Saturday, 27 September 2014

ஆன்லைனில் மலர்ந்த உறவுக்கு ஆயுசு குறைவு: ஆய்வு

ஐ.ஏ.என்.எஸ்.
COMMENT (3)   ·   PRINT   ·   T+  
கோப்புப் படம்
கோப்புப் படம்
நீங்கள் சமூக வலைதளங்களில் வாழ்க்கைத் துணையை தேடுபவரா? ஆன்லைன் துணையுடன் மலர்ந்த உறவு அதிவேகமாக முறிவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நிஜ உலகில் சந்தித்து ஜோடி ஆனவர்களைவிட, இணைய உலகில் சந்தித்து ஜோடி ஆனவர்கள் இடையே சீக்கிரம் பிரிவு நேரும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சமூக வலைதளங்கள் மூலம் புதிய நபர்களைத் தேடி, நண்பர்களாக்கி, அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வது சகஜமாகி வருகிறது. மேலும் இதற்கென பல புதிய இணையதளங்களும், மொபைல் செயலிகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
ஒரு ஆன்லைன் சந்திப்பின் மூலம் உருவான ஜோடிகளுக்கும், நிஜவுலக சந்திப்பின் மூலம் உருவான ஜோடிகளுக்கும் நடுவில் ஏற்படும் பிரிவுகளைப் பற்றி புத்தம்புது ஆய்வு ஒன்றை பெல்ஜியமில் அமைந்துள்ள வெர்சுவல் ரியாலிட்டி மெடிகல் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த பிரெண்டா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
எங்கு சந்திக்கிறார்கள் உள்ளிட்ட சில கூறுகளை வைத்து, அந்த ஜோடி முறியுமா, ஒன்றாக இருப்பார்களா என்பதை கணிக்க முடியும் என பிரெண்டா தெரிவிக்கிறார்.
இந்த கணிப்புகள் திருமணம் செய்தும், திருமணம் செய்துகொள்ளாமலும் ஒன்றாக இருப்பவர்கள், மேலும் எவ்வளவு நாட்கள் அந்த உறவு நீடித்துள்ளது என்பதைப் பொருத்து மாறுபடும்.
"எப்போதுமே, நம்பகத்தன்மை மற்றும் நெருக்கம் ஆகிய இரண்டும் ஒரு ஜோடி ஒன்றாக இருப்பார்களா இல்லையா என்பதை முடிவு செய்யும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. அது ஆன்லைன் மூலம் ஒன்றான ஜோடியாக இருந்தாலும் சரி. நிஜவுலகில் சந்தித்து ஜோடியானவர்களாக இருந்தாலும் சரி" என்று கூறுகிறார் பிரெண்டா.

Friday, 19 September 2014


ஆண்டவருக்கு உதவ உங்களுக்கு வாய்ப்பு

பரலோக ராஜ்ஜியம். பல்வேறு மக்களும் கூடியிருக்கிறார்கள். அவர்களுக்கான வரங்களையும் தண்டனைகளையும் முடிவு செய்ய வேண்டிய நேரம். தேவ குமாரன் அந்த மக்களில் சிலரைத் தனது வலது புறம் நிற்கும்படி சொன்னார். மற்றவர்களை இடது புறம் நிற்கும்படி சொன்னார்.
வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காகவே தயார்ப்படுத்தப்பட்டிருக்கும் ராஜ்யத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். அவர்கள் செய்த நல்ல காரியம் என்ன என்பதையும் அவர் விளக்கினார் இயேசு பிரான். தான் கஷ்டத்தில் இருந்தபோது உதவி செய்தவர்கள் நீங்கள் என்றார்.
“பசியாக இருந்தபோது உணவு கொடுத்தீர்கள். தாகமாக இருந்தபோது தண்ணீர் கொடுத்தீர்கள். ஆதரவற்ற அந்நியனாக இருந்தபோது என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள். உடை இல்லாமல் தவித்தபோது உடை கொடுத்தீர்கள்.
படுத்த படுக்கையாக இருந்தபோது என்னை விசாரிக்க வந்தீர்கள். காவலில் வைக்கப்பட்டிருந்தபோது என்னைப் பார்க்க வந்தீர்கள்” என்றார் இயேசு.
சொர்க்கத்துக்கு வழிகாட்டப்பட்டவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆண்டவர் எப்போது பசியாகத் தம்மிடம் வந்தார்? எப்போது தகத்தோடு தம்மிடம் வந்தார்? அவர் எப்போது ஆதரவற்றவராக இருந்தார்? நோய்வாய்ப்பட்டுப் படுத்திருந்தது எப்போது என்னும் கேள்விகள் அவர்கள் மனங்களில் எழுந்தன. அந்தச் சமயத்தில் நாங்கள் அவருக்கு உதவிசெய்ததாக நினைவில்லையே என்று குழம்பினார்கள்.
“ஏழை, எளியவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியவர்களுக்கு நீங்கள் செய்த உதவிகள் எனக்கே செய்த உதவிகள். அவர்களுக்குச் செய்ததன் மூலம் நீங்கள் எனக்குத்தான் உதவி செய்தீர்கள்” என்றார் இயேசு கிறிஸ்து. பிறகு அவர் தன் இடது பக்கம் நிற்பவர்களைப் பார்த்து, “நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நெருப்பில் போய் விழுங்கள்” என்றார்.
அவர்கள் தலை குனிந்து நின்றார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பினார்கள்.
“நான் பசியாக இருந்தபோது எனக்கு உணவு அளிக்க மறுத்தீர்கள். தாகமாக இருந்தபோது தண்ணீர் தரவில்லை. ஆதரவற்ற அந்நியனாக இருந்தபோது என்னைச் சேர்ஹ்ட்துக்கொள்ளவில்லை” என்றார் இயேசு.
அவர்களுக்குப் புரியவில்லை. “நீங்கள் எப்போது கஷ்டத்தில் சிக்கி எங்களிடம் வந்தீர்கள்? அப்படி வந்திருந்தால் நாங்கள் உங்களுக்கு எப்படி மறுத்திருப்போம்? நீங்கள் நோயில் விழுந்திருந்தால் நாங்கள் பாராமுகமாக இருந்திருப்போமா?” என்று கேட்டார்கள்.
“எளிய மனிதர்கள் பலர் தங்களுக்குக் கஷ்டம் நேர்ந்தபோது உங்களை நாடி வந்து உதவி கேட்டார்கள். அவர்களுடைய கோரிக்கையை நீங்கள் உதாசீனம் செய்தீர்கள். அவர்களுக்கு மறுத்தது எனக்கு மறுத்ததுபோலத்தான். நீங்கள் உதாசீனம் செய்தது அந்த ஏழைகளை அல்ல. என்னைத்தான்” என்றார்.
நம் ஒவ்வொருவர் முன்னாலும் ஆண்டவர் ஒவ்வொரு நாளும் வருகிறார். ஏழைகள் வடிவில். நோயாளிகள் வடிவில். ஆதரவற்றவர்கள் வடிவில்.
அவர்களுக்கு நாம் செய்யும் உதவி இறைவனுக்குச் செய்யும் உதவி. அவர்கள் வடிவில் இறைவனைக் கண்டு, அவர்களுக்கு உதவுவதன் மூலம் இறைவனுக்கு உதவிசெய்யலாம்.
இந்த உதவிதான் இறைவனின் அன்புக்குப் பாத்திரமாவதற்கு நமக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த வாய்ப்பு. மிக எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பும்கூட.
(ஆதாரம்: மத்தேயு25:31-46)

