்கிறது. அது மட்டுமல்ல, டெல்டாவிலேயே கடைமடைப் பகுதியில் வாய்க்கால்கள் தூர்ந்தும், கரைகள் சரிந்தும் இருக்கின்றன. தண்ணீருக்காகத் தொடர்ந்து கூக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் நாம், தண்ணீர் மேல் காட்டும் அக்கறையின் லட்சணம் இதுதான்.
தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஏரிகள் 13,779-ல், சுமார் 3,350 மட்டுமே கடந்த மூன்று ஆண்டுகளில் தூர் வாரப்பட்டுள்ளன, அதுவும் உலக வங்கி அளித்த கடனில். 2008-ம் ஆண்டு ரூ.2,820 கோடியை உலக வங்கி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியது. ஆனாலும், 54% ஏரிகள் இன்னமும் தூர் வாரப்படாமல் இருக்கின்றனவாம். அதுமட்டுமா, மேட்டூர் அணையைத் தூர் வாரி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அணையில் நீர்மட்டம் 20 அடியாகக் குறையும்போது, இந்தத் தண்ணீரைப் பாசனத்துக்கும் திறந்துவிட முடியாது, மின்சாரமும் தயாரிக்கப் பயன்படுத்த முடியாது; முழுக்க வண்டலாகத்தான் இருக்கும்.
நான்கு வழிப்பாதை, ஆறு வழிப்பாதை என்று சாலைகள் விரிவாக்கப்படும்போதும், புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும்போதும், குடிசை மாற்று வாரியமும் வீட்டு வசதி வாரியமும் வீடுகளைக் கட்டும்போதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனை போன்ற பெரிய கட்டிடங்கள் கட்டப்படும்போதும் ஆட்சியாளர்கள் கண்ணில் முதலில் படுவது ஏரிகள்தான்.
பாசனத்துக்கும், சூழலுக்கும் ஏரிகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை அறியாமல், அவையெல்லாம் பாழாகக் கிடக்கின்றன என்றே பலரும் நினைக்கிறார்கள். ஒரு பக்கம் ஏரிகள், குளங்கள், குட்டைகள் தூர் வாரப்படாமல் குப்பைகளைக் கொட்டி மண்மேடாக்கிக் கட்டிடங்களைக் கட்ட ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். மறுபுறம், கட்டுமான வேலைக்காக ஆற்று மணலை இயந்திரங்கள் கொண்டு, அடியோடு கொள்ளையடிக்கின்றனர். நீர்ப்பாசனத்தில் நிகரற்று விளங்கிய ஒரு பண்பாட்டின் இன்றைய நிலை இதுதான்!
மழைக் காலம் நெருங்கிய பிறகே, பொதுப்பணித் துறையினர் விழித்துக்கொண்டு ஒப்புக்குச் சில நீர்த்தேக்கங்களில் மதகுகளுக்கு கிரீஸ் போடுவார்கள், வண்ணம் பூசுவார்கள், கரைகளை உயர்த்திக் கட்டி சீரமைத்ததாக அரசுக்கு அறிக்கை அனுப்பிவிடுவார்கள்.
மழை என்பது இயற்கை தரும் கொடை. அந்த நீரைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தக் காலத்தில் வெட்டிவைத்த குளங்கள், குட்டைகள், ஏரிகளுக்குக் கூடுதலாக கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை நீர்நிலைகள் ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று பார்க்க வேண்டும். புதிதாக ஏற்படுத்துவது இருக்கட்டும், இருப்பதையாவது பாதுகாக்க வேண்டுமல்லவா?
ஏரிகள் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். குடிநீர்ப் பிரச்சினையைப் போக்கும். பாசனத்துக்குத் தண்ணீர் வழங்கும். சுற்றுவட்டாரப் பகுதியின் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை ஊட்டும். பறவையினங்கள் பெருக உதவும். மழைப்பொழிவை அதிகப்படுத்தும். ஏரிக்கரை மீது மரங்களை நடலாம். இப்படியாக, சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதற்கு ஏரிகள் பெரிதும் உதவும். அது மட்டுமல்லாமல், மீன்பிடி மூலமாக உள்ளூர் பொருளாதரத்துக்கும் ஏரிகள் உதவும். ஏரிகளெல்லாம் முறையாகப் பராமரிக்கப்பட்டால் பல விதங்களிலும் பயன் அளிக்கக்கூடியவை.