சுவை தேடி: கும்பகோணம் டிகிரி காபி


குடகு மலையில் தோன்றித் தஞ்சைக்கு ஓடிவந்த காவிரி கூடவே காபி மீதான காதலையும் கொண்டுவந்து சேர்த்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. தஞ்சை நகரின் எந்தவொரு ஹோட்டலிலும் காபியின் சுவைக்குக் குறைந்தபட்ச உத்திரவாதம் உண்டு. வீட்டுக்கு வந்த விருந்தினரை வரவேற்று உபசரிக்கையில் காபியா, டீயா என்று கேட்பது வழக்கமில்லை. காபி ஸ்ட்ராங்கா வேணுமா லைட்டா வேணுமா என்பதுதான் பொதுவான கேள்வியாக இருக்கும். பால் இல்லாத வேளைகளில் வரக் காப்பியைத் (பால் கலக்காத காபி) துணையாகக் கொள்வதும் உண்டு.
காபி பொடியைப் பொறுத்தவரை கம்பெனி தயாரிப்புகளைவிடவும் தேவையான அளவுகளில் சிக்கரி கலந்து அரைத்துக்கொடுக்கும் உள்ளூர்க் கடைகளுக்கே முன்னுரிமை. சுருக்கமாகச் சொன்னால், தஞ்சைப் பகுதியே ஆனந்தக் கசப்புக்கு அடிமையான பிரதேசம். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும்கூட காபிக்கென்று புகழ்பெற்ற உணவகங்கள் இருக்கின்றன. இருந்தாலும் தஞ்சாவூருக்கும் காபிக்கும்தான் அதிக நெருக்கம். மாவட்டம் முழுவதற்குமான காபி பெருமையைத் தற்போது கும்பகோணமே தட்டிப் பறித்துக்கொண்டு போய்விட்டது. கோயில் நகரம், அங்கு கூடுகின்ற சுற்றுலாப் பயணிகள் என்ற காரணங்களையெல்லாம் தாண்டி கும்பகோணத்திற்கு அந்தப் பெருமை கிடைத்தது பஞ்சாபிகேச அய்யர் நடத்திய லெட்சுமி விலாஸ் என்ற காபிக் கடையால்தான். காபிக்குத் தேவைப்படும் பாலுக்காக அவர் பதினைந்து பசு மாடுகளைப் பராமரித்து வந்தார். அதனால் அந்தக் கடைக்குப் பசும்பால் காபிக்கடை என்ற பெயரும்கூட உண்டு.
முதல் தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் என்பதால் காபி அருந்துவது தமிழகக் கலை இலக்கிய ரசனையின் ஒரு பகுதியாகவும் ஆகிவிட்டது. தி. ஜானகிராமன் தனது கதாபாத்திரங்களை நுரைத்து மணத்த “கும்மாணம்” காபியை உள்ளம் குளிரக் குடிக்க வைத்து மனநிறைவை அடைந்திருக்கிறார். தஞ்சை ப்ரகாஷ் தனது வடிகால் வாரியம் என்ற கதையில் காபி போடும் செய்முறையை வாசகர்களுக்கு விளக்கி உதவியிருக்கிறார். கறந்த பசும்பாலில் தண்ணீர் கலக்காமல் ஆடை படராமல் தயாரிக்கிற காபிக்குத்தான் டிகிரி காபி என்ற முதல் மரியாதை. பாலுக்கு இணையான முக்கியத்துவம் காபி டிக்காஷனைத் தயாரிப்பதற்கும் உண்டு.
நூறு கிராம் அளவுள்ள காபிக் கொட்டைகளைப் பதமான சூட்டில் வறுத்து அரைத்தெடுக்கையில் அது எண்பது கிராம் வர வேண்டும். அந்தக் காபிப்பொடியிலிருந்து டிக்காஷன் வடித்தெடுக்க இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும். காபிப் பொடியிலிருந்து இரண்டாவது தடவை டிக்காஷன் வடிக்கக் கூடாது. டிக்காஷனைப் பாய்லரில் வைத்து சூடு காக்க வேண்டும். காபி கலக்கும்போது முதலில் சர்க்கரையை இட்டு அதன்மீது டிக்காஷனை ஊற்றி அதற்கும் மேலாகத் தேவையான அளவில் பாலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். எங்கேயும் எப்போதும் பாக்கெட் பால் என்றாகிவிட்ட பிறகு டிகிரி காபி என்று பெயர் சொல்வதில் இப்போது எந்தப் பொருத்தமும் இல்லை.
கடையில் பாய்லரும் பித்தளை டவராக்களும் இருந்தால் மட்டும் டிகிரி காபி ஆகிவிடாது. ஆனாலும் தேசிய நெடுஞ்சாலையின் வழியெல்லாம் கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயர்ப் பலகைகளைப் பார்க்காமல் பயணிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

மாய உலகில் நிஜ ஷாப்பிங்

கடை கடையாக ஏறி இறங்கிப் பொருட்கள் வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இருந்த இடத்திலேயே அன்றாட வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்க முடியும் என்பதை இப்போது இணையம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு, அசோச்சம் நடத்திய ஆய்வு இதை உறுதி செய்திருக்கிறது. இந்தியாவின் மின் வர்த்தகம் 88 சதவீதமாக வளர்ச்சியடைந்திருக்கிறது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அது மட்டுமில்லாமல், இந்தியாவில் 15 கோடிப் பேருக்கு இணையத்தைப் பயன்படுத்தும் வசதியிருக்கிறது என்றும் அந்த ஆய்வு சொல்கிறது. ஆண்களில் 65 சதவீதமும், பெண்களில் 35 சதவீதமும் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வமாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பெருகிவரும் இணையப் பயன்பாடும், காலத்திற்கேற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளத் தயராக இருப்பதும் ஆன்லைன் ஷாப்பிங்கின் வெற்றிக்குக் காரணமாகியிருக்கிறது. நகர்ப்புற மக்கள் பெரிய அளவில் ஆன்லைன் ஷாப்பிங் நோக்கி நகர்வதற்குப் பல்வேறு அம்சங்களைக் கூறலாம்.
எளிமையான விற்பனை முறை
ஆன்லைன் ஷாப்பிங்கில் இருக்கும் பல விதமான வசதிகள் இளைஞர்களை மட்டுமில்லாமல் பெரியவர்களையும் கவர்ந்திருக்கின்றன. கடைக்குச் செல்லும் நேரத்தை மிச்சப்படுத்துவது, எப்போதும் கிடைக்கும் தள்ளுபடி, பல இணையதளங்களில் வாங்கும் விலையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வது, பரிசாக அனுப்பும் வசதி போன்றவை ஆன்லைன் ஷாப்பிங்கின் சிறப்பம்சங்கள்.
“பொருட்கள் தேர்வில் இருந்து, விலையைத் தீர்மானிப்பது வரை பலவிதமான வாய்ப்புகளை ஆன்லைன் ஷாப்பிங் அளிக்கிறது. தில்லியில் மட்டுமே கிடைக்கும் ஒரு புத்தகத்தை இரண்டே நாட்களில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வீட்டிற்கே வரவழைக்க முடிகிறது. தள்ளுபடி விலையையும் பல தளங்களில் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கிக் கொள்ள முடிகிறது” என்கிறார் பொறியியல் மாணவி பவானி.
நேர நிர்வாகம்
ஆன்லைன் ஷாப்பிங்கைத் தேர்ந்தெடுக்கும் பலரும் சொல்லும் காரணம் நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்பதுதான். “கடைக்குச் சென்றுதான் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற நிலைமையை ஆன்லைன் ஷாப்பிங் மாற்றியிருக்கிறது. எனக்குத் தேவையான மின்சாதனங்களைக் கூட ஆன்லைன் ஸ்டோர்களிலே வாங்கிக்கொள்ள முடிகிறது” என்று கூறும் வரைகலை வடிவமைப்பாளரான கோபி. மொபைல், ஹார்ட் டிஸ்க், ஆடைகள் போன்றவற்றை கூட ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கியதாகச் சொல்கிறார்.
ஐடி தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் எழிலரசி இந்தக் கருத்தை ஆமோதிக்கிறார். “ஆன்லைன் ஸ்டோர்களுக்கான இணையதளங்கள் அளிக்கும் பல விதமான தேர்வுகள் ஆன்லைன் ஷாப்பிங்கை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங்கில் புத்தகங்களை வாங்குவது நம்பகத்தன்மையுடன் இருக்கிறது. ஆனால் அதே சமயம் பொருட்களை மாற்றுவதற்கான வழிகளை இன்னும் எளிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்கிறார்.
தொழில் வாய்ப்புகள்
ஆன்லைன் ஷாப்பிங்கைப் பொருட்கள் வாங்க மட்டும் பயன்படுத்தாமல் அதையே வேலை வாய்ப்பாகவும் மாற்றியிருக்கிறார் சூரஜ். ‘தம்ஸ்ட்ரக் கலக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை ஆரம்பித்து, வெற்றிகரமாக ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளை வழங்கி வருகிறார். டி ஷர்ட்கள், காப்பி கோப்பைகள், புகைப்பட ப்ரேம்கள் போன்ற இளைஞர்களுக்கு பிடித்த பரிசு பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார் 24 வயதாகும் சூரஜ்.
“எடுத்த உடனேயே ஆன்லைன் ஸ்டோரை ஆரம்பிக்க பெரிய முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதை நிர்வகிக்க ஒரு பெரிய அளவிலான மனித ஆற்றலும் தேவை. ஆனால் குறைந்த விற்பனை முதலீட்டில் இந்த ஆன்லைன் ஷாப்பிங் சேவையை ஆரம்பிக்க ஃபேஸ்புக் சிறந்த வழியாக இருந்தது. அதோடு பேஸ்புக்கின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். அதனால் விற்பனையைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. 40 சதவீத ஆர்டர்கள் எங்களுக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்தே கிடைக்கின்றன” என்கிறார் சூரஜ்.
பன்முகத்தன்மை
ஆன்லைன் ஷாப்பிங்கின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக நகரமயமாக்கத்தையும் இணையத்தின் பன்முகத்தன்மையும் சொல்கிறார் பனுவல் ஆன்லைன் புத்தகக் கடையின் நிர்வாகிகளின் ஒருவரான அமுதரசன். “ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு முன்னர், அதைப் பற்றிய விமர்சனங்களைப் படிப்பது, முன்னுரையைப் படிப்பது போன்ற வசதிகளை ஆன்லைன் ஷாப்பிங் வழங்குகிறது. பனுவலை ஆன்லைன் கடையாகத் திறந்ததால் சென்னையைத்
தவிர பிற பகுதிகளில்
இருக்கும் தமிழ் மக்களுக்கும் அறிமுகமாகி இருக்கிறது. இதற்கு ஆன்லைன் ஷாப்பிங்தான் காரணம்” என்கிறார் அமுதரசன்.
ஷாப்பிங்கிற்கு நேரமும் பொறுமையும் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக ஆன்லைன் ஷாப்பிங் அமைந்திருப்பதைத் தெளிவாக உணர முடிகிறது. ஆன்லைனிலேயே பணம் செலுத்துதல், டெலிவரி செய்யும்போது பெற்றுக்கொள்ளுதல், எப்போதும் தள்ளுபடி, ஆகிய அம்சங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை இளைஞர்கள் லைக் செய்ய முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.
ஃபேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஆன்லைன் ஷாப்பிங்குக்கான விளம்பரங்களும் இணைப்புகளும் சுண்டி இழுப்பதால் இளைஞர்கள் இதில் ஈர்க்கப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நடைப் பயிற்சி: உடல் தன்னைத் தானே அறியும் முயற்சி


  • படம் : எஸ். ஆர். ரகுநாதன்
    படம் : எஸ். ஆர். ரகுநாதன்
  • படம் : கே. வி. ஸ்ரீநிவாஸ்
    படம் : கே. வி. ஸ்ரீநிவாஸ்
எனது தந்தை நடப்பதை மிகவும் விரும்புபவர். அவரது மிகப்பெரிய சடங்கும், பிரார்த்தனையும், வேலையும் அதுதான். ஒவ்வொரு நாள் காலையிலும் நான்கு மணிக்கு எங்கள் வீடு அவரது ஷூ சத்தத்தில் அதிரும். ஒரு டம்ளர் காபியைக் குடித்துவிட்டு வெளியேற பரபரத்துக் கொண்டிருப்பார். பத்து வயதான எங்கள் வளர்ப்பு நாயும் பொறுமையற்று உறுமலுடன் காத்திருக்கும். எங்கள் அண்டை வீட்டு நாயும் காலை நடையில் கலந்துகொள்ளும். அது இளம் டாபர்மேன். பெயர் மார்க்கஸ். எங்கள் டாக்ஸ்ஹண்ட் முன்னால் அணிவகுக்க, மார்க்கஸ் பின்னால் செல்வான். இரண்டும் என் அப்பாவின் சமிக்ஞைகளைக் கவனமாகப் பின்தொடர்பவை. ஒரு கட்டத்தில் எங்கள் டாக்ஸ்ஹண்க்கு வயதானதால் களைப்பு ஏற்பட்டது. ஆனால் காலை நடையை விடவேயில்லை.
நடை என்பது கூட்டுச்செயல்பாடு. உலகத்துக்கு ஹலோ சொல்லும் வழி. எனது குழந்தைப்பருவ நினைவுகள் நடை அனுபவங்களால் நிறைந்தவை. அதனால்தான் நடை இன்றி நட்பு சாத்தியமல்ல என்றும் சங்கடமில்லாத வயோதிகம் சாத்தியம் இல்லையென்றும் நம்புகிறேன். ஒருவர் நடக்கும்போது, தொலைவில் உள்ள உலகங்கள் குறித்து நினைவுகொள்கிறார். அவற்றைப் பற்றிப் பேசுகிறார். உலகத்தை அளக்கும் வழிகளில் ஒன்றாக நடை மாறியிருக்கிறது. தத்துவங்கள் நடைப்பயிற்சிலேயே தொடங்கியிருக்க வேண்டும் என்றும் உணர்கிறேன். தோரோ, எமர்சன், ஹைடக்கர் ஆகியோரைப் யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் உண்மையிலேயே பேசியபடிதான் நடந்தார்கள். அவர்களது தத்துவங்கள் செழுமையாகவும் அதிக உறுதிப்பாட்டுடனும் இருக்கின்றன.
நடையின் பல செய்திகள்
நடை நம்மைச் சிறந்த வகையில் நிதானப்படுத்துகிறது. உடல் தன்னைத்தானே அறியும் முயற்சியே நடைப்பயிற்சி. அது சாலை ஓர நடைபாதையாக இருக்கலாம், நதியின் கரையாக இருக்கலாம், வனத்தில் நடக்கலாம், வெறுமனே குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்வதாகவும் இருக்கலாம். நடப்பது என்பது ஒரு அறிதல், கண்டுபிடிப்பு, உரையாடல், நட்புச் செயல்பாடு, ஒரு தியானம், பிரதிபலிப்பு, பிரார்த்தனை. களைப்புற்ற நிலையில் விறைத்துப்போயுள்ள உடலைத் தளர்த்தும் செயல்பாடாகக்கூட நடைப்பயிற்சி இருக்கிறது. நமது அன்றாடவேலைகளில் பலவிதமான செய்திகளையும் பலன்களையும் கொண்டது நடைப்பயிற்சி மட்டுமே.
நடைப்பயிற்சியில் கடைசித் தூரத்தை எட்டும்போது நீங்கள் உங்கள் உடலைச் சவாலுக்கு இழுக்கிறீர்கள். உங்கள் உடலில் வியர்வை பொங்கி வழியும்போது விளையாட்டு, வலி இரண்டுமே இருக்கிறது. அன்றாடம் நடக்கும் தூரத்தைவிடக் கூடுதலாக ஒரு மைல் நடைப்பயிற்சியைப் பூர்த்தி செய்துவிட்டு, ஓய்ந்துபோய் ஒரு தேநீருக்காகவோ, பிஸ்கெட் சாப்பிடவோ அமர்பவர் உணரும் சாதனையைப் போர்வீரன்கூட உணரவே முடியாது. நாம் நடக்கும்போது நமது ஆழத்தில் உள்ள சுயத்துடன் உரையாடுகிறோம். அத்துடன் உடலின் லயத்தையும், அமைதியையும் கூர்ந்து கவனிக்கிறோம். நடைப்பயிற்சி என்பது குணமூட்டக்கூடியது, சிகிச்சை இயல்புடையது, பேயோட்டும் செயல்பாடும்கூட. மேலும் நடைப்பயிற்சி, உலகுடன் ஒட்டி வாழ்வதற்கான ஒரு வழிமுறை.
வாழ்க்கையின் கொண்டாட்ட மான தருணங்களில் ஒன்றாக நடை இருக்கிறது. ஒரு குழந்தை முதல்முறை நடைபயிலத் தொடங்கும்போது, விழுந்து எழும்போது, அதைக் காணும் பெற்றோரின் மகிழ்ச்சி விவரிக்க இயலாதது. நடைபயிலத் தொடங்கும் குழந்தைக்கும் பெரிய சாதனை செய்த உணர்வு இருக்கும். பெற்றோரும், தாத்தா, பாட்டியும் அந்தக் கணத்தைப் பெருமிதத்துடன் காண்கின்றனர். வரலாறு உருவாவதின் முதல் படி அது.
நடக்கும்போது வெவ்வேறு புலன்களும் செயல்படுகின்றன. நீங்கள் பார்க்கிறீர்கள், நீங்கள் தொடுகிறீர்கள், நிற்கிறீர்கள், எதையோ நினைவுக்குக் கொண்டுவர முயல்கிறீர்கள், ஒரு பூவை, ஒரு முகத்தை. நாம் நடக்கும்போது உலகத்துடன் உரையாடுவது மட்டுமின்றி, ஆழமான புரிதலுக்காகக் கேள்வியும் கேட்கிறோம்.
ஒரு பகல் பொழுதில் நடப்பதிலிருந்து அந்தப் பிராந்தியத்தை வரையறுக்க வேண்டும் என்று காந்தி கருதினார். பொதுவெளியை மீட்டெடுப்பதற்கான நாடகமாக நடைப்பயிற்சி இருக்கிறது. நகரங்கள் நடப்பவர்களுக்குச் சாத்தியமற்றதாக மாறிவருகிறது. பாதசாரிகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறார்கள். ஒருவரின் நடை அவரது உயிரியலோடு தொடர்புடையதுதான். ஆனால் ஒரு நகரத்தின் வரலாற்றுடன் நுட்பமான தொடர்புடையது. சிறந்த நகரங்கள் பாதசாரிகள் வழியாகவே உயிர்ப்புடன் உள்ளன என்று கருதுகிறேன். அவர்களது நடைச் சடங்குகள் நகரத்தை வரையறுக்கின்றன. எல்லா இடங்களையும் பரிச்சயம் உள்ளதாக மாற்றுகின்றன. நகரில் ஓடும் மிதிவண்டிகள் இன்னும் மனிதத்தன்மை மிகுந்தவையாக இருக்கின்றன. ஆனால் ஒரு கார் நம்மைக் கடக்கும்போது, நகரம் மனிதத் தன்மையை இழந்துவிடுகிறது.
பாதசாரிகளை முன்னிட்டுத்தான் நகர்ப்புறத் திட்டமிடுதல் தொடங்கப்பி வேண்டும். நகர்ப்பகுதிகளில் நடந்துசெல்லாமல் நம்மால் முறைசாராப் பொருளா தாரத்தைப் புரிந்து கொள்ளமுடியாது. அந்த முறைசாராப் பொருளாதார வழிமுறைகளில்தான் நம்மில் 70 சதவீத குடிமக்கள் வாழ்கின்றனர். நாம் நடப்பதை நிறுத்தும்போது நகரங்கள் இறக்கத் தொடங்குகின்றன. பஜாரும், சாலையோர காபிக் கடையும் மறையத் தொடங்குகின்றன. சென்னையில் உள்ள மெரினாக் கடற்கரையை நடையாளர்களைத் தவிர்த்துக் கற்பனை செய்துபாருங்கள். வாழ்வதற்குக் கட்டுப்படியாகும் நகரத்தை நமது நடை வழியாகவே உருவாக்க முடியும். டீக்கடைக்காரர், பேல் பூரி விற்பவர், வடை, பஜ்ஜி கடைகள், வெற்றிலைக் கடைக்காரர், பூ விற்பவர், குப்பை அள்ளுபவர் அனைவரும் வாழ்வதற்குத் தகுந்த நகரம் எனில் அது தன் இதயத்தில் பாதசாரிகளைப் புரிந்துகொண்டதாக இருக்க வேண்டும். உணவு, விதவிதமான சப்தங்கள், பொழுதுபோக்கு, அந்நியர்களைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளுதல் என்று எல்லா அனுபவங்களும் நடையின் வழியாகவே நமக்குக் கிடைக்கின்றன.
எதிர்ப்பு வடிவம்
நடையைக் காந்தி தனது சத்தியாகிரக வழிமுறையாகக் கண்டார். எந்தப் போராட்டத் திற்கும் உடலே உருவமாக இருக்கிறது. காந்தி ஒரு சாம்ராஜ்யத்தை வீழ்த்தத் தொடர்ந்து நடந்தார்.
இன்று நகரங்கள் மாறிவிட்டதை உணர்கிறேன். நடையாளர்கள் செயற்கைப் பூங்காக்களுக்கும் பிரத்யேகப் பகுதிகளுக்கும் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஆனாலும் நடையாளர்களின் சமூகம் ஜீவிக்கவே செய்கிறது. அவர்கள் இந்த உலகத்திடம், “ நாங்கள் நடக்கிறோம், அதனால் நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்லியபடி அவர்கள் ஜீவிக்கிறார்கள். நடை என்பது தனிமனிதனும் சமூகமும் கூட்டுச் சேர்ந்து எழுதும் கவிதை.
@ தி இந்து (ஆங்கிலம்) சுருக்கமான மொழிபெயர்ப்பு: ஷங்கர்