காலங்காலமாக விவசாயிகளிடம் இருந்த குடிமராமத்துக் கலாச்சாரமும் உரிமையும் இப்போது காணாமல் போய்விட்டது. இந்தச் சூழலில் நீர்நிலைகளை மீட்டெடுக்க அரசாங்கம் பெரும் முனைப்பு காட்ட வேண்டும். வீடுதோறும் மழைநீரைச் சேமிப்பதற்கான நல்ல திட்டத்தைக் கொண்டுவந்த முதல்வர் ஜெயலலிதா, இப்போது நீர்நிலைகளைக் காப்பதற்கான மக்கள் இயக்கத்தையும் முன்னெடுக்க வேண்டும். தமிழக நீர்நிலைகளைக் காப்பதற்கான பெரும் பயணத்தின் முதல் அடியாக அது அமையும்.

பல்கலைக்கழக மானியக் குழு

டி. கார்த்திக்
COMMENT   ·   PRINT   ·   T+  
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ள யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு தொடங்கப்பட்டதன் பின்னணி சுவாரஸ்யமானது. ஆங்கிலேயர்கள் ஆட்சி இந்தியாவில் முடிவடையும் தருவாயில் 1945-ம் ஆண்டில் அலிகார், வாரணாசி (பனாரஸ்), டெல்லி ஆகிய இடங்களில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. இந்தப் பல்கலைக்கழகங்களை மேற்பார்வையிடுவதற்காகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் பல்கலைக்கழக மானியக் குழு.
சுதந்திரத்திற்குப் பிறகு 1947-ல் இதர பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடும் பொறுப்பு யுஜிசிக்கு வழங்கப்பட்டது. 1948-ம் ஆண்டில் மறு நிர்மானம் செய்யப்பட்ட இந்த அமைப்பு இங்கிலாந்தில் இருப்பது போன்ற அதிகாரங்கள், உறுப்பினர்களுடன் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது.
இப்படிச் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்புதான் உயர் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் அமைப்பில் மிகப் பெரியது. மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் நேரடியாகச் செயல்படும் இந்த அமைப்பின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. புனே, போபால், கொல்கத்தா, ஹைதராபாத், குவஹாட்டி, பெங்களூர் ஆகிய நகரங்களில் துணை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வி ஒருங்கிணைப்பு, மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு ஆகியவை இந்த அமைப்பின் முதன்மைப் பணிகள். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குதல், அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்யவும் இந்த அமைப்புக்கே அதிகாரம் உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கும் உயர்கல்வி நிலையங்களுக்கும் இடையே யுஜிசி பாலமாகத் திகழ்கிறது. உயர்கல்வி குறித்த முடிவுகளை எடுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்கும் பணியையும் இந்த அமைப்பு செய்து வருகிறது.
இந்த அமைப்புக்கென www.ugc.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் மத்தியப் பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள், சமுதாயக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவற்றின் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. யுஜிசி தொடர்பான முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகள், கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், யுஜியின் அதிகாரங்கள் என அனைத்துத் தகவல்களும் இடம் பிடித்துள்ளன.
உயர்க் கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் முதலில் பார்க்க வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் அமைப்பு பல்கலைக்கழக மானியக் குழு.