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே


  • போப் இரண்டாம் ஜான் பால்
    போப் இரண்டாம் ஜான் பால்
  • புனித பீட்டர் சதுக்கம்
    புனித பீட்டர் சதுக்கம்
அது 1981-ம் ஆண்டின் மே மாதம் 13-ம் நாள் அன்றைய மாலை நேரம். எல்லா நாளையும் போல் விடிந்த அந்த நாள் எல்லா நாளையும் போல் முடிந்திருக்க வேண்டிய தருணம் அது. ஆனால் அந்த நாள் அப்படி முடியாததால் வரலாற்றின் பக்கத்தில் முக்கிய நாளாகப் பதிவுசெய்யப்பட்டது.
மாலை மயங்கி இருள் கவியத் தயாரான அந்த மாலைப் பொழுதில் போப் இரண்டாம் ஜான் பால் திறந்த வெளி ஜீப்பில் வாடிகன் சிடியில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார். போலந்து நாட்டைச் சேர்ந்த போப் 1978-ல்தான் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இத்தாலி நாட்டைச் சாராத முதல் போப் ஆண்டவர் அவரே. அவர் பெருந்திரளான தனது ஆதரவாளர்களது கூட்டத்தைக் கடந்துகொண்டிருந்தார். அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த அசம்பாவிதச் சம்பவம் நடந்தேறியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தொடர்ந்து நான்கு துப்பாக்கிக் குண்டுகள் போப்பைக் குறிவைத்துப் பாய்ந்துவந்தன. இரண்டு குண்டுகள் வயிற்றின் கீழ்ப் பகுதியைத் துளைத்தன. ஒன்று இடது ஆட்காட்டி விரலையும் மற்றொன்று வலது தோளையும் பதம் பார்த்தன. ரத்த வெள்ளத்தில் மிதந்த போப் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் போப்பின் பாதுகாவலர்கள் இருவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
போப் மீது கொலை முயற்சி
போப் இரண்டாம் ஜான் பாலை 9மிமீ ப்ரௌனிங் ஹைபவர் செமி ஆட்டோமேடிக் பிஸ்டலால் சுட்டுக் கொல்ல முயன்றவர் பல்கேரிய நாட்டின் சோபியா பகுதியைச் சேர்ந்த மெஹ்மெட் அலி அஹ்கா என்பவர். இவர் தனது பெயரை மாற்றிக்கொண்டு பொய்யான பாஸ்போர்ட் உதவியுடன் 1981 ம் ஆண்டின் மே மாதம் 10 அன்று மிலன் நகரிலிருந்து ரயில் மூலம் ரோம் நகருக்குள் ஊடுருவியுள்ளார். துருக்கியைச் சேர்ந்த ஒருவரும் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இருவரும் இவருக்கு உதவியுள்ளனர். இத்தாலியில் இருந்த பல்கேரிய ராணுவ நிபுணரான ஸிலோ வாஸ்ஸிலேவ் என்பவரே திட்டத்தை அரங்கேற்றுவதற்கான கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். போப்பை மெஹ்மெட் சுட்டுக் கொன்றவுடன் ஓரல் செலிக் என்பவர் ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்வார். அப்போது உருவாகும் களேபரத்தின் நடுவே இருவரும் தப்பித்துவிட வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால் போப்பின் மீது குண்டு பாய்ந்ததை ஒட்டி ஏற்பட்ட பதற்றமான சூழலால் கவலை கொண்ட ஓரல் செலிக் பயந்து ஓடிவிட்டார். மெஹ்மெட் கூட்டத்தினிடையே தப்பிக்க வழியின்றி போலீஸாரிடம் மாட்டிக்கொண்டார்.
மன்னிப்பு தந்த மகான்
1981 ஜூலையில் மெஹ்மெட் அலி அஹ்காவுக்கு இத்தாலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சிறையிலிருந்த மெஹ்மெட்டை 1983-ல் போப் சென்று பார்த்துவந்தார். போப் மெஹ்மெட்டை மன்னித்து ஏற்றுக்கொண்டார். மெஹ்மெட்டின் குடும்பத்தினருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். மெஹ்மெட்டின் சகோதரரையும் தாயையும் சந்தித்துப் பேசினார். இந்த உறவால் போப் கேட்டுக்கொண்டதற்கிணங்க மெஹ்மெட் மன்னிக்கப்பட்டு 2000-வது ஆண்டில் துருக்கிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் 1979-ல் பத்திரிகையாளர் ஒருவரைக் கொல்ல முயன்ற வழக்கின் காரணமாகச் சிறையிலடைக்கப்பட்டார். இத்தாலியில் சிறையிலிருந்த நாட்களைக் கழிக்க மறுத்துவிட்டது துருக்கி நீதிமன்றம். எனவே சிறைத் தண்டனை தொடர்ந்தது. தண்டனை முடிந்த பின்னர் 2010-ம் ஆண்டு ஜனவர் 10-ல் தான் மெஹ்மெட் விடுதலையானார்.
போப் இரண்டாம் ஜான் பால் மீதான தாக்குதல் திட்டத்தின் மூளையாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பான கேஜிபி இருந்ததாகச் சொல்லப்பட்டது. போலந்து நாட்டின் கூட்டொற்றுமைக்குப் பாடுபட்ட இயக்கத்திற்கு போப் தெரிவித்த ஆதரவு காரணமாக அதிருப்தி அடைந்த ரஷ்யா, போப்பைக் கொல்லச் சதி செய்தது என்று கூறப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு டாம் க்ளன்ஸி என்னும் நாவலாசிரியர் ரெட் ரேப்பிட் என்னும் புதினத்தை எழுதியுள்ளார்; கரோல்: த போப், த மேன் என்னும் தொலைக் காட்சித் தொடரும் எடுக்கப்பட்டுள்ளது. எந்தப் போப்பைக் கொல்ல மெஹ்மெட் முன்வந்தாரோ அந்த போப் 2005-ல் உடல் நலமின்றி இருந்தபோது அவர் உயிர் பிழைக்க மனமுருக பிரார்த்தித்து அவரது உடல்நலம் சீராக வாழ்த்தி கடிதம் அனுப்பினாராம் மெஹ்மெட்.

வன்முறையில் இருந்து குழந்தைகளைக் காப்போம்

பெங்களூரில் ஆறு வயதுக் குழந்தை மீதான பாலியல் வன்முறைச் சம்பவம் அனைவரது நெஞ்சங்களையும் துடிதுடிக்க வைத்துள்ளது. ஆனால் அந்த வன்முறை நடைபெற்றுக் கிட்டதட்ட, ஒரு வாரம் கழித்தே அந்தச் சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்திருக்கிறது என்பது வேதனையின் உச்சம். அந்தக் குழந்தை படிக்கும் பள்ளியின் ஆசிரியரும்கூட இதைப் பற்றிப் பெற்றோருக்குத் தெரியப்படுத்தாதது மிக அதிர்ச்சியானது.
குழந்தைகள் வீட்டைத் தவிர அதிக நேரத்தைச் செலவழிக்கும் பள்ளிகளில், இது போன்ற சம்பவம் நடப்பதை நினைத்து நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். பள்ளியும் தன் பெயரைக் காப்பற்றிக்கொள்ள இந்தக் குரூரமான சம்பவத்தை அறிந்தும், அறியாததுபோல் இருந்தது பெற்றோர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் செயல்.
தற்காப்பு அவசியம்
ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயதுச் சிறுமி தனக்கு நடந்த கொடுமையை உடனே பெற்றோரிடம் சொல்லத் தவறியது அவளின் பள்ளி ஆசிரியர் மற்றும் தாய், தந்தையின் அறியாமையையே காட்டுகிறது. ஒரு குழந்தை பேசத் தொடங்கிய நாள் முதலே, இது போன்ற சம்பவங்களிலிருந்து காத்துகொள்ளும் முறைகளைக் குழந்தைக்குப் புரியும் விதத்தில் எடுத்துரைப்பது பெற்றோரின் முக்கியக் கடமை. பாலியல் உறுப்புகள் பற்றியும் அதைப் பாதுகாக்கும் முறை, பிறரின் அத்துமீறலைத் தடுக்கச் செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பாடத்துடன் சொல்லித் தர வேண்டியது ஒரு ஆசிரியரின் கடமை.
ஐந்து வயதுக் குழந்தைக்கு எதற்கு பாலியல் சம்பந்தமான போதனை? அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆண், பெண் என யாராக இருந்தாலும் அவர்களின் உடல் அமைப்பு சம்பந்தபட்ட தேவையான விஷயங்களைக் கற்றுத் தருவது காலத்தின் கட்டாயம். அதேபோல் தெரிந்தவரோ, தெரியாதவரோ தவறாக நடந்துகொண்டால் அதைப் பற்றி அச்சமின்றிப் பெற்றோரிடமோ அல்லது நம்பிக்கையான ஆசிரியரிடமோ உடனே சொல்லிவிடும் தைரியத்தை ஏற்படுத்துவது மிக முக்கியம்.
மூட நம்பிக்கைகளும் உண்மைகளும்
இந்தியாவில், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றி இருந்துவரும் சில மூட நம்பிக்கைகள் மற்றும் தவறான முடிவுகள் பற்றிப் பார்ப்போம் :
நம்பிக்கை 1 : குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஓர் அரிய நிகழ்வு.
உண்மை: சுமார் 40% முதல் 50% பேர் குழந்தையாக இருந்தபோது ஏதோ ஒரு விதத்தில் பாலியல் வன்முறைக்கு உட்பட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன.
நம்பிக்கை 2 : குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மேலைநாடுகளில்தான் நிகழும்.
உண்மை: உலகில் குழந்தைகள் மீதான அத்துமீறல் இல்லாத நாடே இல்லை என்று ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை 3 : இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஏழைகள் வாழும் குடிசைப் பகுதிகளில் மட்டும் நிகழும்.
உண்மை: எல்லா வகைக் குடும்பத்தைச் சேர்ந்தக் குழந்தைகளும் இதில் பாதிக்கப்படுக்கிறார்கள். பெங்களூரில் நடந்த சம்பவம் மேல்தட்டுக் குழந்தைகள் படிக்கும் பள்ளி.
நம்பிக்கை 4 : பாலியல் வன்முறை பெண் குழந்தைகளுக்கு மட்டுமே நிகழும்
உண்மை: 12 வயது வரை பெண், ஆண் இருபாலருமே இதில் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வயதுக்கு மேலுள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
நம்பிக்கை 5: பிரச்சினை உள்ள குடும்பங்களில்தான் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.
உண்மை: எல்லா விதமான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் வன்முறைக்கு ஆளாகின்றனர். ஆனால் பிரச்சினையுள்ள குடும்பங்களை விட, மற்றவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தையை இதிலிருந்து சுலபமாக வெளியே கொண்டுவந்துவிடுகின்றனர்.
நம்பிக்கை 6: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவன் ஒரு குற்றவாளி அல்லது அறிமுகமில்லாத நபர்.
உண்மை: இந்தத் தவறை இழைப்பவன் நம்மைப் போலச் சாதாரண மனிதன்தான். பெரும்பாலான சமயத்தில் மனைவி, குழந்தை என்று குடும்பத்துடன் இயல்பான வாழ்க்கை வாழ்பவனே இந்தத் தவறைப் புரிகிறான்.
நம்பிக்கை 7: பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறவன் குழந்தைக்குப் பரிச்சயமில்லாதவன்.
உண்மை: இது ஆபத்தான நம்பிக்கை. 70% வழக்குகளில் குழந்தைக்கு நேரடியாகப் பரிச்சயமான நபரே இத்தவறைப் புரிகிறார். 20% வழக்குகளில் குடும்ப நண்பர் அல்லது உறவுக்காரரே இதில் ஈடுபடுகிறார் என்பது கசப்பான உண்மை.
நம்பிக்கை 8: குழந்தை மீதான பாலியல் வன்கொடுமையைக் காவல்துறையில் பதிவுசெய்வது அந்தக் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கும்
உண்மை: இது பற்றி புகார் அளிக்காவிட்டால் குற்றவாளி அதே தவறை வேறு ஒரு குழந்தையிடம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
அவசியமான பயிற்சி
ஒரு தாயைவிடச் சிறந்த நபர் குழந்தையின் வாழ்வில் யாரும் இல்லை. நல்லது, கெட்டது என்று பார்த்துப் பார்த்துக் கற்றுக்கொடுக்கும் தாய், தன் குழந்தைக்கு நான்கு வயது முதலே சொல்லித் தர வேண்டிய பாடம் பாலியல் வன்முறையைத் தடுப்பது எப்படி? பாதிக்கப்பட்டால் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன போன்றவைதான். இதே முறையை ஒரு ஆசிரியரும் தன் வகுப்புகளில் குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் கற்றுத்தர முடியும்.
பயிற்சி முறை
முதலில் குழந்தையை அருகில் அமரவைத்து, உடல் அங்கங்கள் பற்றி விவரிக்க வேண்டும். முக்கியமாக மார்புப் பகுதி, கால்களுக்கு இடையே உள்ள பகுதி மற்றும் பின் பகுதி என ஒரு பொம்மை அல்லது சார்ட் படத்தைக் காட்டிக் கற்றுத்தர வேண்டும்.
இப்பகுதிகள் ஒருவருக்குச் சொந்தமான முக்கிய உறுப்பு என்றும் அதைத் தொடவோ, அது பற்றி பேசவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் புரியவைக்க வேண்டும். குளிக்க வைக்கும்போது அம்மா, அப்பா அல்லது பாட்டி மட்டும் தொட அனுமதிக்கக் கற்றுத்தர வேண்டும்.
வீடு, பள்ளி, விளையாடும் இடம், ஆட்டோ அல்லது வேனில் வரும்போதும் இந்த உடல் பகுதிகளைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதைப் புரியும் மொழியில் சொல்வது பெற்றோரின் கடமை. அவ்வாறு எவரேனும் அந்தப் பகுதியைத் தொட முயன்றால், வேண்டாம் என உரக்கக் கத்தி அவரைத் தள்ளிவிட்டுவிட்டு அருகில் உள்ள தாய் அல்லது ஆசிரியரிடம் சென்றுவிடுவது நல்லது என்று பயிற்றுவிக்க வேண்டும்.
வேறு எங்காவது இச்சம்பவம் ஏற்பட்டால் வீட்டுக்கு வந்தவுடன் அதைப் பற்றிப் பெற்றோரிடம் உடனே சொல்லிவிட ஊக்கப்படுத்த வேண்டும். இதைப் பற்றிச் சொன்னால் பெற்றோரிடம் திட்டு விழும் என்று நம்பும் பெரும்பாலான குழந்தைகளுக்கு அது உண்மையல்ல என்பதைப் புரியவைப்பது மிக அவசியம்.
பள்ளி அல்லது வெளியிலிருந்து வரும் குழந்தையின் குணத்தில் மாறுபட்ட நடவடிக்கை, சோர்வு அல்லது வேறு மாற்றம் ஏதேனும் தென்பட்டால், பெற்றோர் அதை உடனே கவனித்து, விசாரித்து உண்மையைத் தெரிந்துகொள்ள முயல வேண்டும். தெரிந்த நபர் இக்குற்றத்தைச் செய்யும்போது வெளியில் சொல்லாமல் இருக்க குழந்தையை மிரட்டிவைப்பது சகஜம். அதைப் பற்றியும் தெளிவுபடுத்தி, பயமின்றி அம்மாவிடம் சொல்லும்படி கற்றுத்தர வேண்டும்.
வீட்டுப் பாடத்தைச் சரிவரச் செய்வது முதல் தேர்வுக்குத் தயார்செய்து நல்ல மதிப்பெண் எடுப்பதுவரை பார்த்துப் பார்த்துக் குழந்தைகள் அருகில் இருந்து உதவிடும் பெற்றோர், மேலே குறிப்பிட்ட பயிற்சிகளையும் முக்கியமாகக் கருதிச் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறையாவது இந்தப் பயிற்சியை அளித்து, இது குறித்த குழந்தைகளின் சந்தேகங்களைத் தீர்த்துவைக்க வேண்டும்.
குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசி அவர்களுக்குப் பெற்றோர் மீதுள்ள பய உணர்வை நீக்கி, இது போலக் கசப்பான சம்பவங்களை மறைக்காமல் பகிர்ந்துகொள்ளும் தைரியத்தையும் நம்பிக்கையையும் தர வேண்டும். குழந்தையைப் பாலியல் பலாத்காரத்திலிருந்து காப்பாற்றப் பெற்றோர்கள் எல்லா முயற்சிகளையும் அவ்வப்போது எடுப்பது ஒன்றே, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க உதவிகரமாக இருக்கும்.