காதல் நல்லது: மகனுக்குத் தந்தையின் அறிவுரை

ஜான் ஸ்டெய்ன்பெக்
COMMENT (3)   ·   PRINT   ·   T+  
3
ஜான் ஸ்டெய்ன்பெக்
ஜான் ஸ்டெய்ன்பெக்
காதலிப்பதைப் பெற்றோர்களிடம் எப்படிச் சொல்வது, அப்படிச் சொன்னால் அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற மனத் தடுமாற்றம் இன்றைய இளைஞர்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் காதலிப்பதற்காக அப்படி எந்த மனத் தடுமாற்றமும் அடையத் தேவையில்லை என்பதை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜான் ஸ்டெயின்பெக் தன் மகனுக்கு எழுதிய இந்தக் கடிதத்தைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம். இந்தக் கடிதம் எழுதப்பட்ட ஆண்டு 1958. பதின்பருவத்தில் இருக்கும் மகன், உறைவிடப் பள்ளியில் தன்னுடன் படிக்கும் ஒரு பெண்ணைக் காதலிப்பது பற்றிக் கூறியதற்கு ஜான் ஸ்டெய்ன்பெக் எழுதிய பதில் கடிதம்:
அன்புள்ள தாம்,
இன்று காலை உன் கடிதம் எங்களுக்கு கிடைத்தது. நான் அதற்கு என் பார்வையில் இருந்து பதிலளிக்கிறேன். உன் அம்மா, எலைன் அவர் பார்வையில் பதிலளிப்பார்.
முதலில், நீ காதலிக்கிறாய் என்றால் அது நல்ல விஷயம். அதுதான் வாழ்க்கையில் அனைவருக்கும் நடக்கிற சிறந்த விஷயம். அதனால், அதை ஒரு சின்ன விஷயமாகவோ, எளிதான விஷயமாகவோ ஆக்குவதற்கு யாரையும் அனுமதிக்காதே.
இரண்டாவது, காதலில் பல வகைகள் இருக்கின்றன. சுயநலம், ஈர்ப்பு, தற்பெருமை காட்டிக்கொள்ளும் வகை ஒன்று. இது காதலை சுய முக்கியத்துவத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும். இது ஒரு மோசமான , முடக்கிவிடும் தன்மையுடைய காதல். அடுத்தது உன்னிடம் இருக்கும் இரக்கம், அக்கறை, மரியாதை போன்ற எல்லா நற்பண்புகளையும் வெளிக்கொண்டுவரும் வகை. உன் நடத்தைகளுக்காகக் கிடைக்கும் சமூக மரியாதையைப் போன்றே ஒரு தனி மனிதரிடம் உனக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் தனித்துவமும் மதிப்பும் வாய்ந்தது. முதல் வகை உன்னை நோயாளியாக்கி, சிறுமைப்படுத்தி, வலிமையற்றவனாக ஆக்கிவிடும். ஆனால் இரண்டாவது, உன்னுள் இருக்கும் வலிமை, துணிவு, நற்குணங்கள், நீ அறிந்திராத அறிவு உட்பட அனைத்தையும் வெளிப்பட வைக்கும்.
நீ இது ‘பப்பி லவ்’ இல்லை என்கிறாய். ஒரு வேளை நீ இந்த உணர்வை அழுத்தமாக உணர்ந்தால், அது நிச்சயமாய் ‘பப்பி லவ்’ கிடையாது.
ஆனால், நீ என் அபிப்பிராயத்தைக் கேட்பதாய் நினைக்கவில்லை. எல்லோரையும்விட உனக்கு அது நன்றாகத் தெரியும். இதை நீ எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று என்னிடம் ஆலோசனை கேட்கிறாய். அந்த உதவியை என்னால் உனக்குச் செய்ய முடியும்.
உன்னுடைய இந்த அன்பின் நோக்கம் சிறந்தது, அழகானதும் கூட.
நீ யாரையாவது காதலித்தால் அதை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை.
ஏதோவொரு காரணத்தால் நீ எதிர்பார்க்கும் அன்பு உனக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால், அதற்காக உன் அன்பைக் குறைத்து மதிப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை.
கடைசியாக, என்னால் உன் உணர்வைப் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், நானும் அதைக் கடந்து வந்திருக்கிறேன். உனக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நாங்கள் சுசனை (தாமின் காதலி) சந்திப்பதற்கு ஆவலாக இருக்கிறோம். அவளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கும். உன் அம்மா, எலைன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார். இந்த விஷயத்தில் என்னைவிட உன் அம்மா, உனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கலாம்.
அத்துடன் இழப்பைப் பற்றி எப்போதும் வருந்தக் கூடாது. ஒருவேளை இது சரியானதாக இருந்தால், நிச்சயமாக அது ஈடேறும். இதில் முக்கியமானது, அவசரப்படக் கூடாது. சிறந்தது எதுவும் விலகிப் போகாது.