ஃபிளிப்கார்ட்: அலையாமல் வாங்க ஆன்லைனுக்கு வாங்க

சிறிய மளிகைக் கடைக்காரர்கள் சூப்பர் மார்க்கெட்களைப் பார்த்து பயந்தார்கள். பின்னர் கார்ப்பரேட் கம்பெனிகள் வந்தன. சமீபத்தில் எஃப்டிஐ, அதாங்க சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு. அதைப் பார்த்துப் பயந்தார்கள். இப்போது அனைவரும் ஆன்லைன் வணிக நிறுவனங்களைப் பார்த்துப் பயப்படும் அளவுக்கு ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது.
புத்தகங்கள், மளிகை, ஜூவல்லரி, ஆடைகள், காலணி, மொபைல் என அனைத்தையும் ஆன்லைனில் வாங்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் எல்லா வணிக நிறுவனங்களும் இணையம் மூலம் பொருள்களை விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதற்கு முன்னோடியாக அமேசான் (அமெரிக்கா), அலிபாபா (சீனா) உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஃபிளிப்கார்ட்டைச் சொல்லலாம்.
ஆரம்பம்
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகிய இருவரும் 2007-ம் ஆண்டு ஆரம்பித்தார்கள். இருவரும் டெல்லி ஐஐடியில் படித்தார்கள். அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள். பின்னர் வெளியேறி 4 லட்ச ரூபாய் முதலீட்டில் பிளிப்கார்ட்டைத் தொடங்கினார்கள்.
ஆரம்பத்தில் புத்தங்களை மட்டுமே விற்று வந்தார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் leaving microsoft to change the world என்னும் புத்தகத்தை முதன்முதலில் வாங்கியுள்ளார்.
பிஸினஸ் செய்வதற்கு முதலீடு தேவை இல்லை, ஐடியா மட்டுமே போதும் என்பதற்கு இவர்கள் சரியான உதாரணம். இவர்களது ஐடியாவைப் பார்த்து வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றன. முதல் 18 மாதங்களுக்குத் தங்களுக்கான சம்பளத்தை இவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை.
கிரெட் கார்ட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பர்கள் மட்டுமே ஆன்லைன் பொருள்களை வாங்க முடியும் என்பது தடையாக இருந்துவந்தது. அதனால் கேஷ் ஆன் டெலிவரி திட்டத்தை 2010-ம் ஆண்டு கொண்டுவந்தார்கள். பொருளை ஆர்டர் செய்துவிட்டுத் தேவை இல்லை என்று சொல்லலாம், வீடு பூட்டியிருக்கலாம் எனப் பல ரிஸ்க் இருந்தாலும் பன்சால் ஜோடி துணிந்தது. இது நிறுவனத்துக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.
முதலீடு திரட்டல்
பிஸினஸ் வளர்வதற்கு வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களிடம் பேசி நிதி திரட்டினார்கள். 2009-ம் ஆண்டு 10 லட்சம் டாலர் முதலீட்டை ஆக்செல் பார்ட்னர் நிறுவனம் பிளிப்கார்டில் முதலீடு செய்தது. தவிர டைகர் குளோபல், நாஸ்பர், மார்கன் ஸ்டேன்லி உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிளிப்கார்டில் முதலீடு செய்திருக்கின்றன.
கடந்த ஏழு வருடங்களில் 176 கோடி டாலர் அளவுக்கு ஃபிளிப்கார்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. உலகளவில் அதிகளவு முதலீட்டை திரட்டிய இந்திய நிறுவனம் பிளிப்கார்ட்தான்.
வளர்ச்சி
திரட்டிய முதலீட்டை பிஸினஸில் முதலீடு செய்வது ஒரு வகையான வளர்ச்சி என்றால், நிறுவனங்களைக் கையகப்படுத்தி வளர்வதும் இன்னொரு வகையான வளர்ச்சி. இன் ஆர்கானிக் குரோத் என்பார்கள். ஃபிளிப்கார்ட் இந்த வேலையையும் செய்து வருகிறது.
மிக சமீபத்தில் 2,000 கோடி ரூபாய் கொடுத்து மிந்த்ரா டாட் காம் Myntra.com நிறுவனத்தை வாங்கியது.
2012-ம் ஆண்டு லெட்ஸ்பை (Letsbuy.com) என்னும் நிறுவனத்தை வாங்கியது. இது தவிர இன்னும் சில நிறுவனங்களையும் ஃபிளிப்கார்ட் வாங்க இருக்கிறது.
இப்போது ஃபிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும் என்று விளம்பரப்படுத்திப் பொருள்களை விற்க ஆரம்பித்திருக்கிறது. இப்படி விற்பதால் அதிக அளவு தள்ளுபடி கொடுக்க முடிவதால் மோட்டோ நிறுவன செல்போன்களை ஃபிளிப்கார்ட்டில் வாங்க கூட்டம் அலைமோதியது. சமீபத்தில் சீனாவின் Xiaomi Mi3 செல்போன் சில வினாடிகளில் விற்றுத் தீர்ந்தது. இதை அறிமுகப்படுத்திய அன்று ஃபிளிப்கார்ட் இணையதளம் கொஞ்சம் ஆடித்தான் போனது.
6000 கோடி ரூபாய் (2013-14) அளவுக்கு வருமானம் இருந்தாலும் ஃபிளிப்கார்ட் இன்னும் லாப பாதைக்குத் திரும்பவில்லை. இது குறித்து கேட்டதற்கு, “லாபம் ஒரு விஷயமே இல்லை. என்றைக்கு விரிவாக்கப் பணிகளை நிறுத்துகிறோமோ அப்போதே லாப பாதைக்குத் திரும்பிவிடலாம். ஆனால் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது” என்கிறார் அதன் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் பன்சால்.
4 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 42,000 கோடி
ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
15 கோடிக்கும் மேலானவர்கள் இணையத்தைப் பயன்படுத்தினாலும், இதில் 10 சதவீதம் நபர்கள்தான் ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குகிறார்கள். ஆன்லைன் வணிகம் 2020-ம் ஆண்டு 7,000 கோடி டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது 2020-ல் ஃபிளிப்கார்ட் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும், லாப பாதையில் திரும்பி இருக்கும். சிறந்த தொழில்முனைவோராக உயர்வது எப்படி இருப்பது என்று ஐஐஎம் கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால்...
ஃபிளிப்கார்ட் யாரும் செய்யாததைச் செய்யவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஆன்லைன் வணிகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பிளிப்கார்ட் ஒரு எர்லி பேர்டு. அது மட்டுமல்லாமல் சரியான சமயத்தில் வந்த பேர்டும்கூட.

இவன் வேற மாதிரி

எல்லாத்தையும் நம்மால நேரடியா சொல்ல முடியாது. சொல்லாத மாதிரி சொல்வோம். அது புரியாத மாதிரி புரியும். இருக்கு ஆனா இல்ல ரகம்தான். பக்கத்துல உள்ள ஆளைப் பத்தி ஏதாவது பேசுணும்னா அமெரிக்காவுல உள்ள ஆளப் பத்தி பேசுற மாதிரி பாவ்லா பண்ணிட்டு, சும்மா டஜன் கணக்கா என்ன என்னமோ அவுத்துவிடுவோம்.
பக்கத்துல இருக்குற நம்மாளு அதுக்கு ஜால்ராகூட அடிப்பார். ஆனால் அவராலே தன்னப் பத்திதான் கதை போகுதுன்னு கண்டே பிடிக்க முடியாது. இதுக்கெல்லாம் அவார்டு ஏதாவது கொடுத்தா உலகத்துல வேற எந்த நாடும் நம்மை ஜெயிக்கவே முடியாது. நம்மாளுக இதுல பயங்கர ஸ்ட்ராங்க். பில்டிங் மட்டுமில்லங்க; பேஸ்மெண்டும்தான்.
அஞ்சான்: இவனுக்கு எதைப் பற்றியும் கவலையே கிடையாது. யார் என்ன சொன்னாலும் அதை சட்டையே பண்ணாம இவன் பாட்டுக்கு இவன் இஷ்டத்துக்குப் போயிட்டே இருப்பான். எத்தனையோ பொண்ணுங்க பின்னாடி போய் நூல் விட்டுப் பார்ப்பான், ஆனால் எல்லாருட்டயும் பல்பு மட்டும்தான் வாங்கியிருப்பான். அவன்ட்ட கேட்டால் செம மாஸ் மாமூன்னு ரொம்ப கூலாச் சொல்வான். செருப்படி வாங்கினா கூட சுவீட் வாங்குன மாதிரி க்யூட்டா காமிச்சிக்குவான். இந்த மாதிரி பையன்களை அஞ்சான்னு அசால்ட்டா சொல்றாங்க அவனோட ஃப்ரண்ட்ஸ்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம்: எக்ஸாமைக் கிலோக் கணக்கான பேப்பரில் எழுதியிருப்பாங்க. ஆனால் பூதக் கண்ணாடியே வைச்சுப் பார்த்தாலும் அதில் ஒரு விஷயம்கூடத் தேறாது. பிரதமரப் பத்திக் கேள்வி கேட்டிருந்தால், அவுங்களுக்குத் தெரிந்த அடப்பிரதமனப் (பாயாசம்) பத்தி எழுதிக்கொண்டே போவார்கள். அது நீயா நானா மாதிரி நீண்டுகிட்டே போகும். எப்போ முடியும்னு யாருக்குமே தெரியாது. இப்படி எழுதப்பட்ட எக்ஸாம் பேப்பரை எல்லாரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம்னு சொல்றாங்களாம்.
முண்டாசுப்பட்டி: தம்பிக்கு இடம் பொருள் ஏவலே கிடையாது. மனசுக்குப் பிடிச்ச பொண்ண எங்க பார்த்தாலும் காதலிக்க ஆரம்பிச்சிருவார். ஆஸ்பத்திரி, சுடுகாடு இப்படிப் பார்க்கிற இடங்களில் எல்லாம் கண்ணுக்குக் குளிர்ச்சியான, கலரான பொண்ணு கிடைச்சா போதும் மனசுக்குள்ள டூயட் பாடிட்டே, அந்தப் பொண்ணு கூட ஆஸ்திரேலியாவிலயோ ஹாங்காங்லயோ ட்ரீம் சாங்குங்கு ஸ்டெப் போடுற பையன் இவர். என்ன ஒண்ணு இவருக்கு ஃபோட்டோன்னா அலர்ஜி. யாராவது ஒரு பொண்ணு சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கலாம்னு சொன்னா போதும், தம்பி பதுங்கிருவார்.
ஜிகர்தண்டா: இவர் நம்ம வடிவேலு மாதிரி. ஊருக்குள்ள பெரிய பெரிய ரவுடிக்கெல்லாம் தலைவன் மாதிரி பீத்திக்குவார். ஆனா பார்ட்டி உண்மையில் சரியான தொடைநடுங்கி. ஏதாவது பிரச்சினைன்னா செமயா ஊடு கட்டுவார். ஆனால் களத்துல இறங்க வேண்டிய நிலைமை வந்துச்சுன்னா போதும் பார்ட்டி எப்படித்தான் எஸ்கேப் ஆகுறார்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு ஸ்பீடா பறந்துருவார். சும்மா புழுதி மாதிரி கண்ணு முன்னாலயே காணாமப் போயிருவார்.
சதுரங்க வேட்டை: இவர் விதவிதமா ஏமாத்துவார். அம்மாவுக்கு சீரியஸ்னு புரபஸர்ட்ட பொய் சொல்லி காசு வாங்கி ஃப்ரண்டோஸோட ஜாலியா நூன் ஷோ போயிருவார். எக்ஸாம் ஹாலுக்குப் போனாப் போதும். டெஸ்க பார்த்து எழுதியே ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸாயிருவார். எக்ஸாமினர்ட்ட போயி மூலையில உள்ள மோகனா உங்க ஃபோட்டாவை தன்னோட மொபைலில் ஸ்கீர்ன்சேவரா வச்சிருக்குன்னு ஒரு பிட்ட போடுவார். பிறகென்ன எல்லாரும் ரொம்ப ஃப்ரியா பிட் அடிக்கலாம். எக்ஸாம் முடிஞ்ச அரை மணி நேரம் கழிச்சுதான் எக்ஸாமினருக்கு என்ன நடந்ததுன்னே புரிஞ்சிருக்கும். அந்த அளவுக்குப் பேசிப் பேசியே ஆட்கள உஷார் பண்ணுற ஜகஜ்ஜால கில்லாடி இவர்.

காதல் முக்கியமா? காதலி முக்கியமா?

காதல் பற்றி இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றன. ஒன்று: அது தெய்வீகமானது, காலத்தால் அழியாதது, மரணத்தால் மறந்துவிடாதது, பிறவிக்குப் பிறவி தொடர்ந்து வருவது. இது காதலர்களின் பார்வை. இரண்டு: அது பொய்யானது. இளம் மனங்களை ஆக்கிரமித்து அலைக்கழிக்கும் ஒரு மாயை அது. பெரும் துன்பத்தையும் பேரழிவையும் தரவல்லது. இது பெற்றோரது பார்வை. உண்மையில் இவை இரண்டுமே தவறான பார்வைகள்.
காதல் என்று அழைக்கப்படும் இந்த உணர்வு மிகவும் வலிமை வாய்ந்த ஆழ்மனச் சக்தி. மனிதன் வளர்ந்துகொண்டிருக்கிறான். அவனுடைய பரிணாம வளர்ச்சி இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. காதல் உணர்வு இந்த அக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறப்பைப் போன்றது இது. மனித மனத்தில் தன்னுணர்வு தீவிரம் அடைந்து சுயம் விழித்தெழும் முறைபாட்டில் இந்த உணர்வு பெரும் முக்கியத்துவம் கொண்டது. இந்த வலிமை மிகுந்த சக்தியின் ஆதிக்கத்திற்கு இளையவர்கள் ஆட்படும்போது பெற்றோர்கள் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் வல்லமை இன்றிக் குழப்பத் திற்கு ஆட்படுகிறார்கள். அவர்கள் ஏதோ பெரும் தவறு செய்வதாகக் கருதி அதை ஆட்சேபிக்கி றார்கள்.
காதல் வயப்பட்ட நிலையில் ஒரு பக்கம் மனத்தின் ஆழத்திலிருந்து கிளர்ந்தெழும் மகிழ்ச்சியும், மறுபுறம் ஆழமான வேதனையும் மாறி மாறி அலைக் கழிக்கும் போது இளை ஞர்கள் தத்தளிக் கிறார்கள். சமூகப் பொறுப்பு சிறிதும் இல்லாமல், வெறும் வியாபாரம் மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள திரைப்படங்களும், வியாபாரப் பத்திரிகைகளும் காதலை ஒரு வணிகச் சாதனமாகப் பயன்படுத்துகின்றன. இந்தப் பின்னணியில் காதலின் உண்மையான முக்கியத்துவம் அறிந்துகொள்ளப்படாமல் போகிறது. அக வளர்ச்சியில் காதல் வகிக்கும் பங்கு பற்றி இப்போது இருக்கும் புரிதல் முற்றிலும் தவறானது என்பதைப் புரிந்துகொண்டாலே போதுமானது. இந்த விஷயம் பற்றிய புதிய சிந்தனைக்கு இது வழிவகுக்கும்.
வாசகர் கேள்விகளுக்கான பதில்கள்
1. நான் 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன். இந்த வயதில் வருவது காதல் இல்லை ஒருவித Attraction னு சொல்லுவாங்க. என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் என்னாலயும் காதல் பண்ணாமல் இருக்க முடியலை. நான் பத்தாவது படிக்கும்போது என்னுடன் படிக்கும் பெண்ணை காதலித்து ஏமாந்தவன். பிரச்சனை என்னவென்றால், நான் மீண்டும் என்னுடன் பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அக்காதலை தவிர்க்க நினைக்கின்றேன். ஆனால் என்னால் இயலவில்லை. எனது பள்ளி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக இருக்கும் அக்காதலை தவிர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?
காதல் என்னும் உணர்வு அன்பின் ஒரு விதமான வெளிப்பாடு. நமக்கு நம் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது என்பது முக்கியம். நம்மை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதபோதுதான் இன்னொருவர் நம்மை ஏற்றுக்கொள்வது முக்கியமாகப் போய்விடுகிறது. உங்களை உங்கள் குற்றம் குறைகளோடு உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? அன்பு செலுத்த முடிகிறதா? முடிகிறது என்றால் உங்களால் அந்தப் பெண் இல்லாமல் வாழ முடியும். நீங்கள் உங்களுக்குக் கொடுத்துக்கொள்ளாததை வேறு யார் கொடுத்து விட முடியும்? உங்கள் மீது நிபந்தனைகள் அற்ற அன்பு செலுத்துங்கள். பிரச்னை தீரும்.
2. எனக்கு 24 வயது ஆகிறது. என்னுடைய பழைய காதல் முறிந்து ஒரு வருடம் ஆகிறது. அந்தக் காதல் முறிவு ஏற்படுத்திய காயத்தால் மறுபடியும் எப்போதும் காதலிக்கவே கூடாது என்று முடிவு எடுத்திருந்தேன். ஆனால், இப்போது என் பணியிடத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. ஆனால், அவளுக்கும் ஏற்கெனவே ஒரு காதல் இருந்திருக்கிறது. அதை அவள் என்னிடம் சொல்லியதில் இருந்தே அவள் மீதான என் காதல் தொலைந்துவிட்டதைப் போல் உணர்கிறேன். அவளைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் இந்த உணர்வு என்னை விட்டு மறையாது என்று தோன்றுகிறது. அவளை மறந்துவிடுவதா, இல்லை என்ன செய்வது என்று ஆலோசனை கூறுங்கள்.
உங்களுக்குக் காதலைவிடக் காதலி முக்கியம் என்று படுகிறது. இந்த மனப்பாங்கு மனத்தில் முரண்பாட்டையும் சிக்கலையுமே விளைவிக்கும். காதல் திருமணங்கள் மணமுறிவுக்கு உள்ளாவதற்கு இது ஒரு முக்கியமான காரணம்.
நீங்கள் இப்போது இருக்கும் மனநிலை இரட்டைக் கட்டு (double bind) என்னும் ஒரு மனநிலை. இருந்தாலும் தொல்லை, விட்டாலும் வேதனை என்பது போன்ற நிலை இது. சிந்தனையளவில் இந்த இரட்டைக் கட்டு நிலைக்குத் தீர்வு கிடையாது, மனத்தை ஒரு சுழலுக்குள் இழுத்துச் சென்று செருகிவிடக்கூடிய ஆபத்து இதில் இருக்கிறது.
உண்மையில் உங்களுக்குள் நீங்களே அறியாமல் நடந்துகொண்டிருப்பது இதுதான். உங்கள் மனத்தில் ‘காதலி’ என்ற ஒரு பிம்பம் இருக்கிறது. அதை அனுபவம் கொள்வதற்கு வெளியுலகில் ஒரு பெண் தேவை. அந்த பிம்பம் உங்கள் சுயமனப் படத்தின் பகுதியாகும். ’காதலி’ என்னும் அந்தப் பிம்பம் இல்லாமல் உங்கள் சுயமனப் படம் முழுமையற்றதாகிவிடும். அதனால் உங்களுக்கு ஒரு காதலி தேவை என்று ஆகிவிடுகிறது. இந்த மனநிலையில் இருந்து விடுபடாத வரையில் ஒரு பெண்ணுடன் நீங்கள் வாழும் வாழ்க்கை முரண்பாடு நிறைந்ததாகவே இருக்கும்.
இப்போது உங்களுடன் பணிபுரியும் அந்தப் பெண்ணை நீங்கள் திருமணம் செய்துகொள்வதா வேண்டாமா என்பதல்ல விஷயம். உங்கள் மனச் சிக்கலில் இருந்து நீங்கள் விடுபடாமல் திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் மனத்தளவில் அந்தப் பெண்ணை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் இருவரின் வாழ்க்கையும் வேதனை நிறைந்ததாக ஆகிவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
திருமணம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னால் உளவியல் ஆலோசகர் ஒருவரை நீங்கள் சந்தித்து ஆலோசனை பெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று படுகிறது.
- ஆனந்த் கிருஷ்ணா, 
உளவியல் ஆலோசகர் 

Thursday, 18 September 2014

இங்கிதம் தெரிந்தவரா நீங்கள்?

1

எடிகட் (Etiquette) என்றால் இங்கிதம் என்று சொல்லலாம். பொதுவாகவே இது அனைவருக்கும் தேவை. ஆனால் குறிப்பாகச் சில பதவிகளுக்கு அது மிக மிக அவசியம்.
எனவே வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் யாருக்கு போதிய எடிகட் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கவும் சைகோமெட்ரிக் தேர்வுகள் பயன்படுத்தப்படுகின்றன.
எடிகட் என்றால்?
பிறர் பார்க்கும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான் எடிகட். அதாவது நம் நடவடிக்கை எப்படி இருக்கிறது, நம் பேச்சு எப்படி இருக்கிறது என்பதுதான். பொதுவாக எடிகட் எனும்போது நல்ல எடிகட்களைத்தான் குறிப்பிடுகிறோம். ‘’அவர் எடிகட் தெரிஞ்சவர்’’ என்றால் அவருக்கு நல்ல எடிகட்கள் உள்ளன என்றுதான் அர்த்தம்.
நல்ல எடிகட் இருந்தால் அவர் ஓர் உத்தமர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. நீங்கள் மனதளவில் சிறந்தவராக இருந்தாலும் பிறரிடம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால் உங்களுக்கு எடிகட் போதவில்லை என்றுதான் அர்த்தம். மாறாக மனதில் நீங்கள் ஒரு வில்லனாகவே இருந்தாலும் வெளிப்படையாக நடந்து கொள்ளும் முறையில் மிகவும் இங்கிதமானவராக இருந்தால் உங்களுக்கு எடிகட் இருக்கிறது என்றுதான் பொருள்.
கம்பெனிக்கான இங்கிதம்
வெளிப்படையாகவே பேசுவோமே. நிறுவனங்களைப் பொறுத்தவரை நீங்கள் மனதளவில் உத்தமராக இருப்பதைவிட, எடிகட் நிறைந்தவராக இருப்பதைத்தான் அதிகம் விரும்பும். ஏனென்றால் சமுதாயத்தைப் பொறுத்தவரை நீங்கள்தான் அந்த நிறுவனத்தின் பிரதிநிதி.
எனவே எடிகட் உள்ளவர் களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஒவ்வொரு நிறுவனமும் ஆசைப்படுவது உண்மை. இதை அறிவதற்காகவும், சைகோமெட்ரிக் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆக நாகரிகமாக நடந்துகொள்வது என்பது இன்று மிக முக்கியமான ஓர் அம்சம்.
இங்கிதக் கேள்விகள்
“வாடிக்கையாளரை முன்தினம் மாலை சந்திப்பதாக அறிவித்திருந்தீர்கள். ஆனால் ஒரு அவசர வேலை காரணமாக அவரை அன்று சந்திக்க முடியவில்லை எனில் என்ன செய்வீர்கள்?
அ) அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அடுத்த சந்திப்பு எப்போது என்பதை உறுதிப்படுத்துவேன்.
ஆ) அவராகவே என்னைத் தொடர்புகொள்ள வாய்ப்பு உண்டு. அப்படித் தொடர்பு கொள்ளும்போது என்னால் வர முடியாமலிருப்பதற்கு வருத்தம் தெரிவிப்பேன்.
இ) ‘எதிர்பாராத காரணங்களால் சந்திக்க இயலவில்லை’ என்று மின்னஞ்சலில் செய்தி அனுப்புவேன்.
வாடிக்கையாளரின் கோணத்திலிருந்து பார்த்தால் இரண்டாவது மற்றும் மூன்றாவது பதிலின்படி நீங்கள் நடந்து கொள்வது நல்ல எடிகட் அல்ல. இவற்றை அவரால் முழுமையாக ஏற்க முடியாது.
இப்போது அடுத்த கேள்வி. பல நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளோடு ஒரு பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. அவர்களில் ஒருவர் உங்களை ஒரு கேள்வி கேட்கிறார். பதிலளிக்கும்போது உங்கள் பார்வை எப்படி இருக்கும்?
அ) கேள்வி கேட்டவரைப் பார்த்தபடிதான் பதிலளிப்பேன்.
ஆ) அது ஒரு விஷயமே அல்ல. சரியான பதில் வேண்டும் அவ்வளவுதானே? எனவே தரையில் பார்த்தபடிகூட பதிலளிப்பேன்.
இ) பதிலளிக்கத் தொடங்கும்போது கேள்வி கேட்டவரைப் பார்ப்பேன்.அந்தப் பதிலைத் தொடர்ந்து கூறும்போது எதிரிலுள்ள மற்றவர்களையும் பார்ப்பேன்.
இந்த மூன்றாவது பதில்தான் எடிகட் நிறைந்த செயல்பாடு. தவிர தரையில் பார்த்துக் கொண்டு பேசுவது பலவித சந்தேகங்களை ஏற்படுத்தும். சில சமயம் எதிராளியைத் தவிர்க்க நினைக்கும்போதும், அவரிடம் அச்சம் உண்டாகும்போதும்கூட தரையைப் பார்த்தபடி பேசுவோம். இவையும் எதிர்மறை இமேஜைதான் உண்டு பண்ணும்.
ஒரு வாடிக்கையாளர் உங்களை நோக்கி வருகிறார். உங்கள் எதிரில் மூன்று காலி நாற்காலிகள் உள்ளன. என்ன செய்வீர்கள்?
அ) கண் ஜாடை மூலமாகவே அவரை உட்காரச் சொல்வேன்.
ஆ) எதிரில் இருக்கும் மூன்று நாற்காலிகளைச் சுட்டிக் காட்டி “உங்களுக்கு வசதியான நாற்காலியில் அமருங்கள்’’ என்பேன் பவ்யமாக.
இ) ஒரு குறிப்பிட்ட நாற்காலியைச் சுட்டிக் காட்டி “தயவுசெய்து உட்கார்ந்து கொள்ளுங்கள்’’ என்பேன்.
மேலோட்டமாகப் பாரத்தால் இந்த மூன்றுக்குமே பெரிய வித்தியாசம் இல்லாததுபோல தோன்றலாம். மூன்றிலுமே நாகரிகமாகத்தானே நடந்து கொள்கிறோம்? அதாவது உட்காரச் சொல்கிறோம்.
ஆனால் கண் ஜாடை மூலம் உணர்த்துவது என்பது கொஞ்சம் ‘சீப்’பாகத் தன்னை நடத்துவதான எண்ணத்தை எதிரில் இருப்பவருக்கு ஏற்படுத்தலாம்.
எனவே உங்கள் தேர்வு முதல் விடையாக இருந்தால், நீங்கள் போதிய எடிகட் இல்லாதவராகக் கருதப்படுவீர்கள்.
மூன்று நாற்காலிகளில் எதில் வேண்டுமானாலும் உட்காரச் சொல்வது வாடிக்கையாளருக்கு ஒரு தற்காலிக சங்கடத்தைத் தரலாம். எதில் உட்காருவது என்று முடிவெடுப்பதில் ஒரு சிறு தயக்கம் ஏற்படக் கூடும்.எனவே மூன்றாவது பதிலில் உள்ள செயல்பாடுதான் எடிகட்டைப் பொறுத்தவரை தேர்ச்சி பெறுகிறது